Wednesday, August 26, 2009

ஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....



காத்திருக்கிறேன்
மரணபயத்தை
அவர்களுக்கு ஊட்ட

வயிற்றிலடிக்கிறார்கள்
சிறுபூச்சிகளை அழிக்கும்
அந்த தெளிமருந்து
தயாரிப்பாளார்கள்

காத்திருக்கிறேன்..
அதற்கு முன்
அறிய வேண்டும்

இடது, வலது புஜம்
சிரமா,,கரமா?
எங்கே விழுந்தால்
மரணம் என்று
பஞ்சாங்கத்தில்
பதிந்திருக்கிறார்கள்..?

13 comments:

  1. லேபிள் ரொம்ப நல்லா இருக்கு கவிதையும்......

    ReplyDelete
  2. பல்லி உணவில விழுந்தா தானே சாவாங்க!
    மேல விழுந்தாலேவா!?

    ReplyDelete
  3. \\இடது, வலது புஜம்
    சிரமா,,கரமா?
    எங்கே விழுந்தால்
    மரணம்\\

    சாம்பாரிலோ அல்லது நாம் சாப்பிடும் எதில் விழுந்தாலும்..!
    இது 88 வது பதிவுதான தலைவரே..!
    :)

    ReplyDelete
  4. 'கெவுளி' படமும் நல்லாருக்கு.

    ReplyDelete
  5. தல.... நீ இதுபோல எழுதப்போறேன்னு காலைலயே "பல்லி" சொல்லிடுச்சு...

    ReplyDelete
  6. //இடது, வலது புஜம்
    சிரமா,,கரமா?
    எங்கே விழுந்தால்
    மரணம் என்று
    பஞ்சாங்கத்தில்
    பதிந்திருக்கிறார்கள்//

    நல்லாயிருக்கு நண்பா.

    ReplyDelete
  7. /இடது, வலது புஜம்
    சிரமா,,கரமா?
    எங்கே விழுந்தால்
    மரணம் என்று
    பஞ்சாங்கத்தில்
    பதிந்திருக்கிறார்கள்..?
    //

    பல்லி எங்கே விழுந்தாலும் எவர் காலாவது அதனுடய
    இடது, வலது,
    சிரம், மரம், என்று மிதிபட்டால்
    அன்றே மோட்சம். என்று கெவுளி பஞ்சாங்கம் சொல்கிறது..

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்குனு சொல்வதை விட, படித்தா வலிக்குது! ஆனா, மொய்க்கு மொய்யா, பதில் கமெண்ட் வேணாமே நண்பரே!

    ReplyDelete
  9. அரவிந்த்.
    வால்பையன்..
    டக்ளஸ்...
    துபாய்ராஜா....
    கோபி.....
    அஷோக்......
    நாடோடீலக்கியன்.......
    கேபிள்........
    நஞ்சில்நாதம்.........
    சுமஜ்லா..........

    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  10. labels லில் இருந்து தொடங்குகிறது,உங்கள் பின் நவீனத்துவ கிண்டல்.
    ஆனால் கவிதையை கிண்டல் என கொள்ள முடியாது.இது..அபூர்வம்!
    ரொம்ப நல்லா வந்திருக்கு நண்பா.

    ReplyDelete