Thursday, July 16, 2009

ஆண்டுகள் ஐந்து கடந்தது.....மடிந்த மழலைகள்...?


மாலை பள்ளி முடிந்து திரும்பும் பிள்ளைக்கு
தின்ன வாங்கி வைத்திருந்த

தின்பண்டம் எறும்பு மொய்த்திருந்தது....

மதிய உணவுக்கு வைத்த உலை அரிசி
வாரிசுக்கு வாய்க்கரிசி என்பதை
உணராமல்
புளியை ஊற வைத்த அன்னையர்கள்..


பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க
மாலை போகலாம் என்று அப்பன் சொன்னதையே
பலரிடமும்
பீற்றிக் கொண்டிருந்த விஜயா புள்ள..


என்ன வரம் வாங்கி வந்தனர் இவர்கள்.
ஏன் இந்த சாக்காடு..

எந்த அலட்சியம் இத்தனை
பச்சை குருத்துக்களை..
பொசுக்கியது..
சின்ன,சின்ன கனவுகள்.... மெளனமாய் கருகியது.....

அத்தனை துயரிலும் தோள் கொடுத்து தாங்கிய
அன்றைய தஞ்சை மாவட்ட
ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்னனும்
அவர் தம் துணைவியாரும்

இன்றும் அந்த எளியோர் நினைவிலிருக்கிறார்கள்..



சித்தம் கலங்கி சோக சிறையிலிருக்கும்
பிள்ளையை பெற்றவர்களுக்கும்
மகாமக மண்ணில் எரிந்த
மழலை தெய்வங்களுக்கும்
கண்ணிர் அஞ்சலிகள்.........



14 comments:

  1. அற்புதமான அஞ்சலி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. என் ஆழ்ந்த அணுதாபங்களும் அஞ்சலிகளும் தலைவரே...!
    :(

    ReplyDelete
  3. என்னுடைய அஞ்சலிகள்.

    கவிதையிலே கலங்கடிச்சுட்டீங்க...

    ReplyDelete
  4. எல்லாரும் மறந்தே போய்விட்ட நிலையில்,
    மறக்காமல் அஞ்சலி செய்யும் கவிதையை
    எழுதி மனசை கனக்க செய்துவிட்டீர்கள்!!

    ReplyDelete
  5. என் அஞ்சலிகளும் கூட.

    ராதா கிருஷ்ணன் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    ReplyDelete
  6. என் அஞ்சலிகளும், பிராத்தனைகளும்

    ReplyDelete
  7. நீங்கா நினைவுகளுடன் நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.

    ReplyDelete
  8. அந்த சம்பவம் மறக்கக்கூடியதல்ல...
    சம்பவத்தை வைத்து அரசியல் செய்த கட்சிக்காரர்களையும், உதவி செய்வதாக சொல்லி சினிமாக்காரர்கள் செய்த விளம்பரங்களையும்கூட...

    குழந்தைகளுக்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  9. எனது அஞ்சலிகளும், பிராத்தனைகளும்

    ReplyDelete
  10. //மகாமக மண்ணில் எரிந்த
    மழலை தெய்வங்களுக்கும்
    கண்ணிர் அஞ்சலிகள்.........//

    En kaneer anjaligal..... theeyil erindha andha pinjugalukku....

    ReplyDelete
  11. அஞ்சலி செலுத்துவதால் மாண்டவர் மீள போவதில்லை, என்றாலும் இந்த மாதிரி அஞ்சலி செலுத்துவது அத்தகைய துயர் இனியொரு குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்பதால் தான்..அதனை கருத்தில் கொண்டு உங்களுடன் நானும் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன்

    ReplyDelete
  12. ஆப்பு வாங்கலையோ ஆப்பு?
    ஆப்பு வாங்கலையோ ஆப்பு?
    அன்பால சொல்லுவேன்.அடக்கமா சொல்லுவேன்,
    அழுத்தமா சொல்லுவேன்..
    அடங்கலையா ஒத்தா ......ஆப்பை சொருகிட்டு..

    சுண்ணாம்பும் தடவுவேண்டா..

    தமிழச்சி பால் குடிச்சவண்டா...
    அந்த எமனையும் ஓத்தவண்டா.

    தமிழச்சி பால் குடிச்சவண்டா...
    அந்த எமனையும் ஓத்தவண்டா.

    தமிழச்சி பால் குடிச்சவண்டா...
    அந்த எமனையும் ஓத்தவண்டா.


    முடிஞ்சா ஓட்டு போடு.
    இல்லையா கருத்து போடு.
    சும்மா வேடிக்கை பாத்தா ரத்தம் கக்கியே சாவ..
    புது பதிவர் அத்தனை பெரும் எனக்கு சொத்துடா.
    அந்த சொத்த்துல அத்தனை பேருக்கும் பங்கு இருக்குடா.
    எனக்கு ஓட்டு மட்டும் போட்டு பாரு..
    எனக்கு சொந்தம் நீயடா.
    விடாத பந்தம் நீயடா..
    அஜக்குயின்னா அஜக்குதான்.
    குமுக்குஇன்ன குமுக்குதான்.
    பிரபல பதிவன் அத்தனைபேருக்கும் ஆப்படிப்பாண்டா.
    சரியாய் உள்ள இறங்குச்சான்னு பாத்தடிப்பாண்டா..
    சத்தியமா என் மனசு தங்க மனசுடா.
    நல்ல பதிவு எழுதினேன்னா 20 ஓட்டுடா ..
    நல்ல போட்டு குத்துவேண்டா..
    அஜக்குயின்னா அஜக்குதான்.
    குமுக்குஇன்ன குமுக்குதான்.

    தமிழச்சி பால் குடிச்சவண்டா...
    அந்த எமனையும் ஓத்தவண்டா.

    இவ்விடம் ஆப்பு எல்லா அளவுகளிலும் கிடைக்கும்
    ஆப்பு வாங்கலையோ ஆப்பு?
    அன்பால சொல்லுவேன். அடக்கமா சொல்லுவேன், அழுத்தமா சொல்லுவேன்.. அடங்கலையா ஒத்தா ......ஆப்பை சொருகிட்டு.. சுண்ணாம்பும் தடவுவேண்டா.. தமிழச்சி பால் குடிச்சவண்டா...
    http://aaparasan.blogspot.com/

    ReplyDelete
  13. அஞ்சலி செலுத்திய நண்பர்களுக்கும்,ஆப்பத்துக்கும் நன்றி.

    ReplyDelete