Monday, December 14, 2009

அரைவிழி கனவில்...


ஆழ்ந்த உறக்கத்தில்
வந்ததொரு கனவில்
பச்சிளம் பாலகனாய்
ஒரு பாத்திரம் ஏற்கிறேன்
எத்தனை ஒத்திகை பார்த்தும்
நேர்த்தியாய் நடிக்க வரவில்லை
அருகிலிருந்த அம்மா வேடமேற்றவள்
கதை சொல்வது போல் காட்சி
ஒரு ஊரில் என்று அவள்
ராகம் எடுத்தபோது
உண்மையில் தொலைந்து போனது
தூக்கம்




26 comments:

  1. \\எத்தனை ஒத்திகை பார்த்தும்
    நேர்த்தியாய் நடிக்க வரவில்லை\\

    எவ்வளவோ அர்த்தங்களைத் தருகிறது

    ReplyDelete
  2. ம்ம்ம்...மற்றுமொரு சிறப்பான கவிதை...

    ReplyDelete
  3. ரொம்ப அழகா இருக்கு கவிதை..
    கலக்குங்க

    ReplyDelete
  4. ஐய்..யா!!.. தல கிளம்பிடிச்சே .....!!


    //பச்சிளம் பாலகனாய்
    ஒரு பாத்திரம் ஏற்கிறேன்//


    ஆழ் மனதில் ஆசைகள் கனவா வரும்ன்னு சொல்றாங்களே.... அப்படியா தல?

    ReplyDelete
  5. அழகான வரிகள் தலைவரே .. அம்மாவின் அன்பை நினைத்து எங்கும் பாலகன் ..

    ReplyDelete
  6. எப்டி ஜி? இதுமாதிரியெல்லாம்...

    ReplyDelete
  7. என்ன ஜி தூக்கத்திலேயும் கவிதையா..?/

    டாக்டர் அசோக் சரியாதான் கேட்கிறார்..??

    ReplyDelete
  8. நல்ல வரிகள்
    ரசித்தேன்

    ReplyDelete
  9. :-))))))))))))
    எப்பிடித்தான் யோசிப்பீங்களோ?

    ReplyDelete
  10. //நாகர்கோவிலை சேர்ந்த நண்பர் ராம்பிரசாத். மெளனி என்ற பெயரில் இணையத்தில் எழுதிவருகிறார்.அரசியல், லஞ்சஎதிர்ப்பு போன்றவற்றைஎழுதினாலும், அழியாச்சுடர்கள் என்ற தலைப்பில் ஜாம்பவான்களின்எழுத்துக்களை வலையேற்றி இருக்கிறார். அவரின் இந்த முயற்சியை பாராட்டுவோம். நீங்களூம் வாசித்து பரவசம் அடையுங்கள்.
    //

    அட்வான்ஸ் நன்றி மணிஜீ.. மீதியை வலைச்சரத்தில் சொல்றேன்

    ReplyDelete
  11. முரளிகண்ணன் வாழ்க.

    ReplyDelete
  12. அன்பின் தண்டோரா

    ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன்

    கவிதை நல்ல சிந்தனை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நல்ல வரிகள்....ரசிக்கும்படி உள்ளது


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இப்படித்தான் கவிதை எழுதனுமோ..?

    ReplyDelete
  15. கவிதை பிடித்திருந்தது மணிஜி.

    ReplyDelete
  16. அருமையாக இருக்கு!

    ReplyDelete
  17. ரொம்ப அழகா இருக்கு கவிதை..

    ReplyDelete
  18. எளிமையான கவிதை ஜி..!

    ரொம்ப நாள் கழித்து படித்தவுடன் புரிந்த கவிதை..!

    ReplyDelete
  19. நல்லா இருக்கு

    ReplyDelete
  20. /*உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    எளிமையான கவிதை ஜி..!

    ரொம்ப நாள் கழித்து படித்தவுடன் புரிந்த கவிதை..!*/

    உண்மைலேயே உங்களுக்கு புரிஞ்சிட்டா... இல்லே மணி அண்ணன்கிட்டே 'பொட்டி' வாங்கிட்டீங்களா...

    ReplyDelete
  21. ஆழ்ந்த போதையில்
    கிடைத்ததொரு போத்தல்....
    மேலும் படிக்க...

    ReplyDelete