Saturday, June 27, 2009

கூட்டாஞ்சோறு ...... 27/06/09



அன்றும் வழக்கம் போல் அவன் காலையில் கிளம்பும்போது அவள் சொன்னாள்...எப்போ நீங்க நினைக்கிறது எல்லாம் நடந்து நமக்கு விடியறது...இன்னும் ஒரு 7 மாசம்..அப்புறம் வீட்டுக்கு ஒரு புது ஜீவன் வந்துடும்..ஞாபகம் வச்சுக்கங்க..அவனும்,அவளும் காதல் திருமணம்..வழக்கம் போல் வீட்டுடன் மோதல்,ஓடிப் போதல்...அவள் ஒரு தனியார் பள்ளியில் மிக குறைந்த சம்பளத்தில் டீச்சர்.அவன் திரையுலகில் முன்னுக்கு வர போராடும் ஒரு சராசரி கனவாளி..லட்சியம் நிறைவேறிய பின் தான் திருமணம் என்பதே முடியாதபோது,குழந்தைக்கு கேட்கவா வேண்டும்...ஆனால் அவனுக்கு நம்பிக்கை ..கரு ஜனித்த வேளை ..கனவு நனவாகும் என்று உறுதியாக இருந்தான்..அன்றும் வழக்கம் போல் இரவு வீடு திரும்பும்போது கையிருப்பு 10 ரூபாய்தான்....கதவு தாளிடாமல் இருந்தது..ஒரே ஒரு ஹால் மட்டுமே வீடு...உள்ளே...வலியில் முனகியபடி அவள்...சுற்றிலும் குளமாய் ரத்தம்....மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுக்கு அன்று இரவு அவனுக்கு நிகழ்ந்தவையே சாட்சி...பெண் மருத்துவர்”நீங்க எல்லாம் படிச்சவங்கதானே..அவளோட ரத்த பிரிவு ஆர் எச் நெகடிவ்...மூணாவது மாசத்திலேர்ந்து கட்டாயமா ஹீமோகுளோபின் இங்ஜெக்‌ஷன் போடணும்..என்ன பண்ணிகிட்டிருந்தீங்க..ஆமாம்..என்ன பண்ணிகிட்டிருந்தான் அவன்..கனவுகளை காசாக்கும் முயற்சியில் இருந்தான்...அவள் தீர்மானமாக சொன்னாள்..உங்க லட்சியத்துக்காக நீங்க பட்டினி யிருக்கலாம்..உங்க கூட வந்ததுக்கு எனக்கும் வேற வழியில்லை..ஆனா நம்மளை நம்பி இந்த உலகத்தை பார்க்க இருந்த ஜீவன் என்ன பாவம் பண்ணிச்சு...இப்படி பாதியிலேயே கலையறதுக்கு...அந்த ஒரு வார்த்தை அவன் மனதை மாற்றியது என்றால் அது ஒரு பக்க கதையாய் விடும்...சின்ன வயதிலிருந்து வளர்த்த ஆசை,லட்சியம்,கனவு அத்தனையையும் ஒரே நாளில் குழி தோண்டி புதைத்து விட முடியாது ..என்றாலும் யதார்த்தம் என்று ஒன்று உண்டல்லவா? அவன் பாதை மாறிற்று...ஆண்டுகள் பல கடந்தாயிற்று...இன்று ஒரு சின்ன விளம்பர கம்பெனி…. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் அசதிகள் இல்லை.....மீண்டும் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது அந்த கனவு..நிறைவேற வாழ்த்துங்கள் முகம் தெரிந்த / தெரியாத நண்பர்களே...

”நாடோடிகள்”... மேலே நீங்கள் படித்த கதைக்கும்(நிகழ்வுக்கும்) இந்த திரைப் படத்திற்கும் ஒரு ஓற்றுமை இருக்கிறது..அது காதலின் வெற்றி முழுமையாக வாழ்தலில்தான் என்பதே....ஒரு இயக்குனர் நண்பர் தொலைபேசியில் அழைத்து (நன்றி மகேந்திரன்..)டிக்கெட் வந்திருக்கிறது..நண்பர்கள் வந்தாலும் அழைத்து வாருங்கள் என்றார்..வேலை இருந்தாலும் கேன்சல்...கேபிள்,ரமேஷ வைத்யா இணைந்து கொண்டார்கள்..(இடை வேளையில் அண்ணன் உண்மைத்தமிழனை சந்தித்தோம்)..சசிகுமார் தன் குழுவினருடன் வந்திருந்தார்...ஆர்ப்பாட்டமான வரவேற்பு..படம்..ஆஹா,ஓஹோ...என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லைக்கும் சற்று மேல்..இளையதளபதி,புரட்சிதளபதி,சின்னதளபதி,தல,,அடித்து நடிக்கும் கண்றாவி குப்பைகளுக்கு இந்த படம் பல மடங்கு உசத்திதான்..விரிவான விமர்சம் கேபிள் எழுதுவார்...விவிவிவிவிரிரிரிரிரிர்ர்வா......................ன விமர்சனம் அண்ணன் உண்மைத்தமிழன் எழுதிக் கொண்டிருக்கிறார்...
சட்டசபையில் உறுப்பினர்களுக்கு மூலிகை ”வயக்ரா” கொடுக்கப்பட்டுள்ளது..உபயோகித்து பார்த்து ”ரிசல்ட்”எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டுமாம்..ஏன் கூடவே உருப்படியும் கொடுத்து விட்டால் என்ன? கூடவே இன்னொன்றும் சொல்கிறார்கள்..உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை இருந்தால் உயிருக்கு ஆபத்தாய் முடியுமாம்..பரவாயில்லை..மக்களுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நல்ல மகசூல்தானே...
சிகாமணி சென்னைக்கு கிளம்பும்போதே சொல்லி விட்டார்கள்..அங்கு அநியாய விலைக்கு விற்பார்கள்..அதனால் எதுவானாலும் சொல்லும் விலையில் பாதிக்கு கேள் என்று..சிகாமணி எக்மோரில் இறங்கும் போதே மழை..குடை வாங்கலாம்னு கடைக்கு போகிறான்..
குடை எவ்வளவுங்க?
100 ரூபா..
50ரூபாக்கு தர்றியா?
சரி 80ரு கொடு..
அப்பன்னா 40ரூபாய்க்கு கொடு..
என்னடா இது ரோதனை..முத போணி வேற..சரி நீ முதல்ல கேட்டியே ..50 கொடு..
அப்ப 25 ரூபாதான் தருவேன்..
கடைகாரனுக்கு கோபம் வந்து சும்மாவே தர்றேன்..வாங்கிக்கயேன்
ம்ம்..அப்ப ரெண்டா கொடு....

முன் எச்சரிக்கை : மிக கஷ்டப்பட்டு ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் சந்திக்க வைத்தேன்..அது அடுத்த பதிவில்........

Thursday, June 25, 2009

மானிட்டர் பக்கங்கள்.--4...25/06/09

ஒரு அறிவிப்பு :மானிட்டர் என்பதால் முதலில் அற்பம்,கசுமாலம்,சீ என்று லேபிள் போடிருந்தேன்..பின் யாரைவாது புண்படுத்துமோ என்று அதை மாற்றி விட்டேன்,,ஆனால் திரட்டிகளில் இணைத்துவிட்டதால் இந்த விளக்கம்..பிழையென்றால் மன்னிக்க....

இரண்டு நாட்களாக பதிவு(க)லகம் மதுரை தினகரன் அலுவலகம் போல் பற்றி எரிகிறது...காட்டு ராஜா சென்ற 18 ஆம் தேதி போட்ட ஒரு பதிவுக்கு எதிராய் நேற்று சிம்மம் கர்ஜித்தது..வெறும் 21 பின்னுட்டங்களுடன் ஆறிப் போயிருந்த அந்த பதிவு மீண்டும் மலையேறியது...சிம்மம் அந்த குறிப்பிட்ட பதிவின் லிங்கை கொடுக்காவிட்டாலும் அவர் எழுதியது அந்த பதிவை தேடி படிக்கத் தூண்டியது...நல்ல தொடுகை,கெட்ட தொடுகை பற்றிய அந்த இடுகையின் விமர்சனம் ஏற்புடையதல்ல என்றாலும் அதற்கு கிடைத்த பப்ளிசிட்டி தேவையா?
”இங்கிட்டு”சிம்மத்தின் பதிவை தொடர்ந்து “அங்கிட்டு” ஒரு பதிவு...ஏ அப்பா...கண்ணை கட்டுதப்பா..டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங் போல் பதிவுகளும் ரேட்டிங் பெறத் துடிக்கின்றன..

அய்யா காட்டு ராஜா...மனநல மருத்துவர்..அதுவும் பெண் என்றால் அவர் எந்த பெயரில் இருந்தாலும் உங்களுக்கு மாத்ருபூதத்துடன் மல்லுகட்டியவரின் தோற்றம்தான் நினைவுக்கு வரும் போல.....

கேபிள் சங்கர் இல்லாமல் “மச்சான்” நமிதா கலந்து கொள்ளாத “மானாட,மயிலாட”போல் பதிவுலகம் இருக்கிறது..கொடைக்கானலில் கும்மியடித்து விட்டு திரும்பி விட்டார்..சேர்த்து வச்சு சாத்துங்க தல...


ரஜினிகாந்த் முதலில் திவீரமாக விரும்பியது கீதாவை(நிணைத்தாலே இனிக்கும் படத்தில் அவர் ஜோடி)சில பிரச்சனைகளிலிருந்து ரஜினி விடுப்பட்ட சமயம்..கீதாவின் வீட்டுக்கே போய் பெண் கேட்க,கீதாவின் தந்தை “அய்யங்கார்”ஜாதியில்தான் கொடுப்போம் என பெரிய சண்டை..ரஜினி அங்கிருந்து பாலச்சந்தர் முயற்சியால் வெளியேற்றபட்டார்...நானும் ஒரு அய்யங்கார் பெண்ணை கட்டி காட்டுகிறேன் என்று சவால் விட்டு ஜெயித்தும் விட்டார்.....


ஒரு அரசியல் செய்தி : திமுக எதிர்ப்பு ஓட்டுகளை விஜயகாந்த் பிரித்து வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது ஆதித்யா சேனலில்”ஆத்தியா வாலு என்று அழகாக கூறும் அந்த குட்டிஸுக்கும் தெரியும்..பணம் மட்டும் இல்லை..இன்னும் ஒரு நிபந்தனையும் அவர் போட்டிருந்தார்..அது டி.ஆர் பாலுவுக்கு மந்திரி பதவி தரக்கூடாது என்பதாம்....(விருகம்பாக்கம் டாஸ்மாக்கில் விஜியின் கார் டிரைவர் மப்பில் கக்கியது)

ஒரு ஜென் கதை : இன்றுதான் ஊர் திரும்பியிருக்கும் ஒரு பதிவர்,அடிக்கடி கீழே விழும்(வைத்திய) பதிவர்,மற்றும் விரைவில் டின் கட்டப்படும் இருக்கும் அறிவிப்பு பதிவர் மூவரும் சேர்ந்து “டாஸ்மாக்கை” கவிழ்த்து காலி பண்ணிட்டு பிரிந்த பின் அறிவிப்பு பதிவை காரை பின் பக்கமாக ஓட்டி சென்றதில் சரி டேமேஜ்.ரூ 10,000/- பணால்...அதனால் குடித்துவிட்டு காரை ஓட்டாதீர்கள் என்று மாருதி ஜென் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..

இந்த வாரம் ஆனந்த விகடனில் “அக்னிபார்வை’யின் பதிவை மேற்கோள்காட்டி ஒரு மதுரை நண்பர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்..வாழ்த்துக்கள்..அநேகமாக அடுத்த வாரம் விகடனில் “சியர்ஸ்”என்ற என் குறும்பட விமர்சனம் வரலாம்...லிங்க்கும் தரப்படும்..நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துரைக்கவும்...


காதலியின் பதிலுக்காக காத்திருத்தல்...மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதம் எதிர்நோக்கும் பெண்ணின் தந்தை,பரிட்சை முடிவை பார்த்திருக்கும் மாணவன் இதையெல்லாம் விட அவஸ்தை பதிவிட்டபின் பின்னுட்டத்தை நோக்கியிருத்தல்...

“பின்னூட்ட பிச்சை கேட்டு வந்தேன்
பதிவரே..வலைப் பதிவரே..
மொக்கையாக....

ஒரு பதிவினை நானும் இட்டு பின்னூட்ட
பிச்சை கேட்டு வந்தேன் பதிவரே..வலைப் பதிவரே..

நண்டை குழம்பு வைப்பதா..இல்லை
நாட்டுக் கோழியை வறுப்பதா,,,
நாலுபக்கமும் பிரச்சனையிருக்க..
நமக்கென்ன என்று போவதா......

Wednesday, June 24, 2009

கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்...ஒரு நினைவஞ்சலி




இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட - அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன
தாம் விளையாட'
மொழித்திறன், செவித்திறன் அற்ற ஓர் ஆணும் பெண்ணும் மணந்து கொள்கின்றனர். ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இதைவிட சிறப்பாகவும் துல்லியமாகவும் ஒரு திரைப்படப் பாடலில் பதிவு செய்ய இயலுமா?
மற்றொரு திரைப்படத்தில், தான் காதலித்த பெண் மற்றொருவனை மணந்துகொண்டு அந்தக் கணவனுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். அந்தக் கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவனான அந்தக் காதலனுக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்தச் சூழ்நிலைக்கு ஒரு பாடல்
"வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!'

தமது எழுதுகோலால் திரைவானில் நவரசங்களையும் அனாயாசமாக அள்ளித் தெளித்த அற்புத மேதை கவியரசர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் வரிகளே இவை.
எந்தவொரு உணர்ச்சியையும் பேசாது அவரது பேனா விட்டு வைக்கவில்லை. மனித வாழ்வில் நிகழும் எந்தவொரு சம்பவத்திற்கும் அவரது ஏதாவது ஒரு பாடல் பொருந்திப் போவதை நாம் காணலாம்.
"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே!
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே!'

இப்படிப்பட்ட இலக்கிய நயம் கமழும் நல்ல தமிழ் வரிகளை ஒரு திரைப்படப் பாடலின் பல்லவியாக அமைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.
இப்பாடல் ஈட்டிய பெருவெற்றி, திரைப்படப் பாடல்களை எளிமை என்கிற பெயரில் மலினப்படுத்திக் கொண்டிருந்த பல மாய்மாலக்காரர்களின் வாயை அடைத்தது.
அதுபோலவே தனது பாடலின் முதல் வரியிலேயே ரசிகனின் மனதைச் சுண்டியிழுப்பதில் வல்லவர் கண்ணதாசன்.
"பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே'

"சொன்னது நீதானா?'
"நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும்
நலந்தானா?'
"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால்
என்னாவது?'
"ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்?'
"ஒருநாள் போதுமா?'
"ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்'
"ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாய்?
"எங்கிருந்தாலும் வாழ்க!'

என்று கூறிக்கொண்டே போகலாம்.
மேலும் ஒரு பாடலில் முதல் மூன்று வரிகளை ஒரே மாதிரி அமைத்துவிட்டு நான்காவது வரியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தைத் தருவதும் இவர் வழக்கம்.
"கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
கையழகு பார்த்தால் பூ எதற்கு?
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு?'

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்?'

"ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

"கூடிவந்த மேகமென்று கூந்தலைத் தொட்டார் - வண்
குவளைபோல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்
ஓடிவந்த கனிகளென்று இதழ்களைத் தொட்டார் - தொட்டால்
ஒடியுமென்று இடையை மட்டும் தொடாமல் விட்டார்!

பல்வேறு புராண, இதிகாச இலக்கியங்களை கவிஞர் ஆழ்ந்து அறிந்திருந்ததனால் இவரது ஒருசில பாடல்களில் அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு துவக்கமாகத் தெரியும்.

"காலங்களில் அவள் வசந்தம்' (பகவத்கீதை)
"தோள் கண்டேன் தோளே கண்டேன்' (கம்பர்)
"நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை' (கம்பர்)

"அன்றொரு நாள் இதே நிலவில்' (பாரி மகளிர்)
"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி' (சித்தர்கள்)
"உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே' (குறள்)
"கண்வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்' (கம்பர்)
மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே(கம்பர்)
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' (வள்ளலார்)
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (அருணகிரிநாதர்)
சொல்லடி அபிராமி (பாரதி)
உன் கண்ணில் நீர் வழிந்தால் (பாரதி)
வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க (கலிங்கத்துப் பரணி)
இப்படி ஏராளம்.

ஆனால் அந்த ஓரிரு வரிகளைத் தொடர்ந்து அப்பாடலை கவிஞர் கட்டமைக்கும் விதம் அபாரம்.
உதாரணமாக "உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலின் சரணத்தில் வரும்
"பேருக்கு பிள்ளையுண்டு - பேசும்
பேச்சுக்கு சொந்தம் உண்டு - என்
தேவையை யாரறிவார்? உன்னைப்போல்
தெய்வம் ஒன்றே அறியும்!'

என்கிற வரிகள் கல் மனதையும் கரையச் செய்யுமே.
அதுபோலவே "நலந்தானா' பாடலின் சரணத்தில் வரும்
"கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன் - இந்த
பெண்பட்ட பாட்டை யாரறிவார்?
என்ற வரிகளும் மிகவும் வியந்து ரசிக்கத் தக்கவை.

ஒரு திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நேரில் பார்க்காமலே காதல் கொள்கின்றனர். நாயகியைத் தேடி வரும் நாயகன் நாயகியின் தோழியை நாயகி என நினைத்துப் பழக, தோழியும் அவனை விரும்புகிறாள். அப்போது நாயகி தோழியைப் பார்த்து பாடும் ஒரு பாடலில்,
"கடலும் வானும் உள்ளவரை - தென்றல்
காற்று நடந்து செல்லும்வரை
வளர்க உந்தன் பள்ளியறை - நீ
வாழ வைப்பாய் அந்த நல்லவரை!'
என்று எழுதியிருப்பார். இதனை எப்படி வெறும் திரைப்படப் பாடல் என்று ஒதுக்க முடியும்?
"இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!'
என்றும்
"எறும்பு தோலை உரித்துப் பார்க்க யானை வந்தது
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்தது'
என்றும் பெரிய தத்துவங்களை எளிமையாக கூறி ரசிக்க வைப்பார் கண்ணதாசன்.
கல்லூரி வாழ்வின் பிரிவு நிலை பாடலான
"பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே'
பாடல் ஒலிக்காத கல்லூரிகள் இன்றுவரை இல்லை. அதிலும் அப்பாடலின் சரணத்தில் வரும்
"எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ?'
போன்ற வரிகளே கண்ணதாசனை தனித்துவம்மிக்க கவிஞராக அடையாளப்படுத்துகின்றன.
ஒரு படத்தில்,
"நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!'
என்று எழுதியவர் வேறொரு படத்தில்
"மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று!'

எல்லாவித உணர்ச்சிகளையும் சித்திரிப்பதில் கண்ணதாசன் வல்லவர். ஆயினும் அவரது காதல் தோல்வி பாடல்களே அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது என்று கூறுவது மிகையன்று.

"நினைக்கத் தெரிந்த மனமே - உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே - உனக்கு
விலகத் தெரியாதா?'

"எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது.'
"உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை'
எங்கிருந்தாலும் வாழ்க - உன்
இதயம் அமைதியில் வாழ்க'
"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்'
இப்படிப் பலப்பல.
காதலில் தோல்வியுற்று கையறு நிலையில் கலங்கி நிற்கும் நம் இளைஞனின் மனக்குமுறலை கவிஞர் ஒரு படத்தில் பாடலாக வடித்திருப்பதை காண்போம்.

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
என்று தொடங்கும் அந்தப் பாடல் பல ஊர்களின் பெயரை தன் நிலையோடு ஒப்பிட்டுக் கூறிவிட்டு இறுதியில்,
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா!
மேலூரு போவதற்கும்
வேளைவர வில்லையடா!
என்று முடியும்.
மானுட வாழ்வின் சாரத்தை மையாக்கி திரைப்படப் பாடல்களை உருவாக்கிய அந்த மகத்தான கவிஞனை வெறும் திரைப்படப் பாடலாசிரியர் என்று கூறி தமிழுலகம் ஒருபோதும் ஒதுக்காது; ஒதுக்கவும் இயலாது. ஏனெனில் "கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!'

நான் படித்து ரசித்தது நண்பர்களுக்காக

நன்றி :தினமணி

Tuesday, June 23, 2009

நீயின்றி நானில்லை--கருணாநிதி,ஆற்காடு,துரைமுருகன் கதை விவாதம்

காலை நேரம்....நைட்டு மப்பு தெளியாமல் தூங்கிகொண்டிருக்கிறார் துரைமுருகன்...தொலைபேசி அடிக்கிறது...கரகரப்பான குரல்..என்னய்யா இன்னும் எந்திரிக்கலியா?தலைவர்தான்..

அய்யோ..தலைவா..நேத்து கேரள பொதுப்பணித்துறை அமைச்சரோட முல்லை பெரியார் பிரச்சனையை பேசிகிட்டிருந்தேன்..லேட்டாயிடுச்சு..


பிரச்சனை தீர்ந்ததா?


இல்ல தலைவரே ..சரக்கு தீர்ந்துச்சு..டாஸ்மாக்ல பிளாக்ல ..நமக்கு கட்டுபடியாகுமா?அப்புறம் கவுந்தடிச்சு படுத்தாச்சு..சொல்லுங்க தலைவரே?எதுனா முக்கியமான விஷயமா?ஆமாம்யா..நீ உடனே கிளம்பி ஜிஆர்டி ரிசார்ட்டுக்கு வந்துடு.இணைப்பு துண்டிக்கபட்டது..போச்சுடா எதுக்கு வர சொல்றார்..துரை குழம்பும்போது மீண்டும் அழைப்பு..ஆற்காடு..’முருகா ரெடியா இரு.தலைவர் வரசொல்லியிருக்காரு..நா வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..


ஜிஆர்டி. ... .துரை மந்திரிச்ச விட்ட கோழி மாதிரி அமர்ந்திருக்க,ஆற்காடு ஹியரிங் எய்டை கழட்டி நைசாக ஒளித்து வைக்க பார்க்கிறார்..நாயுடு இந்த இடைத்தேர்தல் வேலையெல்லாம் வேணாம்..ஒழுங்கா அதை மாட்டு..ஒரு முக்கியமான விழயத்தை பேசனும்...


என்ன தலைவரே...வீட்டுல எதாவது பிரச்சனையா?எந்த வீட்டுல?

அதெல்லாம் இல்லையா?கை அரிக்குது அதான்..

என்ன தலைவரே?கை அரிக்குதுன்னா காசு வரப்போகுதுன்னு அர்த்தம்..டிஆர் பாலுவுக்கு போன் போடவா?


நீ வேறயா? அந்த ஆளே அவர் நர்சரி ஸ்கூல்ல உட்கார்ந்து அட்மிஷன் பார்த்துகிட்டிருக்காரு..இது அது இல்லையா?ரொம்ப நாளாச்சு..அதான் ஒரு கதை எழுதலாம்னு..

தலைவரே என்ன சொல்றிங்க?நா பேரனை ஸ்கூல்ல கொண்டு விடனும்..விட்டுட்டு இளைஞர் அணி கூட்டம் இருக்கு..அதுக்கு போகணும் என்னைய விட்டுடுங்க.துரை நைசாக கழட்டி கொள்ள பார்க்கிறார்...


யோவ் மணல் லோடு ஏத்தின மாடு மாதிரி திமிராதே..”நீயின்றி நானில்லை”

உங்க அன்புக்கு ரொம்ப நன்றி தலைவரே..

யோவ் இதான் அடுத்த படத்தோட தலைப்பு...


ஆற்காடு”என்ன தலை தலைப்புலேயே வில்லங்கத்தை ஆரம்பிக்கிறிங்களே..நீ ன்னா யாரை சொல்றிங்கன்னு ஆறு பேர் சண்டைக்கு வருவாங்களே..என்ன பண்றது?

யோவ்..அது யாருங்கிறது படம் பார்த்தா தெரியும்..


இல்ல தலைவரே...இதுக்கு முன்னாடி பாசக் கிளிகள்,கண்ணம்மா,உளியினோசை இதெல்லாம் யாருமே பார்க்கலை..இதையும் பார்க்க மாட்டாங்க..

அதை அப்புறம் பார்த்துகலாம்..முதல்ல கதையை கேளு..

சரி மாட்டேன்னா விடவா போறிங்க.சொல்லுங்க..

தலைவர் தொண்டையை செருமி”இது கடமை தவறாத ஒரு மந்திரியை பத்தின கதை..
நல்ல வேளை..எங்களை பத்தின உண்மை கதை இல்ல.

குறுக்க பேசின “ரெண்டு வாட்டி கதை கேட்க வேண்டியிருக்கும்”நீதிக்கும்,பாசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்யா இது..

அய்யா...பாசம் பலவிதமா தெரியும்..அதென்ன நீதி..”

நீங்க நெஞ்சுக்கு நீதி படிச்சேன்னு பொய் சொன்னீங்களா?அழகிரிட்ட சொல்லி...

தலைவரே வேணாம் நீங்க கதை சொல்லுங்க..தொலைபேசி ஒலிக்கிறது..துரைமுருகன் எடுத்து பேசுகிறார்.”ஆமாம்மா..ஐயா இங்கதான் இருக்கார்..சரிங்கம்மா...

யார்யா போன்ல?

ஐயா உங்க வீட்டுலேர்ந்துதான்..காலைல வீட்டுல சொல்லாம வந்துட்டீங்களாம்..வழக்கமா சொல்லாம போனா அண்ணா சமாதிக்கு உண்ணாவிரதம் இருக்கத்தான் போவீங்கன்னு அவங்க காபி,டிபன் எல்லாம் எடுத்துகிட்டு அங்க போயிருக்காங்க..தலைவரே பால் பணியாரமாம்..இங்க கொண்டு வரட்டுமான்னு கேக்கறாங்க?

யோவ்..அவுங்க தொந்தரவு தாங்காமத்தான் தமிழ்த்தொண்டாற்றலாம்னு இங்க வந்தேன்..சரி ..கதையை எங்க விட்டேன்?சரி முதல்லேர்ந்து சொல்றேன்..ஆற்காடு வயிற்றிலிருந்து பெரிய சத்தம் வருகிறது..

”தலைவரே..நைட்டு இருட்டுல வேர்கடலைன்னு நினைச்சு மொச்சை கொட்டையை தின்னுட்டேன்..கொஞ்சம் பின்னாடி போயிட்டு வந்துடறேன்....

துரைமுருகன் சே..அரசியல் அனுபவம் அவருக்கு அதிகம்னு காட்டிட்டார்...நம்மதான் இன்னைக்கு அடிமை சிக்கினோம் போல..”

முருகா....ஆற்காடு வரட்டும் அதுக்குள்ள நீ போய் முரசொலி வாங்கிட்டு வந்திடு....மாநில சுயாட்சியை பத்தி ஒரு கட்டுரையும்,முறுக்கு பிழியறதை பத்தி ஒரு கவிதையும் எழுதியிருக்கேன்.துரை போய்விடுகிறார்..அரை மணி ஆச்சு..நாயுடுக்கு பியூஸ் புடுங்கிச்சா..இன்னும் காணும் என்று பாத்ரூமில் பார்த்தால் ஆற்காட்டாரின் வேட்டி வெண்டிலேட்டரில் தொங்கி கொண்டிருக்க அரை டிராயரோடு அவர் எஸ்கேப்...அடடா..அப்ப துரையும் செக்போஸ்ட்ல தப்பிச்சு போன மண்லாரிதான்..என்ன செய்ய என்று முகவாயில் கை வத்து முத்தமிழ் அறிஞர் சிந்திக்க.....டிரஸ்ட்புரத்தில் வைரமுத்துவின் வீட்டில் தொலைபேசி ஒலிக்கிறது...கவிஞரே...கலைஞர் பேசறேன்...செம்மொழியில் சில சந்தேகம்...உடன் விரைந்து மகாலிபுரம் மணலோரம் வா.....

Monday, June 22, 2009

ஆற்காடு வீராசாமியிடம் 32 கேள்விகள்




1. உங்க பெயர் சொல்லுங்க.. உங்க தொழில் என்ன?

வீராசாமி..அப்புறம் ஆற்காட்டார்...பெரியார் கனவில் வந்து சொன்னதால வீராஸ்வாமின்னு மாத்திக்கிட்டேன்..

எங்கப்பா விசிறி வியாபாரம் பண்ணாரு..நானும் அமைச்சராகறதுக்கு முன்னாடி மெழுகுவர்த்தி வித்துகிட்டிருந்தேன்...



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மானாட,மயிலாட பார்த்துகிட்டிருந்தப்ப கரண்ட் போயிடுச்சு..அப்ப அழுதுட்டேன்...அப்புறம் தலைவர்..எழுதற படத்தோட கதையை கேட்டவுடனே அழுகை வந்துச்சு..மக்களை நினைத்து..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தெரியலையே..நா எழுதி ரொம்ப நாளாச்சு...

4).பிடித்த மதிய உணவு என்ன?

கரண்ட் இருக்கிரப்பவே பிளக் பாயிண்ட்ல கையை வச்சு சார்ஜ் ஏத்திக்குவேன்..அதான் பிடிக்கும்..



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அது “மாட்லாடறவங்களை”பொறுத்து மாறும்..



6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

வியர்வைல குளிக்க பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

நெற்றியை...வேர்த்திருக்கிறதான் பார்ப்பேன்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: வியர்வையே சிந்தாம சம்பாதிக்கிறது..
பிடிக்காத விஷயம் : சரியா கேக்கலை...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்வி தேவையா?


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தாமஸ் ஆல்வா எடிசன்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கும்மிருட்டுல உக்கார்ந்திருக்கேன்..அதனால........

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சம்சாரம்...அது மின்சாரம்.....

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வேற என்ன கறுப்புதான்

14.பிடித்த மணம்?

வியர்வை நாற்றம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

விஜயகாந்த்......நல்லா திட்டர மாதிரி நடிப்பாரு....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

கலைஞர்தான் அனுப்பினார்..1,2,3 எண்றதை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தார்..அப்படியே ”ஷாக்”காயிட்டேன்....

17. பிடித்த விளையாட்டு?

வீட்டுக்குள்ள லைட்டை போட்டு அனைச்சு,திருப்பி போட்டு அனைச்சு விளையாடுவேன்...

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

தலைவர் வசனம் எழுதணும்...தலையெழுத்தேன்னு பிடிச்சாகனும்..

20.கடைசியாகப் பார்த்த படம்?

மின்சார கனவு.........

21.பிடித்த பருவ காலம் எது?

வெயில் காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

ஆற்காடு பிரியாணி செய்யறதை ஒரு நவாப் எழுதியிருக்காரு..அதை படிச்சுகிட்டுருக்கேன்..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

காலைல 3 வாட்டி....சாயந்திரம் 3 வாட்டி....

24.உங்களுக்கு பிடித்த நகைச்சுவை எதாவது.

நா டெய்லி பேசறதே நகைச்சுவைதான்..இருந்தாலும் ஒண்ணு சொல்றேன்...

ராமுவும்,சோமுவும் சந்தித்து கொண்டார்கள்.அதில் ராமு கையில் பை வைத்திருந்தான்.சோமு கேட்டான்..”எங்க கடைக்கா? அதற்கு ராமு “இல்லை,இல்லை கடைக்கு என்றான்..உடனே சோமு”ஒஹோ நான் கூட கடைக்குத்தான் போறியோன்னு நினைச்சேன்னான்”


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அறிவாலயம்தான்..முக்கியமான டெல்லி மீட்டிங்னாகூட செகரட்டரிதான் போவார்.....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நீ பத்திரிக்கை படிக்கிறதில்லையா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பல்பும்,ஃபேனும்தான்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சர்தான்...உன் பியூசை புடுங்கினாத்தான் சரிப்படுவே..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நெய்வேலி.......

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

காற்றாட சட்டையெல்லாம் அவுத்து போட்டுட்டு...

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கிரண்டர்ல மாவாட்டறது...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

புழுக்கம்தான்.....

மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...)





விடிந்து விட்டிருந்தது... விஷயம் தெரிந்து கொஞ்ச,கொஞ்சமாய் ஆட்கள் வரத் தொடங்கினர்..உள்ளுரில் இருக்கும் உறவுகாரர்கள்,தெருவாசிகள், இருந்த ஒருசில நண்பர்கள்..வைத்தியின் நண்பர்கள் வட்டம் மிக குறுகியது....காரணம் கல கலன்னு பேசமாட்டார்..அவர் வயதையொத்த ஆசாமிகள் உள்ளுர் அரசியல் முதல் உலக விஷயங்கள் வரை அரட்டை அடிக்கும் போது வைத்தி அதில் கலந்து கொள்ள மாட்டார்..ஆமாம் ,சரி,போயிட்டு வர்றேன்.அவ்வளவுதான் அதிகபட்ச வார்த்தைகள்...... வைத்தி என்றழைக்கபட்ட வைத்தியநாதன் காலமாகி விட்டார்..
அந்த காலையிலும் எப்படியோ ஒரு மாலை..... அவரவர் வசதிக்கேற்ப சின்னதும் பெரிசுமாய்......

வைத்தியின் தாயார் அலமேலு இன்னும் இருக்கிறாள்.தொண்ணுறு வயசு ..பழுத்த கிழம்..லேசாக பார்வை மங்கல்...அவ்வளவுதான்...மற்றபடி திடகாத்திரமாய் மகள் வீட்டில் இருக்கிறாள்....அநேகமாக வந்து கொண்டிருக்க வேண்டும்....சோகத்தில் பெரிய சோகம்.... புத்திர சோகம்...தன்னை விட்டு கால(ன்)ம் பிள்ளையை அழைத்து கொண்டதை கிழவி எப்படி கதறி தீர்க்க போறாளோ??

வாசலில் சிமெண்ட் திண்ணை ஒன்று உண்டு...போதாதற்கு அக்கம் பக்கத்திலிருந்து வந்த பெஞ்சுகள்,நாற்காலிகள்..அந்த சிமெண்ட் பெஞ்சில்தான் வைத்தி கடைசியாக உட்கார்ந்திருந்தார்..பக்கத்தில் நன்கு வளர்ந்த ஒரு பன்னீர் மரம்...மஞ்சள் வண்ண பூக்களை சிந்திய வண்ணம் இருக்கும்..வைத்தியின் முழுநேர பொழுது கழிப்பு அந்த மரம்தான்..அதற்கு அவர் பவானி என்று பெயர் இட்டிருந்தார்..நாள் முழுதும் பவானியுடன் எதேதோ பேசிக்கொண்ட இருப்பார்..கடைசியாக மார்பு வலியை வைத்தி உணர்ந்தது,,,உயிர் போனது எல்லாம் அங்குதான்.

.பவானி...வைத்தியுடன் கூட வேலை பார்த்தவள்.இருவரும் மனதார விரும்பினார்கள்...ஆனால் ஜாதி குறுக்கே வந்தது..வைத்தி உறுதியாக இருந்தான்..பதிவு திருமணம் செய்து கொண்டு வேறு ஊருக்கு போய் விடலாம் என்றான்..பவானி அதை ஏற்கவில்லை...சாபத்துடன் வாழ்வை தொடங்குவதில் அவளுக்கு விருப்பமில்லை...உன் அப்பாவை சமாதானபடுத்து ..பின் தான் கல்யாணமென்று கூறி விட்டாள்..வைத்தியின் அப்பா”எனக்கொரு நன்றிக்கடன் உண்டு ..அதை நீதான் தீர்க்கவேண்டும்.என்று கூறி விட்டார்....லலிதாவுடன் திருமணம் முடிவாயிற்று...

வைத்தியின் மனைவி லலிதா.. கட்டுபெட்டியாய் கணவனுக்கு பணிவிடை செய்ய வந்தவள்...கணவனின் புறக்கணிப்பு அதிர்ச்சியாய் இருந்தது....இயந்திர கதி தாம்பத்யத்தில் ஒரு குழந்தை....அவ்வளவுதான் அவள் கண்ட சுகம்..அந்த மரத்துக்கு அவள் வைத்த பெயர் சக்களத்தி....வைத்தியும் லலிதாவும் பேசி ஆயிற்று பல வருடங்கள்...அரசல் புரசலாக லலிதாவுக்கும் சில விஷயங்கள் தெரிய வந்தது...வைத்தியும், பவானியும் காதலித்தது....தவிர்க்க முடியாமல் தன்னை கல்யாணம் செய்து கொண்டது...சரியாகிவிடும் என்றுதான் நிணைத்தாள்...பவானி திடீர் இறப்பு செய்தி வரும் வரை வரை..அதன் பின் தான் வைத்தி மாறிப் போனான்..மனம் லேசாக சிதைந்து போனது...வாசலில் இருக்கும் மரம் பவானி அவள் கையால் ஊன்றி விட்டு போனதாம்......அந்த மரத்தையே பவானியாக பாவிக்க ஆரம்பித்தான்.. சக்களத்தி என்று ஏசி கொதிக்கிற வென்னீரை அம்மரத்தின் வேரில் ஊற்ற அன்னைக்கு
லலிதா அக்கம் பக்கம் பார்க்க அடி வாங்கி அவமானபட்டாள்..

இருவருக்கும் பேச்சு வார்த்தை சுருங்கி விட்டிருந்தது...ஒரே மகள் சுகுணா கல்யாணமாகி போனதும் சுத்தமாய் நின்று போனது....வைத்தி சாப்பிடுவார்..ரேடியோ கேட்பார்.. இதெல்லாம் மரத்தின் கீழேயே நடக்கும்...மகள் வீடு உள்ளுரிலேயே இருந்ததால் லலிதா அங்கு போய் விடுவாள்...அது ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல்.

மணியாகி விட்டிருந்தது...அநேகமாக எல்லாரும் வந்து விட்டிருந்தனர்..சாவு வீடுகளில் கிசுகிசுப்பாக கேட்கப்படும் “எப்போ எடுக்கிறாங்களாம்” கேட்க தொடங்கியது சாஸ்திரிகள் தயாராக இருந்தார்..தென்ன ஓலையை பின்னி கொண்டிருந்தார்கள்...

இதென்ன கூத்தாயிருக்கு?லலிதாவுக்கு புத்தி பேதலிச்சுடுத்தா என்ன?அழுதாவது தொலைச்சாளா? சித்த பிரமை புடிச்சா மாதிரின்னா உட்கார்ந்திருந்தா...

என்னாச்சு லலிதா என்ன சொல்றா?யார் கொள்ளி போடணும் சொல்றா?

லலிதா சொன்னது ...முதல்ல வாசல்ல இருக்கிற அந்த மரத்தை வெட்ட சொல்லுங்க..அந்த கட்டையை வச்சு இந்த கட்டையை எரிங்க....லலிதா குரலில் அத்தனை தீர்க்கம்,தகிப்பு...

அம்மா ..உனக்கு பைத்தியம் கீத்தியம் புடிச்சுடுச்சா?அப்பா அதை மரம் சொன்னாலே திட்டுவார்.அதை போய் ஏன் வெட்ட சொல்றே...அப்பா ஞாபகார்த்தமா அது வாசல்லேயே இருக்கட்டும்மா..மணியாய்ட்டே இருக்கு. எல்லாரும் காத்துண்டிருக்கா...

லலிதா அசைய வில்லை......மரத்தை வெட்ட ஏற்பாடு பண்ணுங்க..இருக்கிற வரைக்கும் இந்த மனுஷன் அதோட தான் குடும்பம் நடத்தினார்...அவர் போனப்பறம் அந்த சக்களத்தியோட என்னால இருக்க முடியாது...தீர்மானமாக சொல்லிவிட்டாள்..

விறகு தொட்டியில் சொல்லி ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்....சே எவ்வளவு அழகா இருக்கு..இதை வெட்ட எப்படி அவளுக்கு மனசு வந்தது..சாவுக்கு வந்தவர்கள் அங்கலாயித்தனர்....
ரெண்டு பேர் பெரிய ரம்பத்தை கொண்டு அறுக்க ஆரம்பித்தனர்..இன்னொருவன் கோடாரியால் கிளைகளை வெட்ட ஆரம்பித்தான்......

வைத்தியின் கால் மாட்டில் உட்கார்ந்திருந்தாள் லலிதா....முகத்தில் ஒரு வித ஜொலிப்புடன் இருந்தாள்..இத்தனை வருஷம் ...இந்த பாழாப் போன சமூகத்திற்காக,பெத்த பொண்ணுக்காக அடக்கி வைத்திருந்த அத்தனையும் ... ஒரு ஏளன சிரிப்பில் தொடங்கி பெரிதாக வாய் விட்டு சிரிக்க முனைந்து கேவலாக மாறி அழ ஆரம்பித்தாள்....வெளியே மரத்தை அறுக்கும் ஓசையை மீறி பெருங்குரலில் லலிதாவின் அழுகுரல் கேட்டது...

Thursday, June 18, 2009

T ராஜேந்தரிடம் 32 கேள்விகள்

1. உங்க ஊர்,பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தண்ணில பாயுரோம்...
வெயில்ல காயுரோம்.
போதைல சாயுரோம்..
என் ஊர் மாயுரம்

ஷங்கர் எடுக்கிரார் எந்திரன்.
என் பெயர் ராஜேந்திரன்..
T.T.R ஆ என்னை ஆக்க ஆசைப்பட்டார் எங்கப்பா.
ஆனா நா T.R ஆ ஆயிட்டேன் தப்பா.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இந்த டிஆர் எப்பவும் எதுக்கும் அழ மாட்டான்
மாடிலேர்ந்து கீழே விழ மாட்டான்
ஆனா இப்ப மன்சூரலிகான் குடிச்சதுக்கு நா தண்டம் அழுதேன்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பேப்பர்ல எழுதுவேன் எழுத்து..
பெப்பர் சிக்கனை நீ அழுத்து..
மைல போடுவேன் கையெழுத்து...
டைல போட்டா அது தலையெழுத்து....

4).பிடித்த மதிய உணவு என்ன?

தங்கச்சி...முள்ளுல சேலை விழுந்தாலும்..சேலை முள்ளுல விழுந்தாலும்

சார்..நா பிடிச்ச மதிய உணவு என்னன்னு கேட்டேன்..

யோவ்..தண்டோரா..அதைத்தான்யா சொல்ல வர்றேன்..ஆத்துக்கு தங்கச்சி தண்ணி எடுக்க போயிருக்கு

புரியலயே சார்..

தங்கச்சி தண்ணி எடுத்துட்டு வந்தவுடனே சோத்துல தண்ணி ஊத்தி சாப்பிடுவேன்..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?

சார்..இப்ப எதுக்கு இந்த கதை..

யோவ் அந்த கரடி நாந்தான்யா..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஏன் நீ முதுகு தேச்சு விடப்போறியா?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இப்ப நீ இங்க வந்தப்ப நா எங்க பார்த்தேன்...அதை எழுதிக்க...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: எதிர்ல இருக்கிறவங்களை அடிக்கிறது

பிடிக்காத விஷயம் : அடிச்சப்புறம் கடிக்கிறது...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரி பாதி இல்ல..அவ சரீரத்துல நான் தான் பாதி..

அவ உயிருள்ளவரை நான் உஷார்...

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?


என் பக்கத்தில யாரும் நிக்க முடியாது...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நாலு வாழை இலையை இடுப்புல சுத்திகிட்டிருக்கேன்...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மச்சி...அவ மூஞ்சில துப்பினா எச்சி...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

சொர்ணம்..கர்ணம்..புர்....கரடி கலர்

14.பிடித்த மணம்?

கோமணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

உஷாதான்..ஒட்டியாணம் கேட்டு உயிரை எடுக்கிறாள்.....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

மன்சூரலிகான்...கழுதைக்கு கருத்தடை பண்றதை பத்தி எழுதியிருந்தார்..படிச்சுட்டு பின்னங்காலால எத்திட்டு வந்தேன்..


17. பிடித்த விளையாட்டு?

திருடன்,போலிஸ்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லன்னா வேற எங்கயாவது கடிச்சுடுவேன்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஒரு கிரேன் ஷாட் வச்சுக்குவமா?

20.கடைசியாகப் பார்த்த படம்?

சிம்புவும்,நயனும் ஓட்டல்ல எடுத்துகிட்ட படம்..

21.பிடித்த பருவ காலம் எது?

வீட்டுக்கு போன உடனே ஊசி போட்டுக்க..இல்லன்னா செப்டிக் ஆயிடும்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சிம்புவுக்கு வந்த லவ் லெட்டரையெல்லாம் அழகா பைண்ட் பண்ணி வச்சிருக்கான்..அதைத்தான்....

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் கிட்ட ஹார்மோனியம்தான் இருக்கு...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

நா கடிக்கும்போது நீ கத்துன சத்தம் பிடிச்சது...கடிச்சு அரை மணி நேரமாச்சு..இன்னும் அழுதுகிட்டிருக்க..அந்த சத்தம் பிடிக்கலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வண்டலூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னொருவாட்டி கேளு..சொல்றேன்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

விஜயகாந்த்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

எவ்ளொ பட்டாலும் உனக்கு புத்தி வராது போலிருக்கே...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சினிமா தியேட்டர் கக்கூஸ்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்ப இருக்கிறா மாதிரிதான்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சவரம் பண்றது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

பொழைச்சு..போயிடு...

Wednesday, June 17, 2009

எல்லாரும் பாத்துக்கங்க....நானும் கவிதை எழுதிட்டேன்

நினைவு தெரிந்து முதலில் எழுத முயற்சித்தது கவிதைதான்..அதன் பின் சிறுகதை...சினிமா ஆசை வந்த பின் எழுத நினைப்பதை எல்லாம் சீன் ஆர்டரிலேயே எழுதி பழகி கொண்டேன்.முன்,பின்,நடு நவீனத்துவமாக கவிதை கலர் மாறிப் போயிற்று..அகநாழிகை,யாத்ரா,தமிழரசி,ஜ்யொராம் எல்லாம் படிக்கும்போதுதான் நம் கவிதையின் லட்சணம் தெரிகிறது.(சலங்கை ஒலியில் கமலின் கேமரா போல்).நினைவு இடுக்குகளில் தேடி பிளஸ் 2 படிக்கும் போது எழுதிய? சில கவிதைகளில் எனக்கும்,என் காதலிக்கும்(இது வேறயா)பிடித்த ஒரு கவிதை ..சில திருத்தங்களோடு..
(தலை வாரி பூச்சூடி உன்னை...பாடசாலைக்கு செல் என்றாள் அன்னை.. இந்த பாட்டு மெட்டில் எழுத ஆரம்பித்து இலக்கில்லாமல் அலை பாய்ந்து திரிந்தது)

பூ வந்து அமர்கின்ற கொண்டை..கண்கள்
புரள்கின்ற,நெளிகின்ற கெண்டை..
வா..என்று நான் சொன்னால் சண்டை..
வரச் சொல்லி ஒலிக்குதோ உன் கால் தண்டை..

எதை படித்துக் கொண்டுள்ளாய்?
என்ன பாடம்..என்னிடம் வா..
நான் உனக்கு பள்ளிக்கூடம்..
புக்ககமாய் என் அகத்தை எண்ணிடாமல்
புத்தகத்தில் இன்னும் என்ன மோகம்?
புழுங்கி தவிக்குதே என் தேகம்...

மானை எதிர்நோக்கும் புலி நானென்று
மனநடுக்கம் வேண்டாம்..இசை மீட்ட
வீணைக்கு ஏங்கும் விரல் நான்.
பாலாடை பிடிக்காது..ஆடை நீக்கி
பருகிடுவேன் பசும்பாலை..இன்று
உன் மேலாடை நீக்கிடுவேன் என்ற அச்சம்
மேற்கொண்டா தயங்குகிறாய்..
பட்டு நூலாடை போன்றவளே..

இருக்கின்ற கண் ..உன்னை பார்க்க..என்றன்
இதழ் உன் இதழோடு சேர்க்க..
வெறுக்காதே நீ என்னை நோக்க....உன்
வீட்டார்கள் வருவாரோ தாக்க...

சிரிக்கும் கண்மணி,தா..உந்தன் நெஞ்சு
இன்றேல் சிந்தித்து தா...கொஞ்சம் நஞ்சு...

(அலைகள் ஓய்வதில்லையில் வரும்”செவ்வரி ஓடிய உன் பாத நகங்களுக்கு என்ற கவிதையின் பாதிப்பில் எழுதியது?

Tuesday, June 16, 2009

மானிட்டர் பக்கங்கள்....3

அந்த குடும்பம் அப்போது மதுரையில் வசித்தார்கள்..வறுமை வாட்டி வதைத்தது...ஏற்கனவே மூன்று பிள்ளைகள்..குடும்பத்தலைவி மீண்டும் கருவுற்றார்.வறுமையின் காரணமாக அக்கருவை கலைக்க முடிவு செய்து மருத்துவரிடம் போனார்கள்..காலதாமதம் ஆகிவிட்டதால் முடியாது என்று மருத்துவர் கை விரித்துவிட்டார்.வேறு வழி தெரியாமல் தெய்வத்திடம் போனார் அக்குடும்பத் தலைவி.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தினமும் காலை,மாலை அங்கபிரதட்சணம் செய்தார்.கரு தானாக கலைந்துவிடும் என்று நம்பினார்.ஆனால் கரு கலையவில்லை....சரி..தெய்வம் நம்மை சோதிக்கிறது என்று விட்டு விட்டார்.குழந்தையும் பிறந்தது..அக்குழந்தை யார் ?பிரபல திரைப்பட இயக்குனர் திரு.மணிரத்னம் தான்..அவர் படம் போலவே வாழ்க்கை கதையும்..

மணிரத்னமும்,வைரமுத்துவும் ஒரு பாடல் கம்போஸிங்கில் இருந்தார்கள்.லஞ்ச் பிரேக் விட்டதும்,மணி வீட்டுக்கு கிளம்பினார்...வைரமுத்து மணி வீட்டுல இருந்து சாப்பாடு வந்திருக்கு..சேர்ந்து சாப்பிடலாமே என்று கூற..சரி..நான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்னுட்டு வீட்டுக்கு போன் பண்ணி நா சாப்பிட வரலபோனை வைத்து விட்டிருக்கிறார்.வைரமுத்துக்கு ஆச்சர்யம்..மணீ இவ்ளொ சுருக்கமா பேசி முடிச்சுட்டாரேன்னு..வாயை விட்டு கேட்டும் விட்டார்..ஏன் சார் வேற எதுவுமெ பேசறதுக்கு இல்லையா?வேற எதாவது கால்,விசிட்டர் வந்தாங்களா?மணி சொன்னார்.நானாவது மூணு வார்த்தை சொன்னேன்.எதிர் முனையில் என்ன பதில் சொன்னார் தெரியுமா?ம்ம்....

ஒரு குறும்படம் பார்த்தேன்.மகளிர் கிறித்துவ கல்லூரி விஸ்காம் மாணவி இயக்கிய படம்.தலைப்பு “முடிவு”கதை இதுதான்..சூரியும்,ரெனியும் காதலர்கள்...வெவ்வேறு மதம்.காதலுக்கு கடும் எதிர்ப்பு.தீவிரமாக யோசித்து அந்த முடிவை எடுக்கிறார்கள்..வீட்டுக்கு திரும்புகிறார்கள்.இரவாகிறது.உணவு முடிந்தவுடன் பால் வருகிறது.செல்போனில் பேசுகிறார்கள்.”பயம் இல்லியே?ம்ம்..பயமாத்தான் இருக்கு..ரெனி...நம்ம காதல் ஜெயிக்கணும்” அவங்களுக்கு இது பாடமா இருக்கணும்...இருவரும் பாலில் தூக்க மாத்திரைகளை கலக்குகிறார்கள்.மீண்டும் தொலைபேசியில் பேசிக்கொண்டே பாலை எடுத்து.................நான் நிச்சயம் குடிக்க மாட்டார்கள் நன்று நம்பினேன்..அதுதான் நடந்தது..ஆனால் அதன்பின் அவர்கள் செய்த காரியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..”பாலை” இருவரும் தத்தம் தந்தையிடம் கொடுத்து குடிக்க செய்கிறார்கள்....

அந்த மாணவியிடம் உன் காதலுக்கு உன் தந்தை சம்மதிக்காவிட்டால் இப்படித்தான் செய்வாயா?என்று கேட்டேன்..”சான்ஸே இல்லை”எவனோ ஒரு மடையனுக்காக அப்பாவை போய்..இது சும்மா ஒரு வித்தியாசமா இருக்கட்டும்னு இப்படி முடிச்சேன்...


நண்பர் ஒருவர் வீடு பார்க்க சொன்னார்..பெரிசா இல்லாவிட்டாலும் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமான்களை எதாவது ரூமில் போட்டு விட்டு நான் எதாவது மேன்ஷனில் தங்கி கொள்வேன் என்றார்.ஒரு வீடு காலியாக இருந்தது.விசாரித்தேன்”ஏங்க வீடு வாடகைக்கு வேணும்” எத்தனை பேர்”....ஆள் தங்க மாட்டாங்க” பொருளையெல்லாம் போட்டு வைக்க இடம் வேணும்”... சாரி..”சாமான் போட இடம் தர மாட்டோம்..வேணும்னா குடித்தனம் நடத்திக்கலாம்”” இதில் ஏதோ தப்பு இருப்பதாக மனசு சொல்கிறது..புத்தி மறுக்கிறது.."(நன்றி லக்கி”குறியீடுகள்”பதிவு)

ஒரு டவுட்(மொக்கையா)....

நகத்தை கடிச்சு துப்பினா,தரித்திரம் வரும்ன்னு சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் கேட்டிருப்போம்..ஸ்டேட் பாங்க்ல போய் நகத்தை கடிச்சு துப்பிட்டா பேங்க் திவாலாயிடுமா?

Friday, June 12, 2009

அன்புமணி ராமதாசிடம் 32 கேள்விகள்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

அன்புமணி..அய்யா வச்ச பேர்..அப்புறம் அந்த காட்டையெல்லாம் அழிச்சப்புறம்”பசுமை நாயகன்”..சின்னய்யான்னு கூப்பிடுவாங்க....என் தலையெழுத்து..இப்போ முன்னாள் அமைச்சர்..


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சிரிச்சது எப்போன்னு கேள்வியை மாத்தி கேளுங்க...முச்சுடூம் அழுதுகிட்டுத்தான் இருக்கேன்..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எய்ம்ஸ்ல வேணுகோபால தூக்கறதுக்கு போட்ட கையெழுத்து பிடிக்கும்...ஆனா இப்ப பாருங்க..அதே எய்ம்ஸ்ல செக்யூரிட்டி என்னைய உள்ளே விடறதுக்கு பேர் எழுதி கையெழுத்து போட சொல்றான்..


4).பிடித்த மதிய உணவு என்ன?

கூழ்தான்...சின்ன வயசுல எங்க வீட்டுல விறகடுப்புதான்..நாந்தான் போய் சுள்ளி பொறுக்கிட்டு வருவேன்..எங்கம்மா அதை எரிச்சுத்தான் கூழ் காய்ச்சுவாங்க..அப்புறம் கொஞ்சம் பெரியவனா ஆன உடனே எங்க ஆளுங்கல்லாம் மரத்தையே வெட்டி எங்க வீட்டுல போட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டாங்க....நாங்க அதை கொளுத்தி குளிர் காய்வோம்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சின்ன வயசுல எங்க வீட்டுக்கு கோடாரி செய்றவங்க நிறைய பேர் வருவாங்க...ஆனா எங்க அய்யா “நீ அவங்க கூட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லிடுவாரு...சீட்டு மட்டும் தரேன்னு சொன்னா நா கண்டக்டர் கிட்ட கூட நட்பு உடனே வச்சுக்குவேன்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அதை பற்றி அடுத்த வாரம் பாமக பொதுக்குழுவில் இரண்டு பொட்டி வச்சு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்போம்....


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

காலை...ஏன்னா...வாரி விடறதுக்கு வசதியா இருக்கா..இல்லையான்னு தெரியணும் இல்ல.....


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நான் யார் வீட்டுக்கு போறதா இருந்தாலும் கொல்லை பக்கமா சுவரேறி குதிச்சு போய் ஒரு 5 நிமிஷத்திலே அங்க இருக்கறதை வழிச்சு சாப்பிட்டுட்டு ஓடியாந்துடறது ரொம்ப..ரொம்ப பிடிக்கும்...
பிடிக்காத விஷயம் : எங்கய்யா...எப்ப பாரு..தம்மடிக்காதே..தண்ணியடிக்காதே..அப்படி சொல்றது பிடிக்காது..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு அரசியல்வாதியின் மகளாக அவர் இருந்தும்..எனக்கு அரசியல் பற்றி ஒண்ணுமே தெரியாதுங்கறதை கண்டுக்காம இருக்கிறது..பிடிக்கும்..தொணத் தொணன்னு தமிழ்லேயே பேசிகிட்டு இருப்பாங்க..அது பிடிக்காது....


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனக்கு கோட்டு,சூட்டு தச்சு கொடுக்குற டைலர்...அவர் டில்லில இருக்கார்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வேட்டிய தார்பாச்சு கட்டி..தலைல துண்டு கட்டியிருக்கேன்....எங்கய்யா கட்சி வேலையை கவனின்னு சொல்லிட்டாரு..அதான் மரம் வெட்ட கிளம்பிட்டிருந்தேன் ..நீங்க வந்துட்டீங்க..போய் ஊர் பூரா “தண்டோரா” போடுங்க...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஊரோரம் புளியமரம்....

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அநேகமா ஒரு வருஷத்துக்கு பச்சைதான்....மஞ்சள் பிடிக்கவும் ஆசை..அதிர்ஷ்டம் இருக்கான்னு தெரியல...(இதுல உங்க கேள்விக்கு பதில் இருந்தா எடுத்துகங்க...இல்லன்னா புலம்பறார்னு வுட்டுடுங்க)


14.பிடித்த மணம்?

வாக்ஸின் வாசனை ரொம்ப பிடிக்கும்..இன்னும் அனைத்து மருந்து வாசனையும்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இரா.வேலு அண்ணன்...டில்லிலேர்ந்து ரயில்ல திரும்பி வரும்போது லாப்-டாப்பில் எழுதி போஸ்ட் பண்ணது..”சனிப் பொணம்..தனிப் போகாது”ங்கிற தலைப்புல எழுதுனது..ஒரே தத்து(பித்து)வமா இருந்தது...
17. பிடித்த விளையாட்டு?

நானு,மணி அண்ணன்,குரு அண்ணன் எல்லாரும் மரத்துக்கு மரம் தாவி விளையாடுவோம்...அது பிடிக்கும்..ஆனா எங்கய்யா சரியா தாவத் தெரியலைன்னா “சாட்டை” யால அடிப்பாரு....


18.கண்ணாடி அணிபவரா?


ஸ்விஸ் அகெளண்ட் நம்பர் ரொம்ப பொடிசா இருக்கும்..அதை கரெக்டா எழுதலைன்னா பணம் கிரெடிட் ஆகாது..அப்ப மட்டும் கண்ணாடி போடுவேன்....


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காக்கி டிரெஸ் போட்டு கிட்டு (புள்ளி)விவரமா வசனம் பேசற படம் பிடிக்கும்.ஒரு தடவை விருதாசலத்துல நேராவே ஷூட்டிங் பார்க்க போய் முதுகுல லத்தி அடி வாங்கிட்டு வந்தோம்....

20.கடைசியாகப் பார்த்த படம்?

தங்கப்பதக்கம்..அதுல ஒரு பாட்டு ..நல்லதோர்குடும்பம்...பல்கலைகழகம்...இருந்தா அந்த குடும்பம் மாதிரி இருக்கணும்...


21.பிடித்த பருவ காலம் எது?

”எய்ம்ஸ்” ல அதாவது ஒரு குறிக்கோளோடு இருந்த காலங்கள்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

2016 ஆம் ஆண்டுக்கு எங்கய்யா ஒரு மாதிரி பட்ஜெட் போட்டிருக்காரு...அதை படிக்க சொல்லி கொடுத்தார்...ஆனா நா சும்மா படிக்கிற மாதிரி நடிக்கிறேன்....


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அஞ்சு வருஷமா டெய்லி டெஸ்க்-டாப்பையே மாத்திக்கிட்டிருந்தோம்...


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

ஊசி போடும்போது குழந்தைங்க அழற சத்தம் புடிக்கும்...அழுவுதென்னு ஊசி போடாட்டி காசு யார் கொடுப்பாங்க.....
பிடிக்காத சத்தம்?

”வேணுகோபாலாட” கார் சத்தம் பிடிக்காது


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமேசான் காட்டுக்கு ஒரு முறை அய்யா கூட டிரெயினிங் போனேன்.....
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படின்னா??...


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒரு வருஷத்துக்கு இன்னும் 365 நாள்தான் முட்டாள்தனமா சொல்றதை ஏத்துக்கிட முடியல...


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஆபரேஷன் பண்ற கத்தியை ஒரு வாட்டி முழுங்கிட்டேன்...அதுவா இருக்குமோ..?


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சகாரா...அங்கதான் மரமே இருக்காது....


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மேல இருக்கிற “29” பதில்லேர்ந்து உன்னால அதை கண்டு பிடிக்க முடியலன்னா..நீ என்னைய விட முட்டாள்.......

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சர்க்கஸூக்கு போறது....


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இனிமே கஷ்டம்தான் ...

Wednesday, June 10, 2009

கூட்டாஞ்சோறு---10/06/09

சமீபத்தில் ஒரு விளம்பர படபிடிப்புக்காக கும்முடிபூண்டி அருகில் இருக்கும் சிறுவாபுரி என்கிற சிறு கிராமத்துக்கு சென்றிருந்தேன்.அழகான,அமைதியான கிராமம்.பச்சை பசேல் என்று இருந்தது.புகழ் பெற்ற முருகன் கோயில்,இயற்கை உரம் ஓட்டு சாகுபடி செய்யபடும் காய்கறிகள் எல்லாவற்றுக்கும் மேல் வெள்ளந்தியான மக்கள்.சென்னையிலிருந்து நாற்பது கிலோ மீட்டரில் ஒரு பாரதிராஜா கிராமம்.படபிடிப்புக்காக நன்கு விளைந்த வயல் வெளி தேவைப்பட்டது.ஒருவர் என்னை அணுகி தான் உதவுவதாக சொல்லி ஒரு வயலுக்கு அழைத்து சென்றார்.சுமார் ஐம்பது ஏக்கர் நிலம்.பம்புசெட் சகிதம் அமர்க்களமாக இருந்தது.எங்களுக்கு மிக பொருத்தமாகவும் இருக்கவே யாரிடம் அனுமதி கேட்பது என்று அவரிடம் கேட்டேன்.அதெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்.கவலை வேண்டாம் என்றார் அவர்.இல்லை முதலில் இந்த இடத்தின் ஓனரை காட்டுங்கள்.நான் பேசி அனுமதி வாங்கிவிடுகிறேன்.உங்களுக்கும் தனியாக எதாவது தொகை தந்துவிடுகிறேன் என்று நான் சொல்ல அவர் சரி அனுமதி கேளூங்கள்..இது என் நிலம்தான் என்றார்.எனக்கு திகைப்பு ஒரு பக்கம் ,அவமானம் ஒருபக்கம்.அவ்ர் மிக,மிக எளிமையாக இருந்தார்.காலில் செருப்பு கூட இல்லை.அவர் ஒரு கூலியாள் என்றே நான் அதுவரை நிணைத்திருந்தேன்.உடன் அதை சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டவுடன் தான் அப்பாடா என்று இருந்தது.(முதல் படத்தில் முன்னால் கைகட்டி நிற்பவர்)

அவர் சொன்னவை: விவசாயம் கட்டுபடியாகவில்லை.ஏற்ற விலை கிடைப்பதில்லை.இலவச மின்சாரம் இல்லையென்றால் எங்கள் குடும்ப தேவை வரை பயிர் செய்து கொள்வோம்.நீங்க எல்லாம் பிஸ்ஸா சாப்பிட வேண்டியதுதான்.


வார்த்தைகள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது வார்த்தைக்கு கடும் போட்டாபோட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற வார்த்தை.

ஆங்கில வார்த்தைகளை அங்கீகரித்து, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள், இன்டர்நெட், ப்ளாக்குகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது வார்த்தைகளை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகரிப்பர். இந்த வகையில், ஆங்கில வார்த்தைகள் 10 லட்சத்தை தொடத்தயாராகி விட்டது. இன்று பத்து லட்சமாவது வார்த்தையை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது வார்த்தையாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 வார்த்தைகள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த வார்த்தைகள் அனுப்பப் பட்டுள்ளன.

இதில், இந்தியாவில் இருந்தும் சில வார்த்தைகள் அனுப்பப்பட்டுள்ளன. பெண் கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையும் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படுகிறது.ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில வார்த்தை அறிவிக்கப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் பிரபலமானது.

"ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர். பல பத்திரிக்கைள், புத்தகங்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே பிரபலமான ஒரு வார்த்தை, வழக்கமாக கவுரப்படுத்தப்படுவதுண்டு; அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வார்த்தையாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு சம்பந்தமில்லாத வார்த்தையாக இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி வார்த்தைகளும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது வார்த்தையாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

சமீபத்தில் ரசித்த குறுஞ்செய்தி:

காதலி :நீ என்னை எவ்வள்வு நேசிக்கிறாய்?
காதலன் : ஷாஜகானைப் போல் நான்..
காதலி : அப்போ எனக்காக தாஜ்மஹால் கட்டுவாயா?
காதலன் ; நிச்சயமாக..இடம் எல்லாம் வாங்கிவிட்டேன்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி
ஆதலினால் காதல் செய்யாதீர்.

ஒரு "கேபிள் சங்கர்" ஜோக்(அதாங்க ”ஏ”)

இரு நணபர்கள் தத்தம் மனைவிகளுக்கு கார் டிரைவிங் சொல்லி கொடுத்தனர்.ஒரு இரவு ஒருவன் வீட்டை விட்டு வெளியில் வந்து தம் அடித்து கொண்டிருக்க,அடுத்தவனும் வருகிறான்.

முதல் நபர் : காரோட்ட பழக சொன்னது பெரிய தப்பா போச்சு?

ஏன் என்னாச்சு?

“” “” முத கியரை போடுறென்,இரண்டாவது கியரை போடுறேன்னு .வலி தாங்க முடியல..

அட அது பரவாயில்லப்பா...என் பொண்டாட்டி பத்து லிட்டர் ஊத்து..பதினஞ்சு லிட்டர் ஊத்துன்னு ரோதனை..

அப்புறம் என்ன பண்ணே.....

என்ன பண்ண..காத்து மட்டும் அடிச்சு விட்டேன்...

Tuesday, June 9, 2009

கடன் வாங்கி கழித்தல்

மாப்ள..ஒரு நாளாவது நாலு தெருவையும் சுதந்திரமா சுத்தி வரணும்டா…சொன்னது என் நண்பன்.இடம் தஞ்சை..காரணம் கடன் தொல்லை..எங்கள் ஊரில் மேற்கு,கிழக்கு,வடக்கு,தெற்கு என்று நான்கு ராஜவீதிகள்.ஊடாக சின்ன சந்துகள்..ஒரு சந்தில் நுழைந்தால் போதும் சுத்தி சுத்தி நாலு ராஜ வீதிகளையும் அடையலாம்...+2 முடித்து கல்லூரியில் கால் வைத்த பருவம்.டீக்கடை,பொட்டிகடை,வாடகை சைக்கிள் கடை,அயார்ன் கடை..இப்படி எங்கள் கடன் கணக்கு சகல இடங்களிலும் வியாபித்திருந்தது.ஒரு இடத்துக்கு நேர் வழியில் போகவே முடியாது.எங்களை பொறுத்தவரை நேர்வழி சுற்றாகவே இருந்தது.என் நண்பன் உலக்சுக்கு ஒரு சமயம் பொட்டி கடை கடன் ரூ100 ஐ தாண்டி விட்டது.கடைகாரன் கொலைவெறியோடு இருந்தான்.சிக்கினா சின்னாபின்னம்தான் என்ற நிலை.மாப்ள..ரூபா பொரட்டி கொடுத்திடலாம்..ஆனா பார்த்தவுடனே மேல கையை வச்சுட்டான்னா பிரச்சினையாயிடும்.என்ன பண்ண...ஒரு ஐடியா பண்ணோம்.அதன்படி உலக்ஸ் முதலில் மீசையை எடுத்தான்.
வெள்ளை வேட்டி சட்டைக்கு மாறினான்.நேரா அந்த கடைக்கு போனான்.கடைகாரருக்கு அடையாளம் தெரியவில்லை.இவன் அவனான்னு குழப்பம்.என் தம்பி உங்க கிட்ட கடன் வாங்கியிருக்கானா? கேட்டது நம்மாளூ..கடைகாரர் ஆமாம் என்க.இந்தாங்கன்னு பணத்தை கொடுத்து தம்பி வேலை விஷயமா வெளியூர் போயிட்டான்.இனிமே வர மாட்டான்.கடைகாரர் உணர்ச்சி பிரவாகமானார்.சே..எப்படிபட்ட புள்ளைய திட்டிபுட்டோம்னு “பரவாயில்லை தம்பி..நீங்க எப்ப எது எவ்வளவுக்கு வேணும்னாலும் நம்ம கடையில வாங்கிகங்க..காசு மெதுவா கொடுத்தா போதும்.இது எப்புடி இருக்கு.அப்புறம் அந்த கடன் குட்டி போட்டுகிட்டே போனது தனி கதை.

பெத்த கடன்,வளர்த்தகடன்,சோத்துக்கடன்,நன்றிகடன் இப்படி எத்தனை கடன் இருந்தாலும் ரூபாயா கொடுத்த கடனும்,வாங்கின கடனும் தான் பாடாய் படுத்தும்.கடன் பெற்றார் நெஞ்சம் போல் ..இது பழசு.கடன் கொடுத்தார் நெஞ்சம் இதுதான் புதுசு.பாருங்க ஒரு பீடி கடன் கேட்டு கொடுக்கலை..இதுக்கு ஒரு கொலை..கடன் வாங்குறது சின்ன புள்ளைல இங்க் கடன் வாங்குறதிலயே ஆரம்பிக்குது.பேனா கழுத்தை திருகி சொட்டு கணக்குல மை கடன் வாங்கி,அதை திருப்பி கொடுத்து வரவு செலவு முளையிலேயே தொடங்குது.

எழுத்தாளர் ஏடாகூடம் ஒரு புத்தகம் போட்டார்.”கடன் வாங்குவது எப்படி?”அதை கடனுக்குத்தான் அச்சடித்தார்.பிரஸ்காரர் பணம் கேட்டு வந்தபோது ஏடாகூடம் சொன்னார்”ஐயா இன்னொரு புத்தகம் எழுதியிருக்கேன்.அதையும் கடனுக்கு அச்சடிச்சு கொடுத்திங்கன்னா மொத்தமா திருப்பிடறேன்.அது என்னய்யா புதுசுன்னு கேட்டால் “வாங்கின கடனை திருப்பி தராமல் இருப்பது எப்படி”யாம்.



கடன் வாங்குறதுக்கு கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்.அவர்தானே பத்தலைன்னா பக்கத்துல கடன் வாங்கி கழிங்கன்னு சொல்லி கொடுத்தார்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா...

Monday, June 8, 2009

இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள் ...

ராஜஸ்தான்ல ரிக்‌ஷா ஓட்டுற ஒரு நாயி சவாரி முடிச்சு சப்பாத்தி சாப்பிடறச்சே யோசிக்கிறான்.என்ன பொழைப்புடா இது...நாம்ளூம் எப்ப முதலாளி ஆகறதுனு...ஒரு முடிவுக்கு வந்து வந்த விலைக்கு ரிக்‌ஷா மற்றும் தட்டு முட்டு சாமானையெல்லாம் வித்துட்டு கோதுமை கலர்ல முக்காடு போட்டுகிட்டு இருக்கிற பொஞ்சாதியையும் கூட்டி கிட்டு சென்னை சென்ட்ரல்ல வந்து இறங்கி நேர செளகார்பேட்டைக்கு போறான்.
அங்க அவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு.அவிங்க சொன்னதை கேட்டு சென்னை புறநகர் பகுதில ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சு வீட்டு வாசல்ல”மாணிக்சந்த் கட்டாரியா”பான்புரோக்கர் னு ஒரு போர்டு மாட்டறான்.தங்கத்துக்கு 3 வட்டி,வெள்ளி,பித்தளைக்கு 10 காசு வட்டி.சைடுல 1 கிராம் கவரிங் நகை.சிறு சேமிப்பு நகை சீட்டுனு விரிவு படுத்தறான்.சுற்று வட்டார ஜனங்களின் காது ,கழுத்து,மூக்கு எல்லாம் இந்தி படிக்க ஆரம்பிக்குது.அப்படியே சின்னதா ஒரு நகைகடையும் ஆரம்பிக்கிறான்..வாசல் மட்டும் சின்னதா இருக்கும்.உள்ளே பக்காவா டைல்ஸ் வச்சு வீடு பிரமாண்டமா இருக்கும்..ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் வாங்கிடறான் .அப்புறம் என்ன ராஜஸ்தான்ல ரிக்‌ஷா ஓட்டுன நாயி இப்ப “சேட்டு”ஆயிட்டான்.அவன் கொடுக்குற அடகு சீட்டுக்கு பத்து ரூபா ஸ்ஸ்டேசனரி” பீஸ் வேற.
நானும் என் அவசிய மற்றும் அனாவசிய தேவைகளுக்கு படியேறியதுண்டு..அதுல பாதி வட்டி கட்டாம் மூழ்கியும் போனதுண்டு.ஆனா இப்பல்லாம் நா என் தங்கங்களை இந்தி படிக்க அனுப்பறதில்ல..வங்கில வச்சு வணிகவியல் கத்து கொடுக்கிறேன்.

இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள் ...2


என்ன மச்சான்..கன்னமெல்லாம் டொக்கு விழுந்தாப்ல இருக்கு..இப்படி இருந்தா அட்டு பிகர் கூட மடியாது.
அதுக்கு என்ன பண்றது?
டெய்லி ஒரு 5000 போட்டு தாக்கு.சும்மா தக தகன்னு ஆயிடுவே..
சரி இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்..


மச்சான் கவிதா ஒர்க் அவுட் ஆயிட்டா.
அப்ப பார்ட்டி?
வெறும் பீர் கிக்கே இல்ல மச்சான்.ஒரு குவார்ட்டர் வாங்கி மிக்ஸ் பண்ணலாம்.

என்ன மச்சான்..வேலைக்கு போகல?
இல்லடா..நேத்து ரவி கல்யாணத்துல மப்பு ஜாஸ்தியாயிடுச்சு..தலைவலி.
முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்..வா ஒரு கட்டிங் போடுவோம்..

இப்படியாகவும் இளைய தலைமுறையினரிடம் ஆரம்பிக்கும் மது பழக்கம்..மெல்ல மெல்ல அக்டோபஸ் போல் தன் பிடியை இறுக்க தொடங்குகிறது.அந்தி சாய்ந்து இருள ஆரம்பித்தால் போதும்..மண்டைக்குள் மரங்கொத்தி போல் ஆல்ககால் அரிப்பெடுக்க ஆரம்பிக்கிறது.பணத்துக்காக,குடிக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு குடிகாரன் தள்ளப்படுகிறான்.சமீபகாலமாய் அதிகரித்து வரும் வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் பிடிபடும் நபர்களின் வயது 18/20 ஆகவே இருக்கிறது.உணர்வு ரீதியான பாலியல் பிரச்சனைகளுக்கும்,விவாக ரத்து மற்றும் கள்ள தொடர்பு,கொலை போன்றவைகளூக்கும் மதுவே அடிப்படையாகிறது.டாஸ்மாக் கடைகளில் கூடும் இளைய தலைமுறை கவலை அளிப்பதாகவே இருக்கிறது.தொழிலையும்,குடியையும் சரியாக அவர்களால் நிர்வகிக்க முடியாது என்பது இன்னும் கவலையை கூட்டுகிறது.நிச்சயம் அவர்களில் கணிசமானோர் எதிர்கால குற்றவாளிகளே
நிச்சயம் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் கூடும் அபாயம் வெகு தூரம் இல்லை.

ஏன் இப்படி குடிக்கிற?
என் பொண்டாட்டி என்னைய விட்டுட்டு போயிட்டா.
ஏன் போயிட்டா?
நா குடிக்கிறது அவளுக்கு பிடிக்கல...

Sunday, June 7, 2009

ஆகட்டும்டா தம்பி ராஜா

சின்னதா ஒரு பொழைப்பு ஆரம்பிச்சேன்.
நடையா நடந்தேன்..நாயா திரிஞ்சேன்..
நாலு காசு கையில சேர்த்தேன்.
சொந்தமா ஒரு சைக்கிள் வாங்குனேன்..

சைக்கிள்ல சுத்தாத இடமில்ல..
சைக்ளோன் மாதிரி ....பறந்தேன்..
ஒரு கட்டு ரூபா பார்த்ததும்
ஒரு மோட்டார் சைக்கிள் சொந்தமாச்சு.

அப்புறம் ராவில்ல..பகலில்ல..
நேரத்துக்கு சோறு இல்ல..
சரியா உறக்கமும் இல்ல.முடிவெல்லாம்
ஒரு கார் வாங்குறதிலயே தான்

வாங்கிட்டேன் ..புது கார்..புது வீடு எல்லாம்

இப்ப எல்லாம் முன்ன மாதிரி ஓட முடியல
மூச்சிரைக்குது..முழங்கால் குடையுது
டாக்டராண்டை போனேன்..
எல்லாம் கேட்டு ஒரு சீட்டுல இப்படி எழுதி கொடுத்தாரு..

"தினம் காலை,மாலை ஐந்து கிலோ மீட்டர் நடக்கவும்"



டில்லியில் சோனியாகாந்தி,ராகுல்காந்தி,வருண்காந்தி,மேனகாகாந்தி இருக்காங்க.இப்ப ஒரு புது காந்தி.நம்ம ஊருல இருந்து..யாரு?காந்தி அழகிரிதான்..மதுரை மச்சான் பதவி ஏற்கறதை அவிங்க குடும்பதோடு கண்டு களிச்சதை சில டிவிக்கள் குறிப்பாக காட்டினார்கள்."ம் தூக்கிடு..வெட்டிடு..எஸ் ஆயிடுங்க" இப்படிபட்ட வார்த்தைகளையே(ரன் பட அதுல் குல்கர்னி மாதிரி)கேட்டிருந்தவருக்கு "ஐ அழகிரி என்று அவர் ஆரம்பித்ததும்" ஐகளில்..அதாங்க கண்களில் ஆனந்த கண்ணீர்.என்ன எழவு பெட்ரோலியம் கேட்டாங்காளாம்..கொடுத்திருக்கலாம்.சும்மா கொளுத்தியிருப்பாருல்ல?

Thursday, June 4, 2009

தொடர் /இடர் பதிவு



1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

இயற்பெயர் மணிகண்டன்.சுருக்கமா மணி..பதிவு உலகத்தில் நுழைஞ்வுடனே தண்டோரா ந்னு வச்சுகிட்டேன்.தண்டமா ஒரு ஓரமா உக்கார்ந்தவனை கேபிள்,அக்னி,ஜாக்கி எல்லாம் சேர்ந்து தேரை இழுத்து தெருவில வுட்டாங்க

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வாரம் இரண்டு தடவை அழுவேன்..மப்புல.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டுமில்ல...யாருக்கும்மே பிடிக்காது.கோழி.குப்பைதொட்டி எல்லாம் ஞாபகம் வரும்.

4).பிடித்த மதிய உணவு என்ன?

வாழைப்பூ மசியல்,மிதிபாகற்காய் காரக்குழம்பு,கொள்ளுரசம்...அசைவத்துல நண்டு...
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கேள்வியே புரியல...சாதாரணமா நான் ரொம்ப பிரெண்ட்லிதான்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பம்பு செட்ல....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் எங்கு பார்க்கிறார்களோ அங்கு..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: சிரிப்பு வருது..
பிடிக்காத விஷயம் : சும்மா தொட்டதுக்கு எல்லாம் சிரிக்கிறதுதான்..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னைய போய் லவ் பண்ணாளே அது பிடிக்கும்?பிடிக்காதது வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு தடை போடறதுதான்

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா..அவங்க இங்க வரமுடியாது.நாந்தான் அங்க போகணும்(மேல)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அரை மனிதனாக ...சும்மா சொன்னேன் ..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

காற்றில் வரும் கீதமே..
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14.பிடித்த மணம்?
தமிழ்மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

பாவம் விட்டுடுவோம்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
???????????????????????????????

17. பிடித்த விளையாட்டு?
ரம்மி

18.கண்ணாடி அணிபவரா?
படிக்க மட்டும்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
கமலின் படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
கோபிகிருஷ்ணன்..கிரா வின் மறைவாய் சொன்ன கதைகள்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படமே இல்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
செக் ரெடி..பிடித்தது..பிடிக்காதது..இன்னுமா வேலை முடியல

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அந்தமான்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தண்ணி திறமை இருக்கு

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கழகம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் வீட்டு வெஸ்டர்ன் டாயிலட்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறா மாதிரிதான்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஸ்கூல் படிக்கும்போது செஞ்சதுதான்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
யாருக்கு வந்த வாழ்வு பற்றி கேக்கறிங்க