Saturday, January 30, 2010

சாரு நிவேதிதாவும்... வறட்டு மொளகாய் சட்னியும்


தேவையானப்பொருட்கள்:

யாராவது எழுதிய பழைய பதிவுகள்- 2 (திருடியதாய் இருந்தால் உகந்தது)
கூகிள் ஸ்டோரில் வாங்கிய பாடாவதி இணைப்பு அல்லது தொடுப்பு
கடுப்புபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்(யாராவது “நீ” பெரிய பருப்பான்னு கேட்டால்?
உளுத்துப்போன பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கூரான பற்கள் - 32 (நற நறன்னு கடிக்க)
புளி - ஒரு நெல்லிக்காயளவு(வயித்துல கரைக்கரதுக்கு)
விளக்கெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்( மாந்தத்துக்கு நல்லது)
கடுகு - அது பின்னூட்டத்தில் தாளிக்கறதுக்கு)
வேப்பிலை - சிறிது (அடிக்கறதுக்கு)
உப்பு - கொஞ்சம் உறைக்கறதுக்கு
கொழுப்பு - நிறைய தேவைப்படலாம் (நல்ல கொழுப்புதான். திருப்பி தாக்கறதுக்கு)

செய்முறை:

பழைய பதிவுகளை கண்ணில் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டும். அதில் தாளிக்க எதாவது கிடைக்கிறதா என்று ஆராய வேண்டும். நிச்சயம் கிடைக்கும். முயற்சிதான் முக்கியம்.

அப்புறம் சமீபத்திய இடுகைகளையும் நோக்க வேண்டும். நிச்சயம் அதில் உங்களுக்கு ஒரு க்ளூ கிடைக்கும். அப்புறம் என்ன? வறட்டு மொளகாய் சட்னி ரெடி. முக்கியமான விஷயம். படிக்கிறவனுக்கு பேதி புடுங்க வேண்டும். அது சீதா பேதியாகவோ அல்லது சாதா பேதியாகவோ இருக்கலாம்.

என்ன கொடுமைன்னா? உடனே உங்களுக்கு பதில் உபசாரத்திற்காக அந்த பழைய சோறு பார்ட்டிகள் வேறு எதையாவது கலந்தும் சட்னி அரைப்பார்கள்.

இப்ப வறட்டு மொளகாய் சட்னி ரெடி. தமிழ் மணத்தோடு பறிமாறுங்கள். நிறைய பேர் வந்து மொய் வைப்பார்கள். சிலர் இலைக்கு அடியிலும் வைக்கலாம்.


டிஸ்கி: இது முற்றிலும் சமையல் குறிப்பு மட்டுமே. கொஞ்சம் பின் நவீனத்துவம் கலந்து என்.ஆர். ஐ களுக்காக எழுதப் பட்டது. தயை கூர்ந்து தனிப்பட்ட பெயர்களையும், அரசியலையும் தவிர்க்குமாறு சாப்பிட வருபவர்களை கேட்டுக் கொள்கிறேன்.


Friday, January 29, 2010

முடிச்சவிழும் தருணங்கள்....



எலி கடித்த கால் சட்டை
விரல் நுழைகையில்
பல்லிடுக்கில்
கடலை உருண்டையின்
மிச்சம்!!

இங்கதானே வச்சேன்
காணலையே?
அப்பா தேடும் அந்த
பத்து ரூபாய்!!

காட்டிக் கொடுக்க
விரும்பாமல்
கக்கூஸில் கழிந்தது
சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.


எதையோ தேடுகையில்
புடவை தலைப்பில்
பொத்தி வைத்திருந்த
புகைப்படம்!
எனக்கும் அவள்
ஞாபகம் வந்தது!!

குனிந்து கீழே விழுந்த
காசை எடுக்கையில்
யாராவது பச்சைக்குதிரை
தாண்ட மாட்டார்களா?
என்ற ஏக்கமும்!!

Monday, January 25, 2010

மானிட்டர் பக்கங்கள்------25/01/2010


ஆதவன் படத்தில் நடித்த சூர்யா, வடிவேல் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு. நயன் தாரா தப்பி விட்டார். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சந்துல சிந்துதான். ஆனால் ஆதவன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் சோதனை இல்லை. அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்.

சக்கரத்தாழ்வாருக்கு நிறைய சக்தி உண்டு. அதுவும் மதுரை மோகூர் கோவிலுக்கு எக்ஸ்ட்ரா சக்தி என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.நானும் ஒரு முறை போயிருக்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவரவர் வினைக்கேற்ப பலாபலன்கள் கிட்ட பெறுகின்றனர். ஆதிசங்கர்? இவர் ஒரு திமுக எம்.பி. இவர் நெற்றியில் இருந்த குங்குமத்தை பார்த்து ஒருவர் கிண்டலடித்தார். என்ன அது இரத்தமா என்று? ஆனால் இந்த பகுத்தறிவு சூரியனின் மூத்த வாரிசு(இரண்டாவதின்) அதிரடி மன்னனாய் இருந்தவர் இன்று ஆன்மீக செம்மலாய் மாறி வருகிறாராம். நல்லதுதான். இவரே இப்படித்தான். வீரமணியே வீட்டுக்கே கால் கோள் பூஜை நடத்தினாராம். திருட்டு சைவைப்பூனைகள். அண்ணா பெயரை சொல்லி விநாயகசதுர்த்தி அன்று சேனல் ஆரம்பித்தவர்கள் அல்லவா! பையனை கண்டிக்க சொல்லுங்கள் பார்ப்போம்! மதுரை பற்றி எரியும் என்பது தெரியும் அவருக்கு. அப்புறம் இந்த தை முதல் நாளை எத்தனை பேர் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடினார்கள்?

கொஞ்சம் கல்கட்டா! நான் போனபோது அதுதான் பெயர். ஆனால் அப்போதே ஒரு டாக்ஸி டிரைவர் கொல்கத்தா என்றுதான் உச்சரித்தார். ஹவுராவில் இறங்கி லாட்ஜில் ரூம் போடும்போது மாடியிலிருந்து சில ரசகுல்லாக்கள் ஸ்வெட்டர் போட்டு இறங்கி கொண்டிருந்தனர்.தோல் பிசினஸ். சோத்துக்குத்தான் அலையவேண்டியிருந்தது. ஒரு ஓட்டலில் பூரி என்றவுடன் எகிறிகுதித்தேன். ஆனால் தொட்டுக் கொள்ள அவன் தந்தது அல்வா!!

அங்கு சைனா டவுன் என்று ஒரு ஏரியா. முற்றிலும் சீனர்கள். அவர்கள் வழிபாட்டு தலங்கள். சிக்கலான அந்த உணவு. சிலருக்கு தமிழும் தெரிந்திருக்கிறது. காரணம். அவர்களின் தோல் தொழில். இங்கு வாணியம்பாடி, நாகல்கேணி, ஆம்பூர் தொடர்புகள். என்னை அழைத்து போன நண்பரும் ஒரு டேனரியின் முதலாளி. ஒரு மொழிபெயர்ப்பாளானாக போனேன்.நீங்கள் மஜ்னு திரைப்படம் பார்த்தால் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சின்ன மண் கப்பில் டீ கொடுப்பார்கள். கூடவே கொஞ்சம் இனிப்பும். சலங்கை ஒலியில் கமல் ரீயாக்‌ஷன் ஞாபகம் வருகிறதா? அந்த பானா…பானா..

சோனாகஞ்ச். மகாநதி மூலம் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் இன்னொரு இடம் போபசார். இரண்டு இடங்களிலும் தோல் பிசினஸ்தான். கையில் வில்லை கட்டியிருக்கிறார்கள். டாக்டர் சர்ட்டிபிகேட்டும் இருக்கிறது. துணி போட்டு குளிக்கலாம். இல்லை அவுத்து போட்டும். ரிஸ்க் இல்லை.நான் சும்மா அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்.(நிசமா)

முக்கியமான மேட்டர். அங்கு டிராபிக் அதிகம். நம்மூர் மாமாக்கள் போல் வண்டியை நிறுத்தி அது ,இது என்று கேட்கவே முடியாது. காரணம். ஒரு வண்டி நின்றால் அவ்வளவுதான். சிட்டி ஜாம்.

நாங்கள் போனபோது ஒரு டிராம் லைனுக்கு நடுவே ஒரு போலிஸ் ஜீப், இரண்டு அம்பாசிடர் கார்கள் புகுந்து போயின. எங்கள் டாக்ஸி டிரைவர் சொன்னார். பாசுஜி போகிறார் என்று!அவ்வளவு எளிமையான மனிதர். ”ரெட் ராயல் சல்யூட் காம்ரேட்”

காஞ்சிபுரம் தேவநாதன் சிடி ஐந்து லட்சம் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. அடுத்து என்.டி.திவாரியின் சிடியும் தயாராகி விட்டதாம்.அந்த சனியனை கிளிப்பிங்ஸ் மட்டும்தான் பார்க்க முடிந்தது. சிடியை கொண்டு வாங்கப்பா சீக்கிரம். நம்மூர் அமைச்சர்கள் சிடியும் இருந்தால் பார்க்கலாம். வரும்.

மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். ராம்ஜியின் ஷோ. பி.சி. ஸ்ரீராமுக்காக திரையிடப்பட்டது. அன் கட் வர்ஷன்.அதில் பிசிக்கு பிடித்ததும் ரீமாதானாம். நான் விட்டு கொடுத்து விட்டேன்.போர்க்களம் நாயகிதான் இப்போதைக்கு. படம் சும்மா அதகளம்தான். கொஞ்சம் ராமயணம், மகாபாரதம். ப்ரூ காபி மாதிரி பர்பெக்ட் கலவை. அந்த கலர் டோன். நான் தாடிக்கு அடிக்கும் கார்னியரில் கொஞ்சூண்டு மருதாணி பவுடர் கலந்த மாதிரி. கிஷோரின் உடல் மொழியும், குரலும் படத்திற்கு மிகப்பெரிய பலம். நாயகியின் முகத்தையே சரியாக காட்டவில்லை. பொழைக்க தெரியாத இயக்குநர். கலை இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். மீண்டும் பார்க்க தூண்டிய படம். வாழ்த்துக்கள் சரோஜ்!!


டிஸ்கி கவுஜை:

கூட்டத்தை வகுந்து

உள்ளே போனேன்!

நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ!

பெரிசா ஒன்னும் அடியில்லை

ஆங்காங்கே திருப்திகள்!

எனக்குத்தான் ஏதோ

ஏமாற்றம்??

Saturday, January 23, 2010

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க


இன்னைக்கு முடிவு பண்ணிடலாம்.

ஏன் அவ்வளவு அவசரம்? இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே!

இல்லை. எனக்கு இதுக்கு மேலே பொறுமையில்லை. ஆனா ஒன்னு நல்ல முடிவா இருக்கணும்.

உனக்கா?

ரெண்டு பேருக்குமே!

அதெப்படி ரெண்டு பேருக்கும் இருக்க முடியும்? எனக்கு பிரிய விருப்பமில்லை.

ஆனா எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை.

என் கிட்ட என்ன குறை?

நிறைய! எனக்கு சொல்லத் தெரியலை. விவாகரத்துதான் ஒரே வழி.

நாம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். விரும்பித்தானே?

விரும்பியா? என் விதி!

அப்ப எனக்கு?

எனக்கு உங்க கிட்ட பேச பிடிக்கலை.

அப்ப குழந்தை?

இப்ப என்ன பிறந்துடுச்சா என்ன? கலைச்சிடலாம்!

நான் பேர் கூட வச்சிட்டேனே.

மறந்துடுங்க.

சரி. போதும். சாப்பாடு ரெடியா? பசிக்குது.

நா என்ன சமையல்காரியா உங்களுக்கு?

என் வீட்டுக்காரிடி

நானும் டா போடுவேன். மரியாதை கொடுத்து..

உனக்கென்னடி மரியாதை! அந்த அமிர்தாஞ்சன் பாட்டிலை எடு.

ஏன்? தலைவலிக்குதா? டீ போட்டுத் தரவா?

உனக்குத்தான் டீ போட்டா பிடிக்காதே!

ரொம்ப அறுக்காதீங்க. மழை வர மாதிரி இருக்கு. மாடியிலேர்ந்து துணியை எடுத்து கிட்டு வாங்க.

என் துணியை மட்டும்தான் எடுப்பேன். உன்னுதை நீ போய் எடுத்துக்க..

என்னங்க..வீட்டுல விருந்தாளியை வச்சுகிட்டு இப்படி சண்டை போடலாமா?

விருந்தாளியா? அவர் போய் அரை மணி நேரம் ஆச்சு. நல்ல ஐடியா கொடுத்தடா செல்லம். ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க.

Friday, January 22, 2010

10 தூக்க மாத்திரைகள்


துரத்துவது யார் என்று
திரும்பி பாராமலே
அனுமானிக்க முடிகிறது

அறிந்தும் அறியாமலும்
செய்த அத்தனையும்தாம்
அரூபமாய்!

கடல் மலை தாண்டி
உயிரை பதுக்க
ஓடுகிறேன்

சின்னதாய் தேங்கியிருந்த
கோணமற்ற அந்த
சிறு குளத்தில்
முகம் பார்க்கவும்
சலக்கென்று குதித்து
ஒலியெழுப்பவும்தான்
அதீத ஆசை!

----------------------------------------------

கனவுகள் விற்கலாம்
என்று கடை பரப்பினேன்
விலையென்று ஒரு
நிர்ணயம் இல்லை

வந்தவர் எல்லோரிடமும்
அதுவே இருந்தது.

உனக்காக ஒன்று
கண்டு தருகிறேன்
வாங்குகிறாயா?
காதில்தான் கேட்டேன்!

சினத்தை காட்டி
சீ என்று உமிழ்ந்தான்
வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ?

Thursday, January 21, 2010

மு.கவின் பழைய படங்கள். புதிய கமெண்ட்கள்




.தலைவரே டி.ஆர் .பாலுன்னு கூப்பிட்டவங்க, இப்ப நீ.யார் ஆளுன்னு கேக்கறாங்க! பார்த்து செய்யுங்க..




தமிழ்நாட்டையும், டெல்லியும் இவங்களுக்காம்!. நாங்க சென்னையில் சங்கமமாயிடனுமாம். இந்த பக்கம் திரும்பட்டும் . வச்சுக்கறேன்.



இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா?



ஆந்திரா கதை வேற.. தமிழ்நாட்டை மூன்றால்லாம் பிரிக்க முடியாதும்மா!!...





சொன்னா நம்புங்க தலைவரே! இளங்கோவன் உங்களை ஒண்டிக்கு ஒண்டியெல்லாம் கூப்பிடலை.. புது சட்டசபையில் டீக்கடை கேண்டீன் காண்ட்ராக்ட் .பாத்து செய்யுங்க.





இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க வேண்டியிருக்கு..




ஓய்வுன்னு நான் சொன்னது. அப்பப்ப இப்படி உட்கார்ந்துக்கறதைதான். இந்த வாரம் மானாட , மயிலாட பார்த்தீங்களா?






இலவசங்களை அள்ளி விட்டாச்சு. அழகிரியை அவுத்து விட்டாச்சு. அம்மாவை ஆப்படிச்சாச்சு. அய்யாவை வெம்ப விட்டாச்சு. கேப்டனை கேலியாக்கியாச்சு. சோனியாவை சொக்க வச்சாச்சு. அப்புறம் என்ன? இனிமே படுத்துகிட்டே ஜெயிப்போம் இல்ல!!

Wednesday, January 20, 2010

அசல்.................ஒரு போளி பார்வை


அசல் பற்றி விமர்சனம் எழுத சொல்லி நண்பர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். மெயிலிலும், கைபேசியிலும். டக்ளஸ் கோவிச்சிக்குவாரோ என்று முதலில் தயங்கினேன். சரி. ஆகறது ஆகட்டும். நட ராஜா.

மேற்கு மாம்பலத்தில்தான் முதல் அசல் போளி கடை இருந்தது. அதன் பெயர் வெங்கட்நாரயணா போளி ஸ்டால். பருப்பு போளி, தேங்காய் போளி இதெல்லாம் சிறப்பு ஐட்டங்கள். அதன் பின் ஓம்பொடி, காராசேவு, பாதுஷா. அப்புறம் மிளகாய் பஜ்ஜி, உருளைகிழங்கு போண்டா என்று தூள் கிளப்பினார்கள்.

அதன் வெற்றியை பார்த்து புற்றீசலாக போலி போளிகள் கிளம்பினார்கள். டி.கல்லுப்பட்டியிலிருந்து கிளம்பி வந்த ஆசாமி பெங்களூர் ஐயங்கார் பேக்கரி ஆரம்பிப்பதை போல், ஆளாலுக்கு பெயருக்கு பின்னால் கிருஷ்ணா ,நாரயணா என்றெல்லாம் கடைகளை பரப்பினார்கள். இவர் அவரின் மச்சான். இப்ப தனியா போயிட்டாருன்னு மக்களாகவே ஊகித்து கொண்டனர்.(ஊகித்தா? யூகித்தா?)

ஆனாலும் என்னால் அசலுக்கும், போலி போளிக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடிந்தது. பின்ன? வேட்டைக்காரன் ரேஞ்சுக்கு எல்லா கடைகளிலும் ருசி பார்த்திருக்கிறேன். பார்சல் வாங்கி கொண்டு போய் காரில் உட்கார்ந்து மானிட்டருடன் சேர்த்து அமுக்கியதுமுண்டு.

அசல் படத்தின் கதைக்கும், மேலே எழுதியதை நீங்கள் ஸ்கிரோல் பண்ணாமல் படித்ததற்க்கும் ஒரு ஓற்றுமை இருக்கிறது. போக் ரோடில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் சரக்கு அடிக்கும்போது சிவாஜி பிலிம்ஸ் ஆட்கள் இருவர் போலி சரக்கின் உபயத்தில் அசலை பற்றி கொஞ்சம் அலசியதை நானும் அதே பாடாவதி சரக்கின் உபயத்தில் காது கொடுக்க நேர்ந்தது.

அசல் அஜீத்துக்கும், போலி அஜீத்துக்கும் இடையில் நடக்கும் அதிரடியான சண்டைக் காட்சி மட்டும் 15 நாட்கள் படமாக்கப்பட்டதாம். கொரியன் ஸ்டண்ட் இயக்குநர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். சிகரெட் வேணுமா பாஸ் என்று அவர்களிடம் குறுக்கிட்டேன். ஜக்குபாயை இணையத்தில் வெளியிட்ட கிக்குபாயைப் போல் என்னை பார்த்தார்கள். நீங்க பிரஸா ? என்று கேட்டார்கள். இல்லை. நான் தலைக்கு மேல் சுற்றிய பேனை (எப்படி வேணும்னாலும் அர்த்தம் எடுத்துக்கங்க!!) சிம்பாலிக்காக காட்டினேன். நீங்க பாங்காக் போனீர்களா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்! இன்னொரு குவார்ட்டர் சொல்லுங்க! சேர்ந்து போயிடலாம்!


அசல் எந்த ஒரு ஆங்கில படத்தின் ஜெராக்ஸ் என்று தெரிந்து கொள்ள பிப்ரவரி 5 வரை காத்திருப்போம். ஆனால் ஷமிராரெட்டி என்கிற பருப்பு போளியும், பாவணா என்கிற தேங்காய் (மல்லுப்பா!) போளியும் அசல் சுவையாய் இருப்பார்கள் என்பதை வெங்கட்நாரயணா மீது ஜொள்ளீயம் செய்கிறேன்.

Tuesday, January 19, 2010

””ஆ”” ஜீரத்தில் ஒருவன்....நான் எழுதிய கதை??


இந்த கதை முழுக்க என் கற்பனையே! சேர, சோழ, பாண்டியர்கள் என் மீது வழக்கு தொடர்வதாக இருந்தால் சென்னை ஜிரிடிக்‌ஷனில்தான் தொடுக்க வேண்டும். ஏன் எனில்
எனக்கு அங்குதான் சில வாய்தா மற்றும் தேங்காய் மூடி வக்கீல்களை தெரியும்.(வாசு விரைவில் கோர்சை??(படிப்பை சொன்னேன் வாசு)முடித்தால் எனக்கு ஆஜராகலாம்.
பீஸாக அய்யனார் கம்மா மற்றும் கோவில் மிருகம் சன்மானம் உண்டு.

டெல்லி. சி.பி.ஐ. தலைமை நிலையம். அங்கிருந்து ஒரு ரெட் அலர்ட் சென்னை காவல்துறை தலைவருக்கு பிறப்பிக்கப் படுகிறது. ஆனால் அவர் சீட்டில் இல்லை.

வள்ளுவர் கோட்டத்தில் முதல்வருக்கு நடை பெறும் ஒரு பாராட்டு விழாவில் கவிதையாற்றி..இல்லை கடைமையாற்றிக் கொண்டிருந்தார். ரமணா படத்தில் வரும் யூகிசேது போல் ஒரு புத்திசாலி கன்ஸ்டபிள் அந்த செய்தியை ரிசீவ் செய்கிறார்.

செய்தியின் சாராம்சம் இதுதான். ராமேஸ்வரம் கடற்கரை ஓரத்தில் இருக்கும் சவுக்குத் தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆயுத குவியலை பயங்கரவாதிகள்
தோண்டி எடுக்கப் போடுகிறார்கள். அது மிகப் பெரிய நாச வேலைக்கு உபயோகப்படுத்தப் படலாம்.

டைட்டில் போடப்படுகிறது. பார்த்திபன் அரசவை. அதாவது சோழனின் தர்பார்.அரச நர்த்தகி ஆண்ட்ரியாவுக்கு அலங்காரம் செய்யப்படும் காட்சிகள் இண்டர்கட்டில். கலை
இயக்குனர் சந்தானம் உருவாக்கிய மகரயாழை சோழன் மீட்டியபடி பாட ஆரம்பிக்க, தேவதை போல் ஆண்ட்ரியாவின் நடனம்.மிக பிரமாண்டமான செட். தத்ரூபமாய் சோழ
அணிகலண்களும், அணங்குகளும் அற்புதம். சந்தானத்திற்கு பெரிய கோவில் வாசலில் ஒரு சிலையே வைக்கலாம்.

காட்சி மாறுகிறது. மீன் கொடி முகப்பில் இருந்து காமெரா ஜீம் பேக்.பாண்டிய நாடு.பாண்டிய அரசவை. அங்கும் ஒரு ராஜ நர்த்தகி.சோழர்களின் குறியீடாய் சிலர்.
திருக்கை சவுக்கால் அடி வாங்கி கொண்டு ஆடுகிறார்கள். கால் தவறி இடறி விழுபவர்களை பாண்டிய வீரர்களின் வாள் சிரசேதம் செய்கிறது. இந்த அளவு இரத்தமும்
வன்முறையும் இதற்கு முன் தமிழ் சினிமாவில் வந்ததில்லை. சபையில் இருக்கும் ஒரு அறிஞர் சற்றே கோபமாய் பாண்டியனை பார்த்து கேள்வி எழுப்புகிறான். ஏன்?

இவர்களுக்கு இந்த கொடுந்தண்டனை ஏன்என்று! திரைச்சீலைகளில் ஸ்லைடு ஷோ போல் காட்சிகள் விரிகிறது.ஜென்மப் பகைக்கான காரணம் சற்றே புரியாத தமிழில் பிண்ணனி
விவரிப்புகளாய்!!


நவீன களத்துக்கு கதை நகருகிறது.ஹைடெக் உடையணிந்த உயரமான வில்லன்கள். சிலரிடம் கொஞ்சம் அன்னிய தேசத்தின் சாயல்.

“சோழன் புதைத்து வைத்திருக்கும் மொத்த தங்கத்தின் மதிப்பு கிட்ட தட்ட 5000 டன்கள்.”

யார் சொன்னது?

மெக்கனாஸ்கோல்ட் திரைப்படத்தின் புகழ் பெற்ற வசனமான “தி மேப் சேஸ்” ராயல் சிகாரை பற்ற வைத்துக் கொண்டே பிரதாப் போத்தன் சொல்ல, ரீமா தன்
கையிலிருக்கும் விஸ்கியில் கொஞ்சம் சிகார் சாம்பலை தட்டிக் கொள்கிறார். அப்போது ஒரு சோம்பல முறிக்கிறார் பாருங்கள்.கொஞ்சம் ரஷ்யன் ஆங்கிளிலில் வைக்கப் பட்ட
ஷாட் அது. எந்திரிச்சு (நாந்தான்) பாத்ரூமுக்கு போலாமா என்று தோன்றியது.

சரி . அதை எப்படி அடைவது?

ஒரே வழிதான் .இருக்கு.பாண்டிய வம்சத்தில் மீதியிருக்கும் 20 நபர்களை (அய்யா! இது பேண்டசி..) கண்டு பிடித்து பலி கொடுக்க வேண்டும்.

யாரிடம்?

12 வது பிறவி எடுத்து பழி வாங்க காத்திருக்கிறானே! சோழன் அவனிடம்!

அந்த 20 பேர்கள் யார்?


இடைவேளை..(இதுக்கு பிறகு பார்ப்கார்ன் காதில் சுற்றப்படும்)


பிளாஷ் கட்டில் சில உள்ளங்கைகள் காட்டப்படுகிறது. மிக உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே மீன் வடிவிலான மச்சம் தெரிகிறது.

அதன் பின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வுதான். அடுத்தடுத்து இரண்டு பாடல்கள். அதில் மனதில் ஒட்டுவது “மாலைநேரம் “ மட்டுமே பிளவுப் பட்ட மார்பின் வழியே
வழியே மழை நீரை கார்த்தி தான் நாக்கில் வாங்கி சுவைப்பதும், ஆண்ட்ரியாவின் கண்களில் வழியும் காமமும் கிரேக்க புராணங்களில் வரும் சில வர்ணனைகளை
நினைவூட்டுகிறது.

கதையில் ட்விஸ்ட் இல்லையா? என்று கேட்பவர்களுக்கு. நிறைய. முதலில் ஆபத்தான வளைவுகளில் கேமரா பயணிக்கிறது. ஆம்.ரீமா, ஆண்ட்ரியா மற்றும் கிரேக்க
தேவதைகள் போன்ற சில ஜீனியர் நடிகைகள்.


கற்குகை போன்ற செட்டில் கார்த்தி தோளில் மலைப்பாம்பை போட்டுக் கொண்டு ரீமாவுடன் ஆடும் ஆட்டம். அப்பட்டமான காமக்குறியீடு. உச்சகட்டமாய் பாம்புகள் புணரும் காட்சியும் உண்டு.


செல்வா ! இதைப் போன்ற கதையை படம் எடுக்க முதலில் நிறைய பணம் வேண்டும். அப்புறம்தான் தைரியம்!!

அந்த 20 பாண்டிய நாட்டு வாரிசுகள் யார்? அவர்களை எப்படி இனம காண்கிறார்கள் என்பதெல்லாம் வழக்கமான களம்தான்.ஆனால் அவர்களை பலி கொடுக்க அந்த பழைய
சோழனிடம் ஒப்படைத்த பின் இவர்களுக்கு திடிரென்று ஒரு ஞானோதயம் வருகிறது. ஒரு அசரிரீ வடிவில்.எறிகல் போல் ஒரு பொருள் வானத்திலிருந்து ரீமாவின் மேல்
விழுகிறது. அதன் பின் அவருக்கு கிடைக்கும் அசாத்தியமான அனுமாஷ்ய சக்தியும், தொடர்ந்து ரீமாவின் வசனங்களூம் எக்ஸ்லண்ட். பெண்டாஸ்டிக்.


இத்தனை நாள் நம்மை நாமே காட்டி கொடுத்து அழித்துக் கொண்டது போதாதா? இன்னும் எத்தனை தலைமுறைக்கு இதை தொடர்வது? உலகம் முழுதும் நம் தமிழினத்தை
அழித்தொழிக்க கங்கணம் கட்டி திரிகிறார்கள். நாம் ஒன்று படுவோம். சதியை முறியடிப்போம். லாஜிக் இல்லாவிட்டாலும் தியேட்டரில் பின் டிராப் சைலன்ஸ்.அனைவரின் ஆயுதங்களும் எதிரியை நோக்கி திரும்பட்டும் என்ற முழக்கம் கேட்கும்போது அரங்கில் ஒலித்த கைத்தட்டல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


(நான் முழுக்கதையையும் எழுதவில்லை.அரங்கில் படம் பார்த்து ரசியுங்கள். தலைவர் திருட்டு விசிடியை ஒழித்து விட்டாராம்)

Monday, January 18, 2010

”நீ”


நீ என்ற சொல்லை
எப்போது முதலில்
கேட்டோமென்று
நினைவிருக்கிறதா?

நீயுமா என்றே
அடிக்கடி கேட்கப்படுகிறோம்

உரிமைகள் நீ என்று
அழைக்கும் போது
ஏற்றுக் கொள்கிறோம்

முரண்களில்
தே நீ சினமூட்டுகிறது

நெருக்கத்தின் வெளிப்பாடாகவும்
வெறுப்பின் உமிழ்தலாகவும்
”நீ” அடையாளப்படுத்தப்படுகிறது


நான் மற்றும் நாமுக்கு
நீ என்பது
ஆரம்ப எழுத்தாகவே...


எல்லோரும் நிச்சயம் கேட்பீர்கள்.
நீ என்ன சொல்ல வருகிறாய் ?
நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!




Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன்...விமர்சனமல்ல


இன்ஷியல் கொடுக்காத அப்பனும், சுய இன்பத்துக்கு கூட லாயக்கில்லாத...ன்னியும், பாதி பால் கொடுத்த நிலையில் தன் முலையை கள்ளக் காதலுக்கு சப்ப கொடுத்த அன்னையும் என்று எழுதுவதுதான் பின் நவீனத்துவம் என்றால் இந்த விமர்சனமும் அப்படித்தான்.

முதலில் செல்வா! நீங்கள் ஆண்ட்ரியாவிடம் என்ன கண்டீர்கள்? அவள் கண்ணாடி பிரேம் மேல் உங்களுக்கு பிரேமையா? ரியலி இட் இஸ் எக்ஸ்சலண்ட். அப்புறம் ரீமா ! நேற்று என் மனைவியிடம் ரீமாவிடம் பிரபோஸ் செய்ய போகிறேன் என்று சொன்னேன். “உன்” மூஞ்சியை எனக்கு பிடிக்கலன்னு எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். ஆனா ரீமா சொல்ல மாட்டா. அவளுக்கு தமிழில் சொல்லத் தெரியாது. ரீமா ஆயிரத்தில் ஒருத்தி. அவள் உடல் மொழியும், உடலின் மொழியும், மொழியினாலான அவள் உடலும், அவள் இல்லை என்றால் என் சங்கை நானே அறுத்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குகிறது.

கொஞ்சம் சினிமா! ஐஸ்வர்யாராய் மேல் நான் காதல் கொள்வது அல்லது காமூறுவது என் தனிப்பட்ட ஆசை. அதை அவள் எப்படி உள்வாங்குகிறாள் என்பதுதான் சிதம்பர ரகசியம். ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படித்தான். அந்த கதையை உள்ளெடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கிருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில காட்சிகளில் செல்வாவாவை புணரலாமா என்று எனக்கு தோன்றியது.

ராம்ஜி! என் நெருக்கமான தோழன். நான்கு பெக்குகளுக்கு பிறகுதான் பெயரையே சொல்லுவார். கொஞ்சம் ரிசர்வர்டு டைப். அவரின் வார்த்தைகள் நெருங்கியவர்களுக்கு மட்டுமே ரிசர்வ் செய்யபட்டது. ஆயிரத்தில் ஒருவனில் அவரின் கலர் டோன் பி.சி. ஸ்ரீராமுக்கு கொஞ்சம் பெருமையும், நிறைய பொறாமையும் ஏற்படுத்தலாம். ராயல் சல்யூட் ராம்ஜி. ரீமாவை எத்தனை முறை உங்கள் கண்கள் கற்பழித்திருக்கும் ?(உடல் சேர்க்கைளை நான் நம்புவதில்லை)


கோலாபாஸ்கர் ! உங்கள் கத்திரியை கொஞ்சம் இரவல் கொடுங்கள். என் மீசையை திருத்திக்கொள்ள. திரும்ப தரும்போது சாணை பிடித்து தருகிறேன்.

ஜி.வி. பிரகாஷ். பிண்ணனி இசையில் இன்னும் கவனம் தேவை. நிச்சயம் அடுத்த விமர்சனத்தில் இந்த வரிகளுக்கு தேவையிருக்காது.


செல்வா ! திரைக்கதையில் கொஞ்சம் குழம்பியிருக்கிறீர்கள். வெளியிலிருந்து எச்சில் துப்புவது எளிது. ஆனாலும் சொல்கிறேன். சரித்திர பிழை நிறைய இருக்கிறது. சோழன் பாண்டியன் விவகாரத்தில். வியாபாரத்திற்காக முள்வலி முகாமை இணைத்தீர்களா? எக்ஸ்டசியாய் காமத்தின் வெளிப்பாடு காட்சி. ரீமாவிற்கும், எங்கள் ரா.பார்த்திபனுக்கும் இடையே நடக்கும் “என் வாளும் ,உன் விழியும்” மன்னிக்க “என் குழியும்” சந்தித்தால் வாய் வழியே வெறும் பாராட்டு பொருத்தமாயிருக்காது. அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்.

முதல் முறை சந்திக்கும்போது சிலரின் மேல் வெறுப்பு வரும். ஆனால் அதைப் பற்றியே யோசிக்கவும் வைக்கும். அதுவே காதலாகி கசிந்துருகும். ஆயிரத்தில் ஒருவனும் அப்படித்தான். என் குடியின் அளவை இந்த படம் அதிகபடுத்தி விட்டது. மீண்டும் ராம்ஜியின் ஷோ இருக்கிறது. அங்கும், மீண்டும் தியேட்டரிலும் பார்க்க ஆசை.

ரீமா! சத்யம் தியேட்டரில் தவறவிட்ட ஒரு பொருளில்லாத பொருள். நேற்றிலிருந்து லப் டப் கேட்கவேயில்லை. சைலண்ட் மோடில் இருக்கலாம். அந்த கறுப்பு ஜாக்கெட்டில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நானே கை விட்டு எடுத்துக் கொள்கிறேன்.

Wednesday, January 13, 2010

நாம்


என் வழியெங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு வேட்கையோடு..

இங்கு நான் என்பது
நீயும்தான்

அறியாமல்
அதன் பலியாகிறோம்
தெரிந்தே அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

குருஷேத்திரம்’ முதல்
தொடர்கதையாய் வரும்
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே.

Tuesday, January 12, 2010

நான்


எழுத்துக்களை கலைத்துப் போட்டு
வார்த்தைகளை வார்க்கும்
சிறுபிள்ளை விளையாட்டை
திரும்ப ஆடும் ஆசை

இக்கணம் தோன்றிய
அத்தனையும் இங்கு
தனித்தனி எழுத்துக்களாய்தான்

இதுவரையிலான நிகழ்வுகளிலிருந்து
சில எழுத்துக்கள்
சிதறி கிடந்தது

பொருத்தமான வார்த்தைக்கு
கொஞ்சம் மெனக்கெடத்தான்
வேண்டியிருந்தது

இறுதியில் எஞ்சிய ஐந்து வார்த்தைகள்

4.திமிர்
1.ஆணவம்
3.அகம்பாவம்
2.தற்பெருமை
5.நான்

இரண்டெழுத்தில் ஒரு
வார்த்தையை

“நான்” தேர்ந்தெடுத்தேன்.

Monday, January 11, 2010

மானிட்டர் பக்கங்கள்........11/01/2010


புத்தகக் காட்சி நடைபெறும் இடத்திற்கு எதிரில் பிளாட்பாரத்தில் நிறைய பழைய புத்தக கடைகள் முளைத்திருந்தன. சல்லிசான விலையில் அருமையான பொக்கிஷங்கள் கிடைத்ததாக ஜ்யோவ்ராம் எழுதியிருந்தார். புத்தகக் காட்சி அரங்கிலும் சில ஸ்டால்களில் குறிப்பாக சிற்றிதழ்களின் பழைய பிரதிகள் பாதி விலைக்கு கிடைத்தது. உன்னதம், பாடம் என்று சில இதழ்களை நானும் வாங்கினேன். விகடன் விருது பெற்ற உன்னதம் ஆசிரியர் தோழர் கெளதம சித்தார்த்தனுக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டும், வாழ்த்துக்களும்.

உள்ளே இன்னொரு பழைய பேப்பர் கடையும் இருந்தது. இதுவரை அவர்கள் வெளியிட்ட 16 இதழ்களின் விலை 40 ரூ மட்டுமே. அதன் கூட ஆச்சி மசாலாத்தூள் இலவசமாம். அரங்கில் திரும்பிய இடஙகளெல்லாம் அந்த பத்திரிக்கையின் விளம்பரம்தான். தொலைக்காட்சிகளிலும் தூள் பரத்தினார்கள் ஆரம்பத்தில். ஒன்றரை லட்சம் விற்றது போக எஞ்சியதை இப்படி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் போலும். பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்.

அறிவித்திருந்தபடி பதிவர்கள் கிழக்கில் உதித்தனர். யூத் தலைமையில் அரட்டை கச்சேரி களை கட்டியது. சரமாரியாக பிளாஷ்கள் மின்னியது. பதிவர் சங்கர் விதம் விதமாய் கோணங்கள் வைத்துக் கொண்டிருந்தார். நான் பார்த்தவரை யாரும் மொக்கை பதிவராய் தெரியவில்லை. ஓவ்வொருவரும் தனித்தன்மையுடன் ஷார்ப்பாகத்தான் இருந்தனர். மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை. அவர் அதை விட மொக்கையாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நிறைய புத்தகங்கள் வாங்கினேன். பட்டியல் போடுவதாய் இல்லை. படித்து முடித்தவுடன் அதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!!

சாருவுடன் இரண்டு முறை சோமபானத்தை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. சற்றே திட்டமிடப்பட்ட தற்செயலான நிகழ்வு. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். சிலரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி பேசினார். லத்தீன், தென் அமெரிக்கா இன்னும் பெயர் வராத எழுத்தாளர்களை பற்றி எழுதுகிறீர்களே ? நீங்கள் நிசமாவே படித்திருக்கிறீர்களா சாரு என்று கேட்டேன். முன்னால் இருந்த வெண்ணிலா மீது சத்தியம் செய்தார். வெண்ணிலா ஒரு வகை ஓட்கா..

ஒரு பிரகஸ்பதிக்கு கோபமா. ஆற்றாமையா.. இயலாமையா..என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. மொன்னைக் கத்திக்கு வெண்ணெய் மீது வரும் கோபம் போல் வருகிறது. ஏன் இப்படின்னு சில பதிவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியெல்லாம் காரணம் இருக்குமா சகா என்று கேட்டால் ஒரு வேட்டைக்காரன் சிரிப்பு சிரித்தார். யூத்தை கேட்டேன். அவர் சொன்னதை இங்கு எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். என் கருத்து. ஏரி விழித்திருக்கிறதா என்று சுருட்டை நனைத்து சோதித்த மூடன் சீ..சீடனின் ஞாபகம் வருகிறது.

மக்குபாய்.. மன்னிக்க.. ஜக்குபாய் இணையத்தில் வந்ததை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு பிரெஞ்சு படத்தின் ஈயடிக்காத காப்பி என்று பில்லா(பழைய) பேத்தியதை..மீண்டும் மன்னிக்க.. பேசியதும் செய்தி. படம் ரிலீசானால் (ஒருவேளை) தியேட்டரில் ஈயடிக்கலாம்.
அதன் பொருட்டு நம் டம்மி நட்சத்திரங்கள் முதல்வரை சந்தித்து (கவர்ச்சியாய் நடிகை சோனா சகிதம்) திருட்டு விசிடியை ஒழிக்க மனு கொடுத்தார்கள். திருவாரூர் மனுநீதி சோழனும் மனம் உருகி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது நடந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. அட்லீஸ்ட் ஒரு ஆறு மாதமாவது காத்திருந்து பார்க்க வேண்டும். திருட்டு தடுக்கப்பட்டோ அல்லது ஒழிக்கப்பட்டோ விட்டதா என்று. ஆனால் அதற்குள் பாராட்டு விழா தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. எதற்கு ? பைரைசியை ஒழித்து திரையுலகத்தை ரட்சித்து விட்டாராம். வாழ்த்தவும் விரும்பவில்லை!! வணங்கவும் விரும்பவில்லை !!

ஒரு சுதந்திர போராட்ட தியாகி தமிழர். வயது 85. பென்ஷன் கேட்டு நடையாய் நடந்திருக்கிறார். சுமார் 25 வருடங்களாக. நீங்கள் தியாகி என்பதற்கு சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்கள் போதுமானவையல்ல என்று அரசு தரப்பில் மறுக்கப் பட்டிருக்கிறது. அவர் நீதிமன்ற படியேறினார். அரசு வக்கீலும் சளைக்கவில்லை. எதிராக வாதாடினார்கள். இறுதியில் நீதிமன்றம் பென்ஷன் கொடுக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. பாவம் அவர். ஒரு திரைப்படத்தில் சின்னதாய் ஒரு வேஷம் போட்டிருந்தால் அவருக்கு எல்லா சலூகைகளும் கிடைத்திருக்கும். ரம்பாவையெல்லாம் நினைத்துப் பாருங்கள். கேட்டவுடன் அப்பாயின்மெண்ட். காயங்களுக்கு உடனே ஆயின்மெண்ட்!!

மழை நீர் தேக்கி வைக்க வக்கில்லாமல் கடலில் கலப்பதை பார்த்தால் கண்ணில் நீர் வரும். வீணாகிறதே செல்வம் என்று. அதே உணர்வு எனக்கு ரமேஷ் வைத்யாவிடம் ஏற்படுகிறது. என்னதான் அன்பையும், கரிசனத்தையும் அவரிடம் யார் காட்டினாலும் அவர் இரண்டாய் இருக்கும்போது மட்டுமே அதை ஏற்று கொள்கிறார். திரும்ப இரட்டிப்பாய் நமக்கு திருப்பி அளிக்கிறார். மிக விநோதமான மனநிலை. போன முறை சந்தித்தபோது சேது படத்தில் வரும் பாண்டிமடம் மாதிரியான இடத்தில் என்னை அடைத்து விட்டார்கள் என்று வெதும்பினார். விதி ! மீண்டும் அவர் அங்கேதான்.

லீனாவின் கவிதை நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது போல் நாமும் ஒன்று எழுதினால் எப்படியிருக்கும் என்று சில நண்பர்களிடம் கருத்து கேட்டேன். எழுதிப் பாரேன் என்றார்கள்.முதல் வரியை மட்டும் இன்று எழுதுகிறேன். வரவேற்ப்பை பொறுத்து நீட்டலாம். சீ .. தொடலாம். மறுபடியும் சீ... தொடரலாம்..

தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு
திரிந்து கொண்டிருந்தேன்....

மேற் சொன்ன வரிகளுக்கு நல்ல அர்த்தங்களூம் உண்டு. தப்பிதமாக கற்பித்து கொள்பவர்கள் இலக்கிய உலகத்திற்கு துரோகம் செய்பவர்களாகிறார்கள்.


டிஸ்கி : நண்பர் வெள்ளிநிலா சர்புதீன் கொடுத்த இதழை வாசித்தேன். எனக்கு நிறைய முரண்பாடுகள். சற்று கோபமும் வந்தது. பொது இடங்களில் கொடுக்கப் படும் இன்னொரு மதம் தொடர்பான நோட்டீஸ்களுக்கும் ,அதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. உங்கள் பத்திரிக்கையில் நான் எழுதும் பட்சத்தில் அதிலிருந்து ஒரு வரி கூட பிரசுரிக்கப்படாது என்பது நிச்சயம். நண்பர்களாகவே இருந்து விடுவோம் சர்புதீன்..

டிஸ்கி : 2

தொட்டியிருக்கையில்
குப்பையை ஏன்
பக்கத்தில் போடுகிறார்கள்!?

டிஸ்கி :3 தோழர் மாதவராஜுக்கும், வம்சி பதிப்பகம் பவா.செல்லத்துரைக்கும் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் தொகுத்திருக்கும் அத்தனையும் மகா மொக்கைகள். அதை நான் சொல்லவில்லை. ஒரு நாமக்கல் வஸ்துவின் வாக்குமூலம். ஒரு சந்தேகம் தோழர்? பமாரு, டமாரு,டங்குவாரு என்றெல்லாம் பதியப்பட்ட அதாவது சுமார் ஏழேமுக்கால் லட்சம் தடவைகள் வாசிக்கப்பட்ட இலக்கியங்களை ஏன் நீங்கள்கன்சிடர் பண்ணவில்லை. ஒரு அதிமேதாவியின் புலம்பல்கள் உங்களுக்கு கேட்க வில்லையா? ரோஜா பாக்கு மெல்வது எப்படி என்ற அடுத்த எளக்கியம் தயாராகி கொண்டிருக்கிறது. அதை வெறும் வாயில் மெல்லாமல் வெற்றிலையுடன் மென்று குப்பைத் தொட்டியில் துப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, January 9, 2010

நசுங்கி போன நெஞ்சுக்குழி


வீட்டுக்குள் சுற்றிக்கொண்டேயிருக்கிறது
சாவின் வாசனை.

பெரிசா ஒன்னுமில்லை
பெரிசுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது

இப்பவோ, அப்பவோ
எப்பவோ என்பதே
எல்லோரிடமும் பேச்சு


தாங்கலாம் ஆனால் தங்காது
வைத்தியரின் வாக்குமூலம்

அதுதான் தெரியுமே
அதிலென்ன புதுசு

கஷ்டப்படாம போயிட்டா
நல்லாயிருக்கும்

யார் கஷ்டப்படாம?
மூத்திரம் அள்ளி கொட்டும்
மூத்தவன் சம்சாரத்தின் அங்கலாயிப்பு

சஷ்டி சொல்லுங்க
அப்படியே கொஞ்சம்
சீமைப்பாலை ஊத்திப்பாருங்க.

என்னவோ மனசுல இருக்கு
அதான் இழுத்துக் கிட்டுயிருக்கு
என்னவா இருக்கும் ?

சினை நண்டு விரும்பி
தள்ளுவாரு.
அது அம்மாவாசைக்கு
அடுத்த நாள்தானே கிடைக்கும்

அட! அம்மாவாசைன்னா தங்காது
நண்டை படையல் போட்டுடலாம்
சாவுறதுக்கும் கொடுப்பினை வேணுமய்யா!

எலப் போட்டு
சோத்தை அனுபவிச்சவருக்கு
இருபது வருசமா
கஞ்சி ஊத்தினஅந்த
அலுமியத்தட்டுதான் நசுங்கி
நெஞ்சுக்குழியை அடைச்சுக்கிட்டு
இருக்குன்னு யாருக்குமே புரியலை..


Friday, January 8, 2010

கொஞ்சம் நானும் பேசுகிறேன்.....


மீண்டு புத்தகக் காட்சி. நிறைய வாங்க வேண்டும் என்று நினைவில் இருந்தது எதையும் வாங்கவில்லை. புத்தகங்களின் தலைப்புகளை அழகாக எழுதி , கொஞ்சம் செப்பனிட்டு, அங்கும், இங்குமாக சில எண்டர்களை தட்டினால் , அருமையான ஒரு பின்னவீனத்துவ கதையோ, கவிதையோ, இன்ன பிற அபாயகரமான எழுத்துக்களோ அமைந்துவிடும் வாய்ப்பிருகிறதை கண்டு கொண்டேன்.

இருந்தாலும் தமிழினி மற்றும் வம்சி பதிப்பகங்களில் சில புத்தகங்களை வாங்க வேண்டும். அரங்குகளை பார்க்கும்போது மலைப்புதான் ஏற்படுகிறது. நான் அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சென்று விட்டோம். வேறெங்கே? அங்குதான். அங்கு நடந்த சூடான் விவாதங்களீல் அத்தனை எழுத்து சிகாமணிகளூம் கிழித்தெறியப்பட்டனர் எனலாம்.


பிலிம் சேம்பர் அரங்கில் சந்திராவின் கவிதை தொகுப்பு வெளியீடு. இலக்கியத்தை வளர்ப்பதற்காக அங்கும் சிறிது நேரம். அரங்கில் அஜயன்பாலா பேசுகையில் உயிர்மை கட்டுரையில் அமீரின் அட்டைப் படத்தை போட்டதை காரசாரமாக குறை கூற, நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரங்கில் கொஞ்சம் சலம்பல். அருமை நண்பர் சுகுணா திவாகரும் வந்திருந்தார். ஷோபா சக்தியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். உலகின் அழகிய முதல் பெண் ? லீனாவிடம் கை குலுக்கி அவரின் கவிதைக்கான என் பாராட்டுக் “குறிகளை” தெரிவித்தேன். சுகுணாவை பாருக்கு அழைத்தபோது அநேகமாக அவருக்கு ரோசா ஞாபகம் வந்ததா என்று தெரியவில்லை. ஷோபாவுடன் புத்தக காட்சிக்கு போவதாகவும் ,பின் சந்திக்கலாம். நானே உங்களுடன் நிறைய பேச வேண்டும் என்றும் கூறினார். எனக்கும் நான் மப்பில் ஏதோ அவரிடம் உளறியதைப் போல் இருந்தது. சரியாக நினைவில் இல்லை.

பலமுறை சந்திருந்த சசிகுமாரிடம் “நாம் சந்தித்திருக்கிறோம்” என புன்னகையுடன் தலையாட்டி விட்டு அகன்று விட்டார்.

அடுத்து ஒரு பர்சனல் பிரச்சனை. அது ஏற்கனவே கேபிளுக்கும், அப்துல்லாவிற்கும் தெரிந்திருந்தபடியால் அவர்களூடன் அங்கு போக வேண்டியதாயிற்று. நன்றி இருவருக்கும் !!


வழக்கம் போல்
அலைக்கழித்த இரவு.
அர்த்தமில்லாத கனவுகளின்
ஆங்கார அழுகைகள்

அன்றைய துரோகங்களின்
எஞ்சிய துகள்கள்
தூக்கத்தை சிராய்த்து கொண்டிருந்தன.

முழுக்க திரட்டி
பந்தாய் அடக்கினேன் வாய்க்குள்.

வன்மம் குலையாமல் கண்விழித்து
முகம் தேடி அலைந்தேன்

என்னவோ தோன்ற
காரி துப்பிக்கொண்டேன்
மல்லாந்து படுத்து..

Monday, January 4, 2010

சுவண்ணா?? தியண்ணா??? சூப்பருண்ணா!!!


சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.

முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.

நட்சத்திர வாரம் என்றில்லை, வலைச்சரம் என்னும் வலைப்பூ இருக்கிறது அங்கும் என்னை இதுவரை எழுத அழைத்ததில்லை. முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை. குறிப்பாக தமிழ்மணம் நட்சத்திர வாரம் குறித்துத்தான் வருத்தம். ஆனால் அதில் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட நான் எழுதுவதை நிறுத்த வேண்டிய மனநிலை.

இப்போது அதிகமாய் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்குப் பத்து பதிவுகள் வரை எழுதியிருக்கிறேன். (அதில் பாதி கவிதைகள்). அப்போது தமிழ்மணம் பூங்கா என்னும் இதழை நடத்திவந்தது இப்போதுள்ள பல புதிய பதிவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். வாரம் ஒருமுறை வெளியாகும் பூங்கா இதழில் அந்த வாரத்தின் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும். ஒரு கட்டம் வரை எல்லா பூங்கா இதழ்களிலும் எனது பதிவுகள் வந்தவண்ணமிருந்தன. பிறகு நான் தமிழ்மணத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ”என்னை மாதிரியான முகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து போரடிக்கிறது. தயவுசெய்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துங்கள்”என்று. அதற்குப் பின் பூங்காவில் எனது பதிவுகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் பூங்கா இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் சூடான இடுகைகளில் வந்த எனது ஒருசில பதிவுகளைப் பார்த்தால் அது பெரும்பாலும் அக்கப்போர்களாகத்தானிருக்கும். சில காலங்களின்பின் படித்தால் நான் தேவையில்லாத ஏதோ வெட்டிவேலைகள் செய்திருக்கிறேன் என்று தெரியும். என்நினைவின்படி இதுவரை என்னுடைய பதிவுகள் எதுவும் வாசகர்பரிந்துரைகளில் வந்ததில்லை.

இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.

இந்த நாய்ச்சண்டைகளின் அடிப்படையில் பார்த்தால் நான் ஒரு குறிப்பிடத்தக்க பதிவராகவே இருக்க முடியாது. ஆனால் இந்த வரைவெல்லைகளைத் தாண்டி என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் வாசகர்கள் பல்வேறுதளங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நவீன இலக்கியத்தின்பால் அக்கறையும் கரிசனமும் கொண்டவர்கள் என. சமயங்களில் ‘நான் உங்கள் பிளாக்கை ரெகுலராகப் படிச்சுட்டு வர்றேன்’ என்னும் வார்த்தைகள் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும்போது ஆச்சரியமாக இருக்கும் (அதிர்ச்சியாக அல்ல((-). இதற்கெல்லாம் காரணம் என் எழுத்துதானே தவிர ஃபாலோயர்ஸ் அல்ல.

என் எழுத்தை எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத எதுவொன்றையும் வாசகி/கனுக்குத் தருவதில்லை. என் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியாகவும் பகைமை கொண்டவர்களும் கூட என் எழுத்தின் அடர்த்தியையும் ருசியையும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதான். ஆனால் அதற்கு எழுதிப்பழக வேண்டுமே தவிர பிள்ளை பிடித்துப் பழகக் கூடாது. ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?

நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான். இது பிள்ளைபிடித்து உருவாக்கப்படுகிற பரிந்துரைகள். ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.

இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா? நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.

இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம். தமிழ்மணம் இந்த விருதுகளை நிறுத்திவிட்டு பூங்கா மின்னிதழை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கருத்து. பூங்காவிற்காக நான் கொளத்தூர்மணி, அ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்ற பலரின் நேர்காணல்களை எடுத்து தந்திருக்கிறேன். இப்போது என்னால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் பல்வேறு துறைசார்ந்த பதிவர்களைக் கொண்டு பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களை இடம்பெறச் செய்யலாம். தமிழ்மணத்திற்கு அப்பாலும் பங்களிப்புகளைப் பெறலாம் என்றே கருதுகிறேன்
.
........................................................................................................................................................................
இந்த வார தமிழ்மண நட்சத்திரத்தின் அதிகபிரசங்கித்தனம்தான் மேலே நீங்கள் கண்டது. அநேகமாக நிறைய பேர்கள் படிக்க வாய்ப்பில்லை.அதானால் நான் பதிகிறேன். நாய்சண்டையில் நானும் ஒரு நாயாய் என் பங்குக்கு கொஞ்சம் குலைத்து விட்டு போகலாம் என்று எண்ணம். இதன் மூலம் பதிவுலக நண்பர்களுக்கு சொல்வது வீட்டு நாயாக இருங்கள். தெரு நாயாக இருக்க வேண்டாம். உங்கள் படைப்புகளுக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி. தமிழ்மணத்திற்கு நன்றி.


டிஸ்கி : ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

மானிட்டர் பக்கங்கள்........ 04/01/10


இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது என்கின்றனர் நம் அரசியல்வாதிகள். ஆனால் இந்தியர்களின் பொருளாதார நிலை குறித்து சுரேஷ் டெண்டுல்கர் என்பவர் தலைமையிலான குழு சமர்பித்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்த மக்கள் தொகையில் 37 % பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனராம். கிராமப்புறங்களீல் இந்த எண்ணிக்கை 42% ஆக உள்ளதாம்.மத்திய அரசின் நிதி கடைக் கோடி மக்களை சேர்வதே இல்லை என்பதையே இது காட்டுகிறது. வருடத்திற்கு இரண்டு இடைத்தேர்தல் வந்தால் நிலைமை சரியாகி விடும் என்று நம்பலாம். ஆனால் நம்முர் அரசியல்வியாதிகள் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்றுவிடும் அபாயமும் உண்டு.


வந்தவாசி தொகுதியில் மொத்தம் 21 பேர் 49 ஓ போட்டிருக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 25% வன்னியர் இருக்கும் தொகுதி. ஆனால் ராமதாசு இன்னும் நம்புகிறார். பெண்ணாகரத்தில் தனியே நின்று டிபாசிட்டை கோட்டை விட்டால் கூட திருந்த மாட்டார் போல.அண்ணன் சமீபத்தில் பேசியது. “எத்தனை நாளைக்குத்தான் போயஸ் கார்டன் போய் ‘அம்மா தாயே” என்று கெஞ்சறது. பதிலுக்கு அந்தம்மா “அண்ணே”ன்னு பூச்செண்டு கொடுத்து நடிக்கிறது. அப்புறம் கோபாலபுரம் போய் “அய்யா கலைஞரே..கொஞ்சம் பார்த்து கொடுங்களேன்னு கேட்கிறது.வன்னியனுக்கு, வன்னியன் ஓட்டு போட்டால் போதும். 120 தொகுதிகளிலும் வெற்றிதான் என்கிறார் தமிழ்குடிதாங்கி. ம்ம்ம்..நம்பிக்கைதான் வாழ்க்கை. வீழுங்க..சே..வாழுங்க!!

இது மக்கள் தொலைகாட்சி மேட்டர். மதுரைக்கு அங்கிட்டு நிறைய இடங்களில் சரியாக தெரியவில்லை. வெறும் புள்ளியாய் தெரிகிறது. அதற்கு காரணம் முக்கிய புள்ளி “அ” அண்ணன் . நல்ல நிகழ்ச்சிகள். ஆனால் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. அந்த சேனல் தெரியவில்லை என்பதற்காகவே நான் டிஷ் வாங்காமலிருந்தேன். இப்போது ரிலையன்ஸ் மற்றும் டிஷ் டிவியில் தெரிகிறது போலும். இருந்தாலும் ஆர்வமில்லை. அதில் வரும் பயணம் என்ற தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பிரமோவை பார்க்க வேண்டும்! மிக அருமையாக கட் பண்ணியிருப்பார்கள். எடிட்டருக்கு என் வாழ்த்துக்கள்.

சனிக்கிழமை மீண்டும் புத்தக கண்காட்சி. வம்சி ஸ்டாலில் தோழர் மாதவராஜ் பதிவுலகத்திலிருந்து தொகுத்திருக்கும் புத்தகங்களை வாங்கினேன். அருமை. ஆனால் என் கவிதையைதான் ரொம்ப சுருக்கி விட்டீர்கள். இருந்தாலும் நன்றி தோழர்.

போலாமா ? போலாமே ! எங்க ? அங்கதான் ! சரி ! போனோம். நான், கொத்துபுரோட்டா மாஸ்டர், தம்பிக்கு சில குறிப்புகள் எழுதுபவர், சிவசைலம், வெள்ளைப்பூ, மதுராந்தகம் கவிஞர் மற்றும் அந்த பிரபல சர்ச்சைக்குறிய எழுத்தாளர் சார். போன இடம் டாஸ்மாக். உண்மையில் அந்த இடத்தை பார்த்தால் வாந்தி வரவேண்டும். ஆனால் நாங்கள் மூன்றாவது ரவுண்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்தோம் . வார்த்தைகளை! எழுத்தாளர் பெயரை சரியாக சொல்பவர்களுக்கு பரிசு கிடையாது. சாரு..சீ..சாரி..


துணை முதல்வர் ஸ்டாலினின் இணையதளத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 6,9,446 பேர்களாம்.மொத்தம் 50 க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து அவரை தொடர்பு கொள்கிறார்கள். 60 சதவிகிதம் பேர் பாராட்டியும். மற்றவர் கோரிக்கைகள் முன் வைத்தும். அனைத்தும் நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் நிறைவேற்ற படுகின்றனவாம். வாழ்த்துக்கள் துணை முதல்வருக்கு. ஸ்டாலினின் செயல்பாடுகளும் ஆக்கப்பூர்வமாகவும், விவேகமாகவும் இருக்கிறது என்று சோ பாராட்டியது தப்பேயில்லை. பதவிக்கு போட்டி போன்ற தலைவலிகள் இல்லையென்றால் இன்னும் சிறப்பாக செயலாற்றுவார் என்றே தோன்றுகிறது.

நட்சத்திர ஓட்டல்களில் சில ஸ்பெஷல் சரக்குகள் :

இளம் பெண்களை கவர டக்கீலா. இதை கொடுக்கும் போதே எலுமிச்சை சாறும், உப்பும் உண்டு. ஒரு சிப். ஒரு நக். ஏகாந்தம்தான்.

சூட்டர் : இதை கிளாசில் ஊற்றி எடுத்து வரும்போதே அதில் லைட்டரில் எரியும் தீபம் போல் நெருப்பு எரிந்தபடி இருக்குமாம். அதை அணைத்தவுடன் ஒரே கல்ப். உள்ளெ பற்றிக் கொள்ளும்.

ஆண்களுக்கு ஸ்பெஷல் சிகாரும் உண்டு. அடிஷனல் போதைக்கு 100 % உத்தரவாதம்.

டிஸ்கி கவுஜை :

உன் நண்பர்கள்
எனக்கும் நண்பர்கள்
என் நண்பர்கள்
ஏன் உனக்கு
நண்பர்களில்லை?


என்ன சமைக்கலாம்
என்று தொணதொணத்த
மனைவியிடம்
எரிந்து விழுந்தேன்.

சாப்பிட அழைக்கும்போது
அனிச்சையாய் கேட்டேன்
என்ன சமையல்?


மீண்டும் ஒரு டிஸ்கி : இதெல்லாம் ஒரு கவுஜையா ? என்று பக்கத்திலிருக்கும் அப்பாவியிடம் கடுப்படிக்கும் நண்பர்களுக்கு. இது பிரசுரத்திற்கு அல்ல!!!!


டிஸ்கியேதான் : கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்பது அவரவர் நம்பிக்கை. இல்லையென்பவர் கடவுளின் குதம்,சதம்,பதம் என்றெல்லாம் கவிதை என்று கண்ராவியை எழுதுகிறார்கள். இருக்கிறார் என்று நம்பிகிறவர்கள் யாரை இப்படி வர்ணித்து அதே கண்ராவி களை எழுதலாம்!?

Friday, January 1, 2010

மானிட்டர் பக்கங்கள்........01/01/2010


முதலில் பதிவர் உலகநாதனுக்கு நன்றி. கூடுதல் பணம், நேரம் செலவு செய்து எங்களை பார்ப்பதற்காக சென்னை வந்து திருச்சி போனார். கடல் கடந்து வரும் பதிவர்களின் தர்மப்படி (தர்மம்தானே!!) சீமைச் சரக்கும் வந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நான், கேபிள், சூர்யா, வாசு, கார்க்கி ,பெஸ்கி, மோகன்குமார். இனிமையான மாலைவேளை. இறுதியில் அண்ணன் சிவராமனும் வந்து கலந்து கொண்டு நிகழ்வை மேலும் இனிமையாக்கினார். என்ன இருந்தாலும் இனியவன்.காம் இல்லையா?


உயிர்மை புத்தக வெளியீட்டு விழா. சாருவின் பேச்சில் அனல் பறந்தது. ஆனாலும் யாரும் அதை சீரியசாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. முதலில் ஞானியை ஒரு பிடிபிடித்தார். அம்மாவிடம் பொட்டி வாங்கி கொண்டு அய்யாவை ஐந்து வருடமாக திட்டி கொண்டிருக்கிறார். அடுத்து மாட்டியவர் ஜெயமோகன். ஏகவசனம்தான். புத்தகத்தை பற்றியும் ஓரிரு வரிகள் பேசியதாக நினைவு. இலக்கியத்தை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டியிருக்கிறது !

சுதந்திர போராட்ட காலத்தில் உப்பு சத்தியாகிரகத்துக்கு போனவர்களை விரட்டி அடித்தவரின் பேரன் இன்று காங்கிரசில் மத்திய அமைச்சராக இருக்கிறார். அவர் திரு ஜி.கே. வாசன். அவரின் பாட்டனார் கோவிந்தசாமி மூப்பனார்தான் அந்த புண்ணிய காரியத்தை செய்தவர். தியாகி பரம்பரை. ஆமாம் வாசன் எந்த துறைக்கு அமைச்சர் ? அடுத்த பாராவில் !

சேது சமுத்திர திட்டத்துக்காக இருந்த அலுவலகம் இழுத்து மூடப் பட்டு விட்டது. டி.ஆர். பாலுவின் சபதம் என்னவாயிற்று தெரியவில்லை! கப்பல் ஓடுவதை கலைஞருக்கு காட்டுவேன் என்று கண்ணீர் பொங்க வடித்தவரின் கன்னத்தில்தான் கை வைத்து விட்டார்களே. அப்புறம் அதை பற்றி பேசினால் உம்மாச்சி கண்ணை குத்தி விடும் என்பதாலோ யாரும் சீரியசாக பேசுவதில்லை. (தீவிர பார்ப்பனீயம் தெரியுதா எழுத்தில்!? ). போன வருஷக் கடைசியில் எனக்கு அறிஞர்கள் நிறைந்த சபையில் கொடுக்கப் பட்ட பட்டம் அது. நன்றி நண்பர்களே !!

புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கியாச்சு. வாசு, முத்துவேல் உடன் சென்றிருந்தேன். புத்தகங்கள் நிறைய வாங்க வேண்டும். இன்னும் 10 நாட்கள் இருக்கிறதே. ஒரே ஒரு புத்தகம் வாங்கினேன். சுவாரசியமான புத்தகம். தலைப்புக்கு பொருத்தமாக இருந்தது. அதிலிருந்த ரசித்த ஒரு சிறு பகுதி.

“பாரசீக மன்னன் ஜாம்செட் என்பவனுக்கு திராட்சை மீதிருந்த அளவற்ற ஆசையினால் அதன் பழக் குலைகளை பெரிய ஜாடிகளீல் சேகரித்தான். சிறிது காலம் கழித்து திறந்து பார்த்தபோது அவை ஒரு வித புளிப்பு சுவை கொண்ட திரவமாக மாறிவிட்டிருந்தது. அருகிலிருந்த அறிஞர் பட்டாளம் சாத்தானின் வேலையால் அவை நாசமாகிவிட்டன என்று கூறியது. மனம் வெறுத்த மன்னன் அந்த ஜாடிகளின் மீது விஷம் என்று எழுதி வைத்தான்”

மன்னன் தன்னை வெறுத்ததனால் மனம் உடைந்த பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள எண்ணி அந்த புளித்த திரவத்தை குடித்து விட்டாள் . அது மரணத்திற்கு பதிலாக ஒரு வித பரவச நிலையை உண்டு பண்ணியதாம். மன்னனும் அதை பருகி உணர்ந்து அதற்கு “ஒயின்” என்று பெயரிட்டானாம். ஆகவே ஒயினை மகிழ்ச்சி தரும் விஷம் என்று அழைக்கிறார்கள்.

இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள். வரும் மானிட்டர் பக்கங்களில் பார்க்கலாம். (ரொம்ப முக்கியம்)

டிஸ்கி கவுஜை :

அந்த சிறிய
ஒலிக் குறிப்பிலேயே
வந்துவிட்டாள் தோழி
சீ. சீ. அதற்கில்லை
அங்கே பார் என்றேன்.

சாரி சாரியாய்
அணிவகுப்பதை
இடதும், வலதுமாய்
பிரிந்து தாக்குவோம்.

அடுத்த ஆறுமாதம்
பதுங்கி சாப்பிட
போதுமானதுதான்.

டிஸ்கி 2 : இது கவுஜையா? என்று திட்டி தீர்ப்பவர்களுக்கு. இது எங்கும் பிரசுரத்திற்கு எழுதப் பட்டதல்ல.

டிஸ்கி 3 : எந்த ஒரு நிகழ்வின் முடிவிலும் கொண்டாட்டம் இப்போது வழக்கமாகி விட்டது. அதுதான் ஈரோடு சந்திப்பிலும் நடந்தது. அப்புறம் அடிமுட்டாள்களாகிய நாங்கள் ஈரோட்டுக்கு பகுத்தறிவு பாசறையில் முற்போக்கு பயில்வதற்காக போகவில்லை என்பதை அநியாயமாக குப்பண்ணா மெஸ்ஸில் எங்களுக்காக உயிரை விட்ட நாட்டுக் கோழி மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறோம்.