Tuesday, November 24, 2009

மானிட்டருக்கு மறுநாள்..... டெஸ்டிங் 1..2...3



நேற்று இட்ட இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரியவில்லை.. ஆகவே இன்று ஒரு சோதனை (உங்களுக்கும்தான்) பதிவு(மீள்)

தலைவர் ஓய்வுக்காக ராமச்சந்திராவில் இருக்கிறார்.உடன் சண்முகநாதன்.

போரடிக்குதப்பா..எதாச்சும் கதை விவாதத்துக்கு ஏற்பாடு செய்..

ஐயா..கவிப்பேரரசுக்கு போன் போடட்டுமா?

வேண்டாம்யா..அந்த பழைய சோறு பார்ட்டிங்கல்லாம்..பொன்னர் சங்கர் படபிடிப்பை பார்க்க போனதுக்கே எவனோ கார் மேல கல்லை விட்டெறியரான்..

இந்த வாட்டி சும்மா நச்சுன்னு இருக்கணும்...துரைமுருகன்,ஆற்காடு கிட்ட எல்லாம் மூச்சு விட்றாதே..

ஐயா,பதிவுலகத்தில பசங்க எல்லாம் கலக்கறாங்கலாம்.அங்கேயிருந்து வரவச்சுடலாம்..

கேபிள் சங்கர்,வால்பையன்,நையாண்டிநைனா மற்றும் தண்டோரா வருகிறார்கள்..

கோரசாக...வணக்கம் ஐயா..

ம்ம்..உங்களை அறிமுகபடுத்திக்கங்க..

ஐயா நா கேபிள்..

கேபிள்ன்ன அரசு கேபிளா?அது எனக்கு ஆகாது.தெரியுமில்ல...

ஐயா நீங்கதான் அரசு..நா வெறும் கேபிள்தான்..

எஸ்சிவி யா இல்ல ஆர்சிவியா...

நா எம்சிவிங்க....

எம்சிவி யா? அது யார்துயா?

வால் பையன்..அது.. மெக்டவல் விஸ்கிய சொல்றாருங்க..

நீ யாருய்யா?

வால்பையன்..

மதுரையா..நினைச்சேன்

நா நையாண்டி நைனாங்க..

நைனான்னா ஆற்காட்டாருக்கா உறவா?யோவ் சண்முகநாதா..இவங்க என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களா?

ஐயா நா தண்டோராங்க..

உன்னைய பத்தி உளவுத்துறை சொல்லியிருக்காங்க.

யாருங்கய்யா? விஜயகாந்தா?

சரி என்ன சாப்பிடறீங்க?

கேபிள்.... சாப்பிட எதுவும் வேணாம்..இப்ப ஒரு நர்ஸ் வந்துட்டு போனாங்களே..பேர் என்ன? மல்லுவா?

யோவ் நீ துரை முருகனோட மோசமா இருப்ப போல..வாலு உனக்கு என்னய்யா வேணும்?

சரக்குத்தான்..ஐயா ஒரு விண்ணப்பம்..லேட்டா திறந்து சீக்கிரம் மூடிராங்க..கொஞ்சம் கவனிங்க.

எந்த பள்ளிக்கூடம்யா அது?

டாஸ்மாக் கடைதாங்க..

இதுக்கே தைலாபுரத்துலேர்ந்து தடியை வீசராங்க...நைனா உனக்கு என்னய்யா வேணும்?

ஐயா நீங்க முரசொலில எழுதின கவிதை கொஞ்சம் கொடுத்தீங்கன்னா..எதிர் கவுஜ போட்டு கடையை காப்பாத்திக்குவேன்..

திடீரென்று வாசலில் கேபிள் சங்கரின் பைக்கை பாத்துட்டு உண்மை தமிழன் உள்ளே வருகிறார்..

நீ யாருய்யா?

அப்பனே முருகா..

துரைமுருகனுக்கு சொந்தமா?

ஐயா நா சரவணன்..

அவர் கையை கட்டிகிட்டு இல்ல இருப்பாரு

தண்டோரா குறுக்கிட்டு..ஐயா தயவு செஞ்சு இவரையும் கையை கட்டிகிட்டுத்தான் இருக்கணும்னு உத்தரவு போடுங்க..டைப் அடிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேங்குறாரு..

கேபிள்..இந்த படத்தை தயாரிக்கறது யாருங்க?சன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னா?

அவங்க எல்லாம் ஏமாறுவாங்களா..இதுக்குன்னு கழகத்துல சில அடிமைகளை வச்சிருக்கோமில்ல..நீ கதையை சொல்லுயா?

கேபிள் சங்கர் : பூஜையை போட்ட வுடனே சாங்..

மு.க. : நிறுத்து..நிறுத்து..பகுத்தறிவு பாசறைக்குள்ள வந்துட்டு என்ன பேச்சு?

தயாளு அம்மாள் வருகிறார்..என்னங்க..திருவாரூர் புவனேஸ்வரி அம்மன் கோயில்லேர்ந்து மந்திரிச்சு கயிறு அனுப்பியிருக்காங்க..கட்டி விடவா?

தண்டோரா (இதை நோட் பண்ணிக்கடா... வேலிட் பாயிண்ட் ஆச்சே)

கேபிள் : ஓப்பன் பண்ணா?

வால் .....ஓப்பன் பண்ணா நுரை வருமே தலைவா?

கேபிள்..நம்ம என்ன சோப்பு விளம்பரமா எடுக்கப் போறோம்..ஓப்பன் பண்ணா சன்ரைஸ் தலைவரே..

சண்முகநாதன் குறுக்கிட்டு,தலைவர் காபி குடிக்ககூடாது.டாக்டர் சொல்லியிருக்காரு..கஞ்சிதான்..

கேபிள்...அது இல்லீங்க..உதயசூரியனை காட்றோம்..

தலைவர் நிமிர்ந்து உட்காருகிறார்..இப்ப சீனை நா சொல்றேன்(கேபிள் தலையில் கை வைத்துக் கொள்கிறார்)

ஒரு கல்யாண வீடு..மைக் செட் கட்ட நாயகன் போகிறான்..ஜேகே ட்ட சொல்லி

பூம்புகார்ல பெரிய செட்டா போட சொல்லிடுவோம்..செலவெல்லாம் பழனிமாணிக்கம் பாத்துப்பாரு...

கேபிள்..ஐயா நான் தான் டைரக்டருன்னு சொல்லி இட்டாந்தாங்க..

மு,க..டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்‌ஷன் நான் தானே..

கேபிள்..(விளங்கிடும்) ஐயா மேல சொல்லுங்க..நா திரைக்கதை ரெடி பண்ணிடறேன்..

மு.க... மணப்பெண் யாருன்னா..அவன் காதலி..அப்படியே ஷாக் அடிக்குது..

வால்...ஏங்க...ஓயரிங் தப்பாயிடுச்சா?

மு.க.. . கனெக்‌ஷனே மாறி போச்சுயா?இங்க டைட்டில் சாங்..

காயின்றி கனியில்லை...

நோயின்றி மருந்தில்லை..

ஆயின்றி வயிறில்லை...

பேயின்றி பிணமில்லை..

ஈயின்றி பீயில்லை...

நீயின்றி நானில்லை..

எப்பு...டி?

சண்முகநாதன்.. இப்படி இம்சையை கொடுக்கிறாரே..வேண்டாம்னு ஓட கூட முடியலை..இன்னும் கொஞ்ச நேரத்துல பசங்க வந்துடுவாங்க..வாங்கத்தான் போறாரு...

உண்மைத்தமிழன்...அருமை..அருமை..இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற ரைட்ஸ் எனக்குத்தான் தரணும்..

மு.க .. தன் காதலிதான் மணப்பெண்ணுன்னு தெரிஞ்சவுடனே துக்கம் தாங்காம அழ ஆரம்பிக்கிறான்..அப்ப மறுபடியும் ஒரு பேத்தாஸ் சாங்..

கேபிள்..தலைவரே..ஒரு சந்தேகம்..நம்ம வெறும் ஓளி,ஓலியும் மட்டுமா எடுக்கப் போறோம்..இல்லை இசையருவிக்காக எடுக்கிறமா?

மு.க..ரொம்ப பேசினா உன்னையும் காத்திருப்போர் பட்டியல்ல வச்சுடுவேன்..

இப்ப கிளைமாக்ஸ்..

தலைவரே..இடைவேளையே வரலையே..

மு.க..அதுக்குத்தான் நாயகியின் இடையை வர்ணிச்சு 10நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வச்சிருக்கமே?சரி..சரி..பசங்க வர்ற நேரமாச்சு..பேட்டா வாங்கிட்டு நீங்க கிளம்புங்க..

யாரோ வரும் சத்தம் கேட்டு பசங்கதான் நினைக்கிறேன்..போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்..

தலைவா....தங்கத்தமிழே..

குங்குமசிமிழே..

நீயின்றி நானில்லையே..

ஜெகத்ரட்சகன் ஆளுயுர மாலையுடன் வருகிறார்..

தலைவரே..நீயின்றி நானில்லை படத்தின் வெள்ளி விழாவை நாளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்திருக்கிறேன்..இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் கலைஞரா...இல்லை..கருணாநிதியா என்ற தலைப்பில் கவியரங்கமும் உண்டு..

மு.க...யோவ்..அடுக்குமாய்யா..உனக்கு?இப்பத்தான் கதையை பத்தி பேசிகிட்டிருக்கோம்..வெள்ளி விழாவுக்கே போய்ட்டியா நீயி?என்ன எதாச்சும் புதுசா காலேஜ் ஆரம்பிக்கப் போறியா?கையெழுத்து போடணுமா?

எங்கோ ஊளையிடுவ்துபோல் அழுகை சத்தம் கேட்கிறது..பார்த்தால் கட்டிலுக்கு அடியில் துரைமுருகன்...

நியாயமா தலைவரே?பொதுப்பணித்துறையையும் புடுங்கிட்டீங்க..மீனாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு..நா என்னதான் பண்றது?தெரிஞ்சுக்காம நா நகரமாட்டேன்..

மு.க. நீ ரொம்ப சட்டம் பேசற..அதையும் உன் கிட்டேர்ந்து புடுங்கிட வேண்டியதுதான்..

என்ன இங்க..சத்தம்..என்றபடி ஸ்டாலினும்,அழகிரியும் வருகிறார்கள்...

ஏம்பா..உங்களை ஓய்வு எடுக்க சொன்னா..நீங்க சின்ன பசங்களையெல்லாம் கூப்பிட்டு வச்சு கூத்தடிக்கறிங்களா/

கேபிள் ....ஐயா தளபதி என்னயத்தான் சின்ன பையன்னு சொன்னார்..நா யூத்துப்பா யூத்து..

செக்யூரிட்டி...விரட்டுயா எல்லாரையும்.அப்பா வாசல்ல நல்லகண்ணு,ஜோதிபாசு எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க..போய் அருகம்புல் ஜீஸ் குடிச்சுட்டு வாக்கிங் போயிட்டு வாங்க..போங்க..

27 comments:

மணிஜி said...

நேற்று இட்ட இரண்டு இடுகைகளூம் தமிழ்மண முகப்பில் தெரியவில்லை.அவர்களிடம் கேட்டதற்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று மெயி அனுப்பியிருந்தார்கள்..ஆகவே சோதனை பதிவு (மீள்பதிவாம்)

நையாண்டி நைனா said...

டெஸ்ட்லே பாசு நீங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))

க.பாலாசி said...

ஏங்கண்ணே பழனிமாணிக்கத்த எங்க ஊராண்ட அனுப்புறீங்க...அவர உங்க ஊருக்காண்டியே வச்சிகங்க...ஒண்ணாவது உருப்படட்டும்.

//கேபிள்.... சாப்பிட எதுவும் வேணாம்..இப்ப ஒரு நர்ஸ் வந்துட்டு போனாங்களே..பேர் என்ன? மல்லுவா?//

ஆகா...நம்ம தலைவர்தான் கரைட்.

கே.என்.சிவராமன் said...

கொல வெறி :)

இப்படினு தெரிஞ்சிருந்தா, 'தமிழ்மணத்துல' பிரச்னை எதுவும் இல்லைனு சொல்லியிருக்க மாட்டாங்க :(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

(இது மீள் பின்னூட்டமல்ல)

vasu balaji said...

அய்யோ அய்யோ. என்னாச்சி இந்த மனுஷனுக்கு. இப்புடி அடிச்சி ஹதம் பண்றாரு. சாங்கு தாங்கலை சாமி=)). தூள்.

Ashok D said...

ரைய்டு

Cable சங்கர் said...

haa..haa..

அகல்விளக்கு said...

ஹி ஹி ஹி ...

டுமீல்... டகால்னு கலக்கிட்டீங்க தலீவா !

தினேஷ் said...

avvvvvvvvvvvvvv

கலகலப்ரியா said...

kalakkal..!

நர்சிம் said...

வெளுவெளுவெளு..வெளு.

வால்பையன் said...

கடைசியா என்ன தான் முடிவு ஆச்சு!
கடை சீக்கிரம் திறந்து லேட்டாக மூடுறதுக்கு முடிவு ஏன் பண்ணல!

பா.ராஜாராம் said...

//காயின்றி கனியில்லை...

நோயின்றி மருந்தில்லை..

ஆயின்றி வயிறில்லை...

பேயின்றி பிணமில்லை..

ஈயின்றி பீயில்லை...

நீயின்றி நானில்லை..

எப்பு...டி?//


ஹா..ஹா..ஹா..ஹா..

அலும்பு பார்ட்டி மணி,நீங்க..

Beski said...

//தலைவர் நிமிர்ந்து உட்காருகிறார்..இப்ப சீனை நா சொல்றேன்(கேபிள் தலையில் கை வைத்துக் கொள்கிறார்)//

//டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்‌ஷன் நான் தானே..//

இந்த இடங்களில் எல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை.

---

நீங்க பதிவுல நக்கல் பண்ணிருக்கீங்க... உங்கள ஒருத்தர் பின்னூட்டத்துல நக்கல் பண்ணிருக்காரு பாத்தீங்களா?

கலையரசன் said...

:-))))))

Unknown said...

சூப்பரா இருக்கு.உண்ணாவிரதம் ஷாட் இல்லாதது குறை.

Mahesh said...

ஸ்வாமின்... அடங்க மாட்டேங்கறேளே :)

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கற்பனை...........

நேசமித்ரன் said...

அதெல்லாம் சரி உஙக போதைக்கு மீனா அக்காவை ஏன் வம்புக்கு இழுக்குரீங்கண்ணே

இதெல்லாம் ஒத்துக்க முடியாது ஆமா!

கடை மேட்டர் ஒரு முடிவு காணாமயே முடிஞ்சிருச்சே
:)

Unknown said...

அப்போ நீங்க அவர விடப்போவதில்லையா..??

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

அண்ணா... பட்டைய கிளப்புறீங்க போங்க.
ஒவ்வொரு லைனும் ஒரு காமெடி.
// துறை முருகன், மீனா...// கிளாசிக் போங்க.

மணிஜி said...

நண்பர்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்

R.Gopi said...

// அதி பிரதாபன் said... //

நீங்க பதிவுல நக்கல் பண்ணிருக்கீங்க... உங்கள ஒருத்தர் பின்னூட்டத்துல நக்கல் பண்ணிருக்காரு பாத்தீங்களா?

அதி பிர‌தாப‌ன்.... நீங்க‌ இதை சொல்றீங்க‌ளா??

//cdhurai said...
பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

அன்புடன்

செல்லத்துரை…..//

இது அதிர‌டி சிகிச்சை ஆச்சே த‌லைவா........ ...செல்லதுரை, இவ்ளோ சொல்றாரு... என்ன‌தான் எழுதி இருக்காருன்னு போய் க‌தைய படிச்சு தான் பாருங்க‌ளேன்

Beski said...

//R.Gopi said...
அதி பிர‌தாப‌ன்.... நீங்க‌ இதை சொல்றீங்க‌ளா??

cdhurai said...
பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே....,//
அய்யய்யோ... இது வேறயா? எத்தன பேருதான் கிண்டல் பணிருக்காங்க?

Ganesan said...

நியாயமா தலைவரே?பொதுப்பணித்துறையையும் புடுங்கிட்டீங்க..மீனாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு..நா என்னதான் பண்றது?தெரிஞ்சுக்காம நா நகரமாட்டேன்..

இதென்ன உள்குத்து

மணி அண்ணே
ரொம்ப நாள் கழித்து விழுந்து விழுந்து சிரித்த பதிவு.

பெசொவி said...

விழுந்து விழுந்து சிரித்தேன். நன்றி, ஐயா!