Thursday, April 29, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்..........8


எவ்வளவு நாளாம்மா உங்கப்பா குடிக்கறாரு?

பொறந்ததலேர்ந்தே !

என்ன சொல்றீங்க?

மகள் சொன்னாள்.. நான் பொறந்ததலேர்ந்தே .

அப்படின்னா 20 வருஷமாவா?

சீ..சீ.. எனக்கு பதினெட்டு வயசுதான்

கையில் நரம்பை தேடிக்கொண்டே அந்த நர்ஸ் சொன்னாள். (செவிலிகள் சீருடையில் அவ்வளவு அழகாயிருக்கிறார்கள். காதலாகி, கசிந்துருக வேண்டும் போல் இருக்கிறது)

பார்த்தால் ரொம்ப நல்லவராயிருக்கீங்க?(அடிப்பாவி ! நல்லவேளை !) எவ்வளவு கஷ்டம் பாருங்க.. உங்களுக்கு, உங்க வீட்டுக்கு . அப்படி ஏன் நம்ம குடிக்கணும்? சொல்லுங்க.

சிஸ்டர் நீங்களும் குடிப்பிங்களா?

விளையாடாதீங்க சார். பாருங்க. இப்ப உங்க பிள்ளைக்கு கல்யாணம் செய்யணும் . எவ்வளவு ரூபா ஆகும் . நீங்க குடிச்ச காசு இருந்தா?

இப்ப போய் கேட்டால் திருப்பி கொடுப்பாங்களா?

சிஸ்டர் என்று என்னால் வெறும் வார்த்தைக்கு அழைக்கப்பட்டவளுக்கு எஸ். ஜானகியின் குரல். அவள் குரலில் மழலையும் கொஞ்சியது. அவளுக்காகவே இனி குடிக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் நிலையில் இருந்தேன்.

இனிமே நல்ல பிள்ளையா இருக்கணும். சரியா? நான் போன் பண்ணி கேப்பேன்.

இன்னிக்கு நிச்சயமா குடிக்க மாட்டேன் சிஸ்.. சாரி உங்க பேர் என்ன?


-------------------------------------------------------------------------------------------------

நண்பரின் தாயாருக்கு ஹியரிங் எய்டு வாங்க போயிருந்தோம்.. தாயாரின் செவித்திறனை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்டார்கள்.

எங்கயிருந்து வர்றீங்கம்மா?

என் மவன் வீட்டுலேர்ந்து.

எந்த ஊர்?

நானு, என் மவன் எல்லாரும் காரைகுடிதான்

எப்ப ஊருக்கு போவீங்க?

ஏன் ?என் மவன் வீட்டுல எத்தனை நாள் வேணா இருப்பேன் . என்னை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது( மருமகளை பார்த்துக் கொண்டே)

உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?

இதோ இவன் மட்டும்தான். ஒரே மவன். அதுக்கப்புறம்தான் அவளுக்கு புருஷன் .

நண்பரின் மனைவி குறுக்கிட்டார். அத்தை உங்களுக்கு காது நல்லாத்தானே இருக்கு. இப்ப எதுக்கு வெட்டி செலவு?

-------------------------------------------------------------------------------------------------

சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது. அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து) திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம். தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க. ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது. சற்று நேரம் ஆயிற்று. அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள். தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர். இளமை வென்றது. ஆட்டோ வந்தது. மனைவி முதலில் ஏறினாள். மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்ணை நம்பாதே.." அவர்கள் போய் விட்டர்கள்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா? கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள். காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.

அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார்.
"தாய் தன் மகன் உருவில், ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்) வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.


---------------------------------------------------------------------------------------

எவ்வளவு அழகு அவள்
என்றேன்
ஆமாம் அவன் அழகுக்கு
யாரும் ஈடு இல்லை
என்றாள் மனைவி

120 comments:

  1. தல நலம் தானே? முதல் அனுபவம் உங்களுக்கா என்ன? Hope you are well

    கவிதை நேற்று கேபிள் பதிவிலேயே எழுதி இருந்தீர்கள்; படிதேன்.

    இந்த வாரம் - 3 நாள் உங்க ஊர் (தஞ்சை) செல்கிறேன்

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு மணிஜீ. இப்ப உடம்பு சரியாயிடுச்சா?

    //சிஸ்டர் என்று என்னால் வெறும் வார்த்தைக்கு அழைக்கப்பட்டவளுக்கு எஸ். ஜானகியின் குரல். அவள் குரலில் மழலையும் கொஞ்சியது. அவளுக்காகவே இனி குடிக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் நிலையில் இருந்தேன்.//

    ஹா ஹா!!!!!!

    ReplyDelete
  3. உங்களுக்கு சவூதியில் நிரந்தர குடியுரிமை வாங்கித்தர நண்பர் செ.ச வை வேண்டுகிறேன்.!! :))

    ReplyDelete
  4. நல்லா பேசி இருக்கீங்க..... :-)

    ReplyDelete
  5. \\எவ்வளவு அழகு அவள்
    என்றேன்
    ஆமாம் அவன் அழகுக்கு
    யாரும் ஈடு இல்லை
    என்றாள் மனைவி//

    இங்கையும ??

    ReplyDelete
  6. சரீங்க...

    பெண்ணியமும் இல்லாம ஆணியமும் இல்லாம இது என்ன ஈயம்... புதுசா இருக்கே?

    ReplyDelete
  7. கவிதை நேத்தைக்கே கேபிள் திரையரங்கில் வெளியிடப்பட்டு அமோக ஆதரவை பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. உங்களின் சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  9. போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக்கூட்டம்!

    நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

    இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில், சென்னை.

    நிகழ்ச்சி நிரல்:

    தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


    கண்டன உரை:

    தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

    திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.

    திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.

    திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.


    ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!

    அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

    ReplyDelete
  10. சைதாப்பேட்டை பேருந்துநிலைய காட்சி சித்தரிப்பு க்ளாஸ்...

    இன்னும் கொஞ்சம் கவனித்துப் பார்த்திருந்தால் அல்லது அந்த தாயிடம் விசாரித்துப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்திருக்கும். அம்மகன் தாய்க்கு ஒரே மகனாக இருப்பான். இரண்டு மூன்று மகன்கள் இருந்திருந்தால் இவ்வளவு பொஸஸிவ்னெஸ் அந்த தாய்க்கு இருந்திருக்காது. மகனை குற்றம் சொல்ல எதுவுமில்லை. பொண்டாட்டியை கொஞ்சாமல் வேறு யாரை அவனால் கொஞ்சமுடியும்? :-)

    தாய்க்கு ஒரே மகனாக பிறக்கும் பிள்ளைகள் ரொம்ப பாவம்! :-(

    ReplyDelete
  11. அனைத்துப் பகுதிகளும் சுவாரசியம்.

    ReplyDelete
  12. உங்கள் பேச்சு எப்போதுமே சுவாரசியம்!

    ReplyDelete
  13. சுஜாதா கருத்தைச்சேர்த்தது பஞ்ச்.
    ஆழமான உண்மைகள்.

    ReplyDelete
  14. //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    உங்களுக்கு சவூதியில் நிரந்தர குடியுரிமை வாங்கித்தர நண்பர் செ.ச வை வேண்டுகிறேன்.!! :))//

    ரைட்டு ஷங்கர்ஜி.

    ReplyDelete
  15. /செ.சரவணக்குமார் said...
    //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    உங்களுக்கு சவூதியில் நிரந்தர குடியுரிமை வாங்கித்தர நண்பர் செ.ச வை வேண்டுகிறேன்.!! :))//

    ரைட்டு ஷங்கர்ஜி//

    சரவணன் ! நீங்க சொன்ன அந்த மலையாள செவிலியின் முகம் கண்ணில் நிற்கிறது.

    ReplyDelete
  16. வித்யா..இது ஒருவேளை அர்த்தநாரியமாய் இருக்குமோ?

    ReplyDelete
  17. லக்கி நீங்கள் சொல்வது போல் ஒரே பிள்ளைகளின் பாடு கொஞ்சம் பாவம்தான்

    ReplyDelete
  18. மோகன்குமார்..நலமே..நம்மூருக்கு போய் வாருங்கள்..

    ReplyDelete
  19. ?? கண்டனக் கூட்டத்தில் தடியடி நடக்காதே?

    ReplyDelete
  20. நல்ல பதிவு....

    ///எவ்வளவு அழகு அவள்
    என்றேன்
    ஆமாம் அவன் அழகுக்கு
    யாரும் ஈடு இல்லை
    என்றாள் மனைவி//

    இதை படித்தால் ஆச்சி மனோரமா இப்படிதான் சொலுவா?

    உங்க அம்மா மட்டும் தான் அம்மா வா எங்க அம்மா என்ன சும்மா...

    ReplyDelete
  21. கண்டனக் கூட்டத்தில் தடியடி நடக்காதே?

    ’’’எவ்வளவு அழகு அவள்
    என்றேன்’’

    இதுக்கு தடியடி நடத்தியே தீறனும்....

    ReplyDelete
  22. நல்லாத்தான் பேத்துறிங்க...

    ReplyDelete
  23. நல்ல பகிர்வு மணிஜீ.

    ReplyDelete
  24. :-))

    சலைன் ஏத்துற கண்டிசன்லையும் சலைவா?

    உம்மை என்ன செய்யலாம் ஓய்?

    இது உம்மை.(பிடித்த பெயராக வாசித்து விட வேண்டாம்) :-)

    உடல் நலம் பத்ரம் பங்காளி. :-(

    ReplyDelete
  25. //வித்யா..இது ஒருவேளை அர்த்தநாரியமாய் இருக்குமோ//

    :)

    ரத்தம் ஒரே நிறம்

    ReplyDelete
  26. //சரவணன் ! நீங்க சொன்ன அந்த மலையாள செவிலியின் முகம் கண்ணில் நிற்கிறது.//

    அடப்பாவிகளா.. நான் எப்பங்க சொன்னேன்? மலையாள செவிலிகளைப் பார்த்ததுகூட இல்லையே மணிஜீ.

    ReplyDelete
  27. சைதாபேட்டைல பார்த்த அந்த அம்மா பாவம்ங்க .நிச்சயம் மனநோய் வந்துடும்.

    ReplyDelete
  28. //செ.சரவணக்குமார் said...

    //சரவணன் ! நீங்க சொன்ன அந்த மலையாள செவிலியின் முகம் கண்ணில் நிற்கிறது.//

    அடப்பாவிகளா.. நான் எப்பங்க சொன்னேன்? மலையாள செவிலிகளைப் பார்த்ததுகூட இல்லையே மணிஜீ//

    உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போனாங்க இல்லை சவுதியில..உங்க நண்பர்கள் கூட அடிச்சுகிட்டாங்களே..கூட வர்றதுக்கு

    ReplyDelete
  29. //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    உங்களுக்கு சவூதியில் நிரந்தர குடியுரிமை வாங்கித்தர நண்பர் செ.ச வை வேண்டுகிறேன்.!! :))


    அங்கதான் குடிக்க உரிமையில்லையே !

    ReplyDelete
  30. //உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போனாங்க இல்லை சவுதியில..உங்க நண்பர்கள் கூட அடிச்சுகிட்டாங்களே..கூட வர்றதுக்கு//

    மணிஜீ...

    மன்னிச்சிடுங்க அண்ணா, எனக்குத்தான் மறந்துருச்சி(6 வது ரவுண்டுல்ல). அது நான் சவுதி வந்த புதிதில் டிரைவிங் லைசன்ஸிற்கு வேண்டி கண் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது நடந்த சம்பவம்.

    அப்போது சொன்ன அந்த செவிலிப்பெண்ணின் முகமா இன்னும் உங்கள் கண்களிலேயே நிற்கிறது? ரைட் மணிஜீ.

    ReplyDelete
  31. // மணிஜீ...... said...

    //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    உங்களுக்கு சவூதியில் நிரந்தர குடியுரிமை வாங்கித்தர நண்பர் செ.ச வை வேண்டுகிறேன்.!! :))


    அங்கதான் குடிக்க உரிமையில்லையே !//

    வெந்த புண்ல வேல் பாய்ச்சுறீங்களேண்ணே.. இருங்க பா.ராவைக் கூப்புடுறேன்.

    ReplyDelete
  32. யாராவது கூப்பிட்டீங்களா?

    சொப்பனம் தட்டுச்சு.. :-)

    //அங்கதான் குடிக்க உரிமையில்லையே//

    யார் சொன்னா?

    பெட்ரோல்ல எழுமிச்சை பிழிஞ்சா போச்சு..நீங்க வாங்க மணிஜி நாங்க பாத்துக்கிறோம்..

    என்ன சரவனா?பார்ட்டியை தூக்கிருவோமா?

    ReplyDelete
  33. எங்கள விட்டுட்டு குடிக்கலாமா?

    ReplyDelete
  34. //பெட்ரோல்ல எழுமிச்சை பிழிஞ்சா போச்சு..நீங்க வாங்க மணிஜி நாங்க பாத்துக்கிறோம்//

    சேர நாட்டோட சேராதீங்கன்னா கேட்டாத்தானே! :)

    ReplyDelete
  35. //சேர நாட்டோட சேராதீங்கன்னா கேட்டாத்தானே!//

    பல்லவ மன்னா,

    தொடங்கியது நீர்தானே...அனுபவியும்.. :-)

    லேப்டாப்பும்,கிளாசுமாக எந்த பார்-எல்லோரும்? நல்லா இருங்கையா,பாவிகளா.. :-)

    ReplyDelete
  36. // பா.ராஜாராம் said...

    யாராவது கூப்பிட்டீங்களா?

    சொப்பனம் தட்டுச்சு.. :-)//

    சாரிண்ணே, தூக்கத்திலிருந்து எழுப்பிட்டேனா?

    //என்ன சரவனா?பார்ட்டியை தூக்கிருவோமா?//

    தூக்கிரலாம்ணே.. விசா அரேன்ஞ் பண்றது என் பொறுப்பு. மணிஜீ சீக்கிரம் ரெடியாகுங்க.

    ReplyDelete
  37. //லேப்டாப்பும்,கிளாசுமாக எந்த பார்-எல்லோரும்? நல்லா இருங்கையா,பாவிகளா.. :-) //

    கற்பனை தறி கெட்டு பறக்குதண்ணே..!

    பெட்ரோலும் கூட எலுமிச்சயும் வெல இங்க அதிகம்ணே!

    பாவிகளா//

    இது ஒண்ணுதாண்ணே மிச்சம்! :))

    ReplyDelete
  38. //லேப்டாப்பும்,கிளாசுமாக எந்த பார்-எல்லோரும்? நல்லா இருங்கையா,பாவிகளா.. :-)//

    இதான் மேட்டரா... ரைட்டு நடத்துங்க.

    ReplyDelete
  39. //தூக்கிரலாம்ணே.. விசா அரேன்ஞ் பண்றது என் பொறுப்பு. மணிஜீ சீக்கிரம் ரெடியாகுங்க.//

    அவசரத்தை பார்த்தா,விசா மணிஜிக்கா உமாவிற்கா சரவனா? ஊரை சுத்தி எதிரிப்பா நமக்கு.. :-)

    ReplyDelete
  40. கறுப்பு நாடா கால் சீசா
    ப்ளாக் பெர்ரி (தமிழ்ல்ல நல்லா
    இருக்காது பா.ரா.)சகிதம் நித்தம்
    நித்தம் நெல்லு சோறு தான் சென்னைல ..

    ம்ம் பெரும் மூச்சி விடாதீங்க ..

    எலுமிச்சம் பழ மேட்டரு சொல்லவே இல்ல :)

    ReplyDelete
  41. //அவசரத்தை பார்த்தா,விசா மணிஜிக்கா உமாவிற்கா சரவனா? ஊரை சுத்தி எதிரிப்பா நமக்கு.. :-)//

    அண்ணே என்ன சொல்றீக.. நான் மணிஜீக்குத்தான் சொன்னேன். அது யாரு உமா, அண்ணியா?

    ReplyDelete
  42. //இது ஒண்ணுதாண்ணே மிச்சம்! :))//

    இதைவிடவா வேறு மிச்சம்?

    மச்சம் என கொண்டாடுங்க மக்கா.(ஆனால் எங்களுக்கு வயிற்றில் அமிலம்:-)

    கடவுளே,

    யாருக்கும் ஏற கூடாது. புஸ்ஸா போகணும்.

    ReplyDelete
  43. என்ன கொடுமை பா.ரா அண்ணே, பக்கத்துலயே இருந்துக்கிட்டு இவ்வளவு நாளா இந்த எழுமிச்சம்பழ மேட்டர எனக்கு சொல்லவே இல்லையே???

    ReplyDelete
  44. சரவணா

    என்னய்யா இப்பிடி இருக்கீரு ?

    உமா வை தெரியாதா ..

    அதான்பா .. ஜெட்செட் டிராவல்ஸ்ல டிக்கெட்டு போட சொல்லி இருக்குல்ல அந்தப் பொன்னுதான்

    ReplyDelete
  45. //கடவுளே,

    யாருக்கும் ஏற கூடாது. புஸ்ஸா போகணும்.//

    அதெல்லாம் எத்தன சாபம் கொடுத்தாலும் இந்த விஷயத்துல பலிக்காது. நம்ம ஊர் டைம் 12 மணிக்கு மணிஜீகிட்ட இருந்து உங்களுக்கு ஃபோன் வரும். தொலைஞ்சீங்க!!!

    ReplyDelete
  46. //கறுப்பு நாடா கால் சீசா
    ப்ளாக் பெர்ரி (தமிழ்ல்ல நல்லா
    இருக்காது பா.ரா.)சகிதம் நித்தம்
    நித்தம் நெல்லு சோறு தான் சென்னைல//

    வாய்யா..

    மூக்குல வேர்த்துருச்சா?

    வாசம் தட்டுனாத்தான் போதுமே.... :-)

    ReplyDelete
  47. சிஸ்டர்-னா டாக்டர்களுக்கு மட்டும் தான்... நமக்கெல்லாம் கிடையாது அண்ணா...
    என்னாது... காதலாகி கசிந்துருகனுமா?? பாத்துண்ணே ரொம்ப கசிஞ்சு... ரொம்ப உருகி... ங்க மானம் போயிடப்போகுது... :-))

    ReplyDelete
  48. இதெல்லாம் சரி.

    மூலவரை காணோமே?

    நர்ஸ் அக்கா..எஸ்கேப்.

    ReplyDelete
  49. // NESAMITHRAN said...

    சரவணா

    என்னய்யா இப்பிடி இருக்கீரு ?

    உமா வை தெரியாதா ..

    அதான்பா .. ஜெட்செட் டிராவல்ஸ்ல டிக்கெட்டு போட சொல்லி இருக்குல்ல அந்தப் பொன்னுதான்//

    நேசன் அண்ணே..
    இதெல்லாம் வேற நடக்குதா?

    ReplyDelete
  50. //இதெல்லாம் சரி.

    மூலவரை காணோமே?

    நர்ஸ் அக்கா..எஸ்கேப்.//

    மணிஜீ இன்னும் முடியலயா? சீக்கிரம் வாங்கண்ணே.

    ReplyDelete
  51. //வாய்யா..

    மூக்குல வேர்த்துருச்சா?

    வாசம் தட்டுனாத்தான் போதுமே.... :-)//

    மாசக் கடைசில கிடக்குற பாட்டில்ல இருக்க மிச்சத்தையெல்லாம் ஊத்தி பாட்டிலை விலைக்கு போட்டு காக்டெயில் அடிக்குற கூட்டம்தானே
    சாமி

    என்னமோ சொல்லுவாங்களே “ நுரையற்ற 90 மில்லிக்கான காசிருந்ததுன்னு “ நீர் தானே அது

    :)

    ReplyDelete
  52. //அடப்பாவிகளா.. நான் எப்பங்க சொன்னேன்? மலையாள செவிலிகளைப் பார்த்ததுகூட இல்லையே மணிஜீ.//

    அதானே பிலிப்பைனி, மிசிரி ன்னு இன்டெர் நேஷனல் லெவல்ல போயிட்டு இருக்கும் போது :)

    ReplyDelete
  53. //என்ன கொடுமை பா.ரா அண்ணே, பக்கத்துலயே இருந்துக்கிட்டு இவ்வளவு நாளா இந்த எழுமிச்சம்பழ மேட்டர எனக்கு சொல்லவே இல்லையே???//

    இதுல ஆதங்கம் வேறயா. நல்லாயிருங்க.

    ReplyDelete
  54. என்ன ஒருத்தரையும் காணோம்?

    ReplyDelete
  55. //மணிஜீ இன்னும் முடியலயா? சீக்கிரம் வாங்கண்ணே.//

    அண்ணன் எங்க போயிருக்காரு?

    ReplyDelete
  56. //அடப்பாவிகளா.. நான் எப்பங்க சொன்னேன்? மலையாள செவிலிகளைப் பார்த்ததுகூட இல்லையே மணிஜீ.//

    மிசிரி பிலிபைனியா

    பலப்பல மேட்டர் வெளிய வரும் போல இருக்கே

    கலகல கலை ... மட்டுமே கலை தொடு தொடு தொடு எனை - இப்படிக்கு பாட்டில்

    ReplyDelete
  57. //அதெல்லாம் எத்தன சாபம் கொடுத்தாலும் இந்த விஷயத்துல பலிக்காது. நம்ம ஊர் டைம் 12 மணிக்கு மணிஜீகிட்ட இருந்து உங்களுக்கு ஃபோன் வரும். தொலைஞ்சீங்க!!!//

    ஆமா சரவனா...

    அப்பா இன்னும் வரலைன்னு- சொல்ல வைக்க மகன் கூட ஊரில் இருக்கான்.நீங்க சொல்லிருங்க.சரியா?

    ஆனால் அரபிக்ல சொல்லுங்க..12 மணிக்கு மேல நாம என்ன பாசை பேசுனாலும் மணிஜிக்கு புரியும்.அவர் தாய்மொழி பேசினாலும் நமக்குதான் புரியாது. :-)

    ReplyDelete
  58. //மிசிரி பிலிபைனியா

    பலப்பல மேட்டர் வெளிய வரும் போல இருக்கே //

    அப்போ நானாத்தான்.....

    ReplyDelete
  59. //ஆனால் அரபிக்ல சொல்லுங்க..12 மணிக்கு மேல நாம என்ன பாசை பேசுனாலும் மணிஜிக்கு புரியும்.அவர் தாய்மொழி பேசினாலும் நமக்குதான் புரியாது. :-)//

    லொள்ளா பேசுறீங்க இன்னைக்கு
    கச்சேரி “ ஜலதரங்கத்துல ஆரம்பிச்சு
    எங்க முடியப் போகுதோ “

    ReplyDelete
  60. சரவணன்ஜீ எங்கே இருக்கீங்க?

    ReplyDelete
  61. அக்பர், நீங்களுமா?

    சவுதி,நைஜீரியாவுல இருந்து இன்னைக்கு மணிஜிக்கு காய்ச்சி ஊத்துராங்கலாமே?

    ராகவன் அண்ணாச்சி,,,வாங்கண்ணே.கை குறையுது.

    ReplyDelete
  62. அடப்பாவி அக்பர்... எங்கயிருந்துய்யா வந்தீங்க? இல்லாததும் பொல்லாததும் சொல்லிக்கிட்டு.
    ஆமா மிசிரி, பிலிப்பைனின்னா என்ன?

    ReplyDelete
  63. //அக்பர், நீங்களுமா?//

    அண்ணே பதிவுலையும் க்ளாஸ் இருக்கு.
    கமெண்ட்ஸ்லையும் க்ளாஸ் இருக்கு. அதான் வந்து பார்த்துட்டு போகலாமேன்னு.

    ReplyDelete
  64. //அக்பர், நீங்களுமா?

    சவுதி,நைஜீரியாவுல இருந்து இன்னைக்கு மணிஜிக்கு காய்ச்சி ஊத்துராங்கலாமே?

    ராகவன் அண்ணாச்சி,,,வாங்கண்ணே.கை குறையுது.//

    முடியல பா.ரா அண்ணே.. இந்த வீக் எண்ட் மணிஜீ புண்ணியத்துல களை கட்டுது. நம்ம ஊர்ல வீக் எண்டுன்னா அர்த்தமே வேற.

    ReplyDelete
  65. //அடப்பாவி அக்பர்... எங்கயிருந்துய்யா வந்தீங்க? இல்லாததும் பொல்லாததும் சொல்லிக்கிட்டு.
    ஆமா மிசிரி, பிலிப்பைனின்னா என்ன?//

    அய்யடா. சார் எந்த பரையுது.

    மிட்சுபிசி , டொயாட்டா தெரியுமா தலை.

    ReplyDelete
  66. //அப்பா இன்னும் வரலைன்னு- சொல்ல வைக்க மகன் கூட ஊரில் இருக்கான்.நீங்க சொல்லிருங்க.சரியா?

    ஆனால் அரபிக்ல சொல்லுங்க..12 மணிக்கு மேல நாம என்ன பாசை பேசுனாலும் மணிஜிக்கு புரியும்.அவர் தாய்மொழி பேசினாலும் நமக்குதான் புரியாது. :-)//

    அஸ்கு புஸ்கு.. இந்தக் கதையே வேணாம். 6 மணிக்கு மேல எத்தன கோடி கொடுத்தாலும் மணிஜீகிட்ட ஃபோன்ல பேசவே மாட்டேன்.

    ReplyDelete
  67. //லொள்ளா பேசுறீங்க இன்னைக்கு
    கச்சேரி “ ஜலதரங்கத்துல ஆரம்பிச்சு
    எங்க முடியப் போகுதோ“//

    வரட்டும் வா,மக்கா.சாவு ஒரு தடவைதானே? :-)

    ReplyDelete
  68. //அஸ்கு புஸ்கு.. இந்தக் கதையே வேணாம். 6 மணிக்கு மேல எத்தன கோடி கொடுத்தாலும் மணிஜீகிட்ட ஃபோன்ல பேசவே மாட்டேன்.//

    நீங்க பேசவேணாம். உங்க அனுபவம் பேசுது.

    ReplyDelete
  69. //அய்யடா. சார் எந்த பரையுது.

    மிட்சுபிசி , டொயாட்டா தெரியுமா தலை.//

    ஹலோ அக்பர், பண்டாரா கிரகத்துல பேசுற பாஷையெல்லாம் எப்பக் கத்துக்கிட்டீங்க.

    ReplyDelete
  70. //வரட்டும் வா,மக்கா.சாவு ஒரு தடவைதானே? :‍)//

    ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.

    ReplyDelete
  71. //ஆனால் அரபிக்ல சொல்லுங்க..12 மணிக்கு மேல நாம என்ன பாசை பேசுனாலும் மணிஜிக்கு புரியும்.அவர் தாய்மொழி பேசினாலும் நமக்குதான் புரியாது. :‍)//

    //ஹலோ அக்பர், பண்டாரா கிரகத்துல பேசுற பாஷையெல்லாம் எப்பக் கத்துக்கிட்டீங்க.//

    இது ரெண்டுக்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?

    ReplyDelete
  72. //லொள்ளா பேசுறீங்க இன்னைக்கு
    கச்சேரி “ ஜலதரங்கத்துல ஆரம்பிச்சு
    எங்க முடியப் போகுதோ“//

    ஜலதரங்கம்னா நம்ம ரவுத்திரன் ராஜேஷ் பதிவுதான? அங்கயா ஆரம்பிச்சீங்க.

    ReplyDelete
  73. //அஸ்கு புஸ்கு.. இந்தக் கதையே வேணாம். 6 மணிக்கு மேல எத்தன கோடி கொடுத்தாலும் மணிஜீகிட்ட ஃபோன்ல பேசவே மாட்டேன்.//

    எல்லாரும் கெட்டிக் காரனாத்தானே இருக்கீக..

    எனக்குதான் கிடு,கிடுன்னு வருது. :-)

    நல்ல செவிலி உள்ள ஆஸ்பத்திரி குறித்து மணிஜிக்கிட்ட சொன்னீங்கள்ள சரவணன்.கோபார் அருகில்தானே?

    ReplyDelete
  74. //இது ரெண்டுக்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?//

    என்னா வில்லத்தனம்.

    ReplyDelete
  75. //நல்ல செவிலி உள்ள ஆஸ்பத்திரி குறித்து மணிஜிக்கிட்ட சொன்னீங்கள்ள சரவணன்.கோபார் அருகில்தானே?//

    என்னண்ணே உங்களுக்கு தெரியாததா. அவருக்குத்தான் ஒன்னும் தெரியாதுங்கிறாரே.

    ReplyDelete
  76. அக்பர் said...


    //ஆனால் அரபிக்ல சொல்லுங்க..12 மணிக்கு மேல நாம என்ன பாசை பேசுனாலும் மணிஜிக்கு புரியும்.அவர் தாய்மொழி பேசினாலும் நமக்குதான் புரியாது. :‍)//

    //ஹலோ அக்பர், பண்டாரா கிரகத்துல பேசுற பாஷையெல்லாம் எப்பக் கத்துக்கிட்டீங்க.//

    //இது ரெண்டுக்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?//

    ஒரு உறைக்குள் ரெண்டு கத்தியா? :-)

    ReplyDelete
  77. //நல்ல செவிலி உள்ள ஆஸ்பத்திரி குறித்து மணிஜிக்கிட்ட சொன்னீங்கள்ள சரவணன்.கோபார் அருகில்தானே?//

    என்னாங்கய்யா இது முடிவே பண்ணீட்டீங்களா? காய்ச்சல், தலைவலின்னாக்கூட ஒரு பெனடால் சாப்புட்டு குப்புற படுத்துக்கிறேன். ஆஸ்பத்திரி எந்தப் பக்கம் இருக்குன்னுகூட தெரியாதுங்க. ஆமா கோபர் எங்கயிருக்கு? ஜித்தா பக்கத்துலயா?

    ReplyDelete
  78. என்ன சரவணன்ஜீ நேர்ல நிறைய ஆஸ்பத்திரி பேரைச்சொன்னீங்க. இங்கே ஜகா வாங்குறீங்களே?

    ReplyDelete
  79. பா.ரா அண்ணே, நேசமித்ரன் அண்ணாச்சியக் காணோம், அவரும் அந்த ஜோதியில ஐக்கியமாயிட்டாரா?

    ReplyDelete
  80. //ஒரு உறைக்குள் ரெண்டு கத்தியா? :‍)//

    அண்ணே இதுல உள்குத்து ஏதும் இல்லையே :)

    ReplyDelete
  81. என்ன நாம மூணுபேரு மட்டும்தான் இருக்கோம் போலிருக்கு.

    ReplyDelete
  82. //ஆமா கோபர் எங்கயிருக்கு? ஜித்தா பக்கத்துலயா?//

    ஆமா.ஜித்தாவுக்கும் சாத்துருக்கும் நடுவுல.நம்ம,மாதவராஜ்,காமராஜ்ட்ட கேட்டாக் கூட சொல்வாப்ள..

    ReplyDelete
  83. //என்ன சரவணன்ஜீ நேர்ல நிறைய ஆஸ்பத்திரி பேரைச்சொன்னீங்க. இங்கே ஜகா வாங்குறீங்களே?//

    ஹலோ என்ன நீங்களுமா? போதும் இத்தோட நிறுத்திக்கிருவோம். மணிஜீய வேற காணோம்.

    ReplyDelete
  84. //வரட்டும் வா,மக்கா.சாவு ஒரு தடவைதானே? :-)//

    சங்கே முழங்கு !

    //அஸ்கு புஸ்கு.. இந்தக் கதையே வேணாம். 6 மணிக்கு மேல எத்தன கோடி கொடுத்தாலும் மணிஜீகிட்ட ஃபோன்ல பேசவே மாட்டேன்.//

    அப்போ நேர்லதானா டிக்கெட்டு போட்டாச்சா?

    ReplyDelete
  85. //அப்போ நேர்லதானா டிக்கெட்டு போட்டாச்சா?//

    :)

    ReplyDelete
  86. //ஆமா.ஜித்தாவுக்கும் சாத்துருக்கும் நடுவுல.நம்ம,மாதவராஜ்,காமராஜ்ட்ட கேட்டாக் கூட சொல்வாப்ள..//

    ஜித்தாவுக்கும் சாத்தூருக்கும் நடுவுல எங்க ஊரு சிவகாசியில்ல இருக்கு. சிவகாசிதான் கோபரா சொல்லவேயில்ல?

    ReplyDelete
  87. //ஜித்தாவுக்கும் சாத்தூருக்கும் நடுவுல எங்க ஊரு சிவகாசியில்ல இருக்கு. சிவகாசிதான் கோபரா சொல்லவேயில்ல?//

    இது ரொம்ப ஓவர்.

    அடிக்காமலே தலைசுத்துது.

    ReplyDelete
  88. //ஆமா கோபர் எங்கயிருக்கு? ஜித்தா பக்கத்துலயா?//

    நல்லா கேக்குறாங்கையா டீடெய்லு

    “ அது வந்து துபாய் துபாய்ன்னு ஒரு ஊர் அங்க நாலுகட்டு நாலுகட்டுன்னு ஒரு பார் ஆம் ...

    கதை இத்தோட சரியாம்”

    நல்லா கேக்குறாங்கையா டீடெய்லு

    ReplyDelete
  89. //பா.ரா அண்ணே, நேசமித்ரன் அண்ணாச்சியக் காணோம், அவரும் அந்த ஜோதியில ஐக்கியமாயிட்டாரா?//

    வேதியியல்,இயற்பியல் கலந்துக்கிட்டு இருப்பான்.கொஞ்ச நேரத்தில் கவிதை வரும்.சவுதியில் இருந்தாலும் போதை உச்சம்.கேரண்டி! :-)

    ReplyDelete
  90. பா.ரா அண்ணே கோபர் சாத்தூர் பக்கத்திலையா இருக்கு நான் விருதுநகர்னு நினைச்சேன்.

    ReplyDelete
  91. //ஜித்தாவுக்கும் சாத்தூருக்கும் நடுவுல எங்க ஊரு சிவகாசியில்ல இருக்கு. சிவகாசிதான் கோபரா சொல்லவேயில்ல?//

    2 வது பெக்குக்கு மேல எல்லாம் ஒண்ணுதானே

    பிலி , மிசிரி, மல்லு
    ஜொள்ளு ..

    என்ன சரவணா நான் சொல்றது

    ReplyDelete
  92. எல்லோரும் பார்ல இருக்குற நேரத்துல, நீங்க டூல்பாரை பார்த்துட்டு இருக்கீங்க என்ன கொடுமை சரவணன் இது?

    ReplyDelete
  93. //“ அது வந்து துபாய் துபாய்ன்னு ஒரு ஊர் அங்க நாலுகட்டு நாலுகட்டுன்னு ஒரு பார் ஆம் ...

    கதை இத்தோட சரியாம்”

    நல்லா கேக்குறாங்கையா டீடெய்லு//

    என்னாது துபாய்ல நாலுகட்டு பாரா(பா.ரா இல்லைங்க). ஏங்க சவுதி தியேட்டர்ல துபாய் படத்த ஓட்டுறீங்க.

    ReplyDelete
  94. //2 வது பெக்குக்கு மேல எல்லாம் ஒண்ணுதானே

    பிலி , மிசிரி, மல்லு
    ஜொள்ளு ..//

    சொன்னேன்ல,

    கவிதை போட்டான் பாருங்கள்..

    ReplyDelete
  95. //2 வது பெக்குக்கு மேல எல்லாம் ஒண்ணுதானே

    பிலி , மிசிரி, மல்லு
    ஜொள்ளு ..

    என்ன சரவணா நான் சொல்றது//

    நைஜீரியாவுல இருந்து ப்ளாக் பெர்ரி சாப்புட்டுக்கிட்டு நீங்க இதுவும் பேசுவீங்க இதுக்கு மேலயும் பேசுவீங்க. நான் ஊருக்கு வந்தப்ப என்கிட்ட சிக்காமப் போயிட்டீங்க அண்ணே.

    ReplyDelete
  96. //வேதியியல்,இயற்பியல் கலந்துக்கிட்டு இருப்பான்.கொஞ்ச நேரத்தில் கவிதை வரும்.சவுதியில் இருந்தாலும் போதை உச்சம்.கேரண்டி! :-)//

    ஆஹா ! எப்புடி இதெல்லாம்

    கண்ணாடி கிளாஸ் அவ கழுத்து மாதிரி இருக்குடா நேசா

    கடைசி பெக்குல தெரியிர குண்டு பல்புடா அவ கண்ணு

    பேர சொல்றதும் முத்தம் குடுக்குறதும் ஒண்ணுதான் (உமா-உம்மா) அப்பிடின்னு சொன்ன
    மனுஷன் தானே நீர்

    என்னா வில்லத்தனம்

    :)

    ReplyDelete
  97. //பிலி , மிசிரி, மல்லு
    ஜொள்ளு ..//

    இதெல்லாம் என்னண்ணே?

    ReplyDelete
  98. //நைஜீரியாவுல இருந்து ப்ளாக் பெர்ரி சாப்புட்டுக்கிட்டு நீங்க இதுவும் பேசுவீங்க இதுக்கு மேலயும் பேசுவீங்க. நான் ஊருக்கு வந்தப்ப என்கிட்ட சிக்காமப் போயிட்டீங்க அண்ணே.//

    ஆகஸ்ட் மாசம் வருவோம்ல செப்டம்பர்ல இருக்குய்யா திருவிழா இங்க பேசிட்டு இருக்குற ஒரு ஆளோட சொத்த தீர்க்காம விடுரதில்லை சரவணா

    ReplyDelete
  99. //வேதியியல்,இயற்பியல் கலந்துக்கிட்டு இருப்பான்.கொஞ்ச நேரத்தில் கவிதை வரும்.சவுதியில் இருந்தாலும் போதை உச்சம்.கேரண்டி! :-)//

    //சொன்னேன்ல,

    கவிதை போட்டான் பாருங்கள்..//

    என்ன கிடு கிடுன்னு வருதுன்னு சொன்னீங்க, சிக்ஸரா அடிக்குறீங்க.

    ReplyDelete
  100. கடைசியில நாந்தான் 100 அடிச்சேனா
    இதுக்கும் எதாச்சும் சொல்லப்படாது
    :)

    ReplyDelete
  101. //கண்ணாடி கிளாஸ் அவ கழுத்து மாதிரி இருக்குடா நேசா

    கடைசி பெக்குல தெரியிர குண்டு பல்புடா அவ கண்ணு

    பேர சொல்றதும் முத்தம் குடுக்குறதும் ஒண்ணுதான் (உமா-உம்மா) அப்பிடின்னு சொன்ன
    மனுஷன் தானே நீர் //

    ஆகா எவ்வளவு மேட்டர் வெளிய வருது.

    ReplyDelete
  102. //ஆகஸ்ட் மாசம் வருவோம்ல செப்டம்பர்ல இருக்குய்யா திருவிழா இங்க பேசிட்டு இருக்குற ஒரு ஆளோட சொத்த தீர்க்காம விடுரதில்லை சரவணா//

    இப்பவே அட்வான்ஸ் புக்கிங்கா அல்லது மிரட்டலா?

    ReplyDelete
  103. //கடைசியில நாந்தான் 100 அடிச்சேனா
    இதுக்கும் எதாச்சும் சொல்லப்படாது
    :)//

    அடுத்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் கொச்சி அணி சார்பாக விளையாட உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.

    ReplyDelete
  104. சரி பாசு..

    இங்க பூவாவுக்கு மணி அடிச்சாச்சு....கிளம்புறேன்.

    (ராத்திரி மணியும் வந்து அடிக்கும்.)

    மணிஜி,

    நேசன்-0023417606641

    சரவணன்-00966542237898

    அக்பர்-00966565214166

    சாணை புடிங்க.அப்பத்தான் சரியா வருவாங்க.ரேஸ்கல்ஸ்..

    என்னா பேச்சு.ஒரு பெரிய மனுஷனை... :-)

    ReplyDelete
  105. //ஆகா எவ்வளவு மேட்டர் வெளிய வருது.//

    பெறவு ...

    எங்க போனாரு
    எஸ்கேப்பா
    விடாதீங்க பிடிங்க அவரை ..

    ReplyDelete
  106. //என்னா பேச்சு.ஒரு பெரிய மனுஷனை... :-)//

    செல்லாது செல்லாது
    இந்தா அடிக்கிறேன் போனை

    ReplyDelete
  107. // பா.ராஜாராம் said...

    சரி பாசு..

    இங்க பூவாவுக்கு மணி அடிச்சாச்சு....கிளம்புறேன்.

    (ராத்திரி மணியும் வந்து அடிக்கும்.)

    மணிஜி,

    நேசன்-0023417606641

    சரவணன்-00966542237898

    அக்பர்-00966565214166

    சாணை புடிங்க.அப்பத்தான் சரியா வருவாங்க.ரேஸ்கல்ஸ்..

    என்னா பேச்சு.ஒரு பெரிய மனுஷனை... :-)//

    ஐயோ என்னண்ணே இப்படி போட்டுக் குடுத்துட்டீங்க.

    இப்பவே கண்ணக் கட்டுதே..

    நானும் கெளம்புறேனுங்கோ...

    ReplyDelete
  108. //இப்பவே கண்ணக் கட்டுதே..

    நானும் கெளம்புறேனுங்கோ...//

    me too

    ReplyDelete
  109. // 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    உங்களுக்கு சவூதியில் நிரந்தர குடியுரிமை வாங்கித்தர நண்பர் செ.ச வை வேண்டுகிறேன்.!! :))//

    மணிஜீ..

    எல்லாத்துக்கும் காரணம் ஷங்கர்தான். என்னைய விட்டுடுங்க ப்ளீஸ்.

    ReplyDelete
  110. //நானும் கெளம்புறேனுங்கோ...//

    போற போக்குல அப்பிடியே போன சார்ஜுல போட்டுட்டு போங்க

    :)

    ReplyDelete
  111. //போற போக்குல அப்பிடியே போன சார்ஜுல போட்டுட்டு போங்க //

    இதுவேறயா??? அப்ப டோட்டலா தொலைஞ்சோம்.

    ReplyDelete
  112. என்னது சவூதி வெறும் சேவல் பண்ணையா??

    அப்பச்செரி. நான் தூங்கப்போறேன்.

    நல்லா களை கட்டிச்சுய்யா கச்சேரி..ஹி ஹி! :))

    ReplyDelete
  113. அய்..

    என்கிட்ட தப்பிக்க முடியாது..!

    அந்த சைதாப்பேட்டை மேட்டரு ஏற்கெனவே போட்டதுதானே..?

    கவிதை நல்லாயிருந்துச்சு..!

    அப்புறம் மறக்காம ஓட்டும் போட்டுட்டேன்..!

    ReplyDelete
  114. அப்ப நானும் கிளம்புறேன் மக்கா
    :)

    ReplyDelete
  115. சூப்பரா இருக்கு தல பதிவு.

    ReplyDelete
  116. //ஏன் ?என் மவன் வீட்டுல எத்தனை நாள் வேணா இருப்பேன் . என்னை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது( மருமகளை பார்த்துக் கொண்டே)//
     
    :-))

    ReplyDelete
  117. ராஜாராம், சரவணன்ன் அக்பர், நேசமித்ரன் கும்மியில் கலந்துக்க முடியாமல் போய் விட்டது. ஒரு விளம்பர படபிடிப்பில் பிஸியாகி விட்டேன்.. வருகைக்கும், மொய்க்கும் நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  118. சைதாப்பேட்டை மேட்டரில் இரண்டு விஷயங்கள்

    1. அம்மாவும் பிறரும் இருக்கும் இடத்திலேயே பொண்டாட்டியைக் கொஞ்சுகிறான் (என்ன தான் புதுசா இருந்தாலும் இப்படியா!!!!)

    2. மனைவி ஆட்டோவில் ஏறியதும் அம்மாவைக்கூட ஆட்டோவில் ஏற்றாமல் தான் ஏறிக்கொள்கிறான்

    நம்மூரில் ஆண்கள் ஏன் இந்த அளவுக்குப் பொண்டாட்டி கோண்டுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்???

    ReplyDelete